அவனென்னை
அதிகமாய் நேசித்தான்..
சில சமயம்
நானும் கூட...
நிறைய முத்தங்களைப்
பரிசளித்தான்
சில நேரங்களில்
ஒன்றிரண்டு நானும்...
பிரிந்து போவதில்
மும்முரமாய் இருக்கிறான்..
சில போதில்
எனக்கும்...
உறவிற்கும்
பிரிவிற்குமான
ஊடாடலை
எப்படி சொல்ல?
வரிகளால்
வலிகளைச் சொல்ல முடியாது...
No comments:
Post a Comment
please post your comment