Tuesday, 24 March 2009

இசைக்கும் வீணை..

இசைப்பதை நிறுத்திய கலைஞனும்
இசைக்க மறுக்கிற வீணையும்..
இயற்கையின் நிழலில் ...

மீட்டப்படாத வீணையில்
சில நரம்புகளை
ஒழுங்கு படுத்துகிறான் ..

வீணை
அபரிமிதமான இசையை
வெளிப்படுத்தி
கலைஞனுக்குள்ளிருந்த இன்னொரு
பரிமாணத்தை
அறிமுகப்படுத்த ..

அவ்விசையில் மருகும்
அவன்
மீண்டும் மீண்டும் வாசிக்கிறான்..
ஒரே ராகத்தை..
வீணை ஒவ்வொருமுறையும்
புதிய பாவத்தை..

இருள் விலகிய பின்னும்
இசைத்தபடி அவன்..
இசைந்தபடி வீணை...

No comments:

Post a Comment

please post your comment