Wednesday, 3 September 2008

ஸ்பரிசம்-1

சாதாரணமா வீசுற காத்து கொஞ்சம்
இதமா வருடிப் போனா அதுக்கு பேரு தென்றல்...
அது எப்ப வரும்னு யாருக்குத் தெரியும்?
அது மாதிரிதான் காதலும்...

சாதாரணமா பழகிகிட்டு இருக்குற
யாருகிட்டயோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல
லேசா தலைதூக்க ஆரம்பிச்சுடும்
இந்த காதல்(தென்றல் மாதிரி)..

இதோட அறிகுறிகள் என்னனு நினைக்குறீங்க?
எப்படா பாக்கலாம்?
எப்படா பேச சந்தர்ப்பம் கிடைக்கும்?
எப்ப நாம பேசுறத கேக்க வைக்கிறது?
இப்படி ஏராளமான விஷயங்களை
நம்ம மனசு கேக்க ஆரம்பிச்சுடும்..இல்லனா
தேட ஆரம்பிச்சுடும்...

ஏதோ ஒரு தருணத்துல சும்மா
விடைபெறும் போது கூட..
கொஞ்ச தூரம் போயிட்டு திரும்பி பாத்தா
மனசு சிறகடிச்சு பறக்கும்..

உங்க மனசு சிறகடிச்ச சந்தர்ப்பத்த நீங்க
உணர்ந்திருக்கீங்களா?..
அந்த உணர்வு எல்லாரையும் தொட்டுட்டு
போயிருக்கும் அப்டிங்றதுல எந்த சந்தேகமுமில்லை...
அப்படித்தானே?

1 comment:

please post your comment