விடுதலை வேண்டுமென
வாய் திறந்து கேட்காதே ..
அது காகிதத்தில் மடித்து
தரக்கூடிய பொருளல்ல ....
விடுதலை வேண்டுமென
ஆள் அனுப்பி கோரிக்கை வைக்காதே ...
அது மூன்றாம் நபர் மூலம்
முடிக்க வேண்டிய பிரச்சினை அல்ல..
விடுதலை வேண்டுமெனில்
உன் நுரையீரலுக்காக
உன் மூக்கே சுவாசிக்கட்டும்..
உன் இதயத்துக்கு
உன் நரம்புகளே இரத்தத்தை
எடுத்து செல்லட்டும்..
காத்திருக்கிறாய்
பல நூற்றாண்டுகளாய்
காத்திருந்து காத்திருந்து
உன் காலில் பூட்டப்பட்ட விலங்குகள்
கழுத்து வரை நீண்டிருக்கிறது..
இன்னும் இறுகுவதற்குள்
உன் கைகளே அதை தகர்க்கட்டும்..
No comments:
Post a Comment
please post your comment