Wednesday, 10 September 2008

திருப்பம் வந்த நாள்

என் குழந்தை தன்மை அடக்கப்பட்ட நாள்
சத்தம் போடாமல் பேச அறிவுறுத்தப்பட்ட நாள்
குறும்புகள் தொலைக்கப்பட்ட நாள்
நண்பர்களுடனான நெருக்கம் துண்டிக்கப்பட்ட நாள்
உறவுகளுடனான தொடர்பு குறைந்த நாள்
உறக்கம் உரிய தொடங்கிய நாள்
கட்டுக்குள் பூட்டப்பட்ட நாள்
உடன் பிறந்தவர்களின் பாசம் உணர்ந்த நாள்
பழகிய சுற்றங்களை விட்டு விலகிய நாள்
முருங்கை மரமும் வேப்ப மரமும் என் பார்வையிலிருந்து மறைந்த நாள்
கற்றாழைச் செடியின் முட்கள் குத்தாத நாள்
புது உறவொன்று பூத்த நாள்
அது என் திருமண நாள்

No comments:

Post a Comment

please post your comment