அது ஒரு மழைக்காலம்
அவளோடு சைக்கிளில்
வீடு வீடாக கணக்கெடுக்க
பயணப்பட்டு பகிர்ந்து கொண்ட
விஷயங்கள் பலப்பல ...
தூறல் ஆரம்பித்த போதில்
சைக்கிளை வேகமாக
அழுத்திய அந்த கணங்களில்
மழை பிடித்து கொண்டது...
சொட்ட சொட்ட மழையை ரசித்தது
அதுவே முதன்முறை..
கடைசி முறையாகவும் அமையும் என்று
அப்போது நினைக்கவில்லை ...
என் திருமணத்திற்கு பிறகு
இரவொன்றில் பிடித்த மழை
விடாது சிணுங்கி ...
ஓட்டைப் பிரித்து உள்ளே
எட்டி பார்க்க ஆரம்பித்தது..
-----------தொடரும்
No comments:
Post a Comment
please post your comment