என் ரணங்கள்
என் குணங்கள்
என் நிபந்தனை
என் சிந்தனை
என் வேகம்
என் தாகம்
என் வழி
என் வலி
என் முனைப்பு
என் நினைப்பு
என் சொற்கள்
என் அமைதி
என் முகவரி
என் எழுத்து
யாவும் அறிந்தவன்
நீ
மறுக்கவில்லை...
என் ஆசை ஒன்றை
சொல்கிறேன்..
செய்வாயா?
உன் தோளில் சாய்ந்தபடி
இந்த உலகம் அறிய வேண்டும்..
உன் தோள் சாயும் போது
என் கண்ணீர் உதிர வேண்டும்..
உன் தோள் போதும்
என் துயரம் துடைத்தெறிய..
என் உயரம் எட்ட..
No comments:
Post a Comment
please post your comment