சூரிய ஒலி எட்டிப்பார்க்க
வாய்ப்பில்லா சிற்றறைக்குள்
எனது புதிய வாசம்..
அறையெங்கும் அடுக்கபட்டிருந்தது
உன் ஆளுமை..
தேடல் மட்டுமே இயக்கத்தில்..
உணர்வுகள்
ஓடியாடி விளையாட
செய்வதற்கு ஒன்ற்மற்றவர்களாய்..
உருமாற்றியிருந்தது நிகழ்வுகள்...
இயல்புக்கு மாறான
இமைகளுக்கு நேரான
இதயத்திற்கு கூரான
ஒன்றை கண்டெடுத்தேன்..
நீயறியாது பத்திரப்படுத்தி
வெளியேறுகிறேன்..
நீயுமறிந்த ஒன்றை...
'கனவுகள் மெய்ப்பட'
வாழ்த்துகிற தேவதைகளுக்காக
மட்டுமல்ல...
எந்நொடியும் சிந்தித்தபடியிருக்கிறேன்...
நாமிணைந்து பணியாற்றி..
பரபரப்பாகும் கனவோன்றையும்..
பரவசமாகும் இரவொன்றையும்..
No comments:
Post a Comment
please post your comment