Saturday, 27 June 2009

சொந்தமாக முடியாத உறவுதான் அது..

அந்த பறவைக்கும்
எனக்குமிருக்கும் புரிதலை
யாரால் புரிய முடியும்?

தன்னுணவினை
பகிரவும்
தன்னுணர்வினை
வெளிப்படுத்தவும்
யாரிடமிருந்து கற்றுக் கொண்டது?
மனிதனைப் போன்றவனிடம்
நிச்சயமாய் இருக்காது..

வெளிசெல்லுகையில்
நிழலாகவும்
உறங்கச் செல்கையில்
கட்டிலின் கீழாகவும்
எப்போதும் என்னை
வட்டமிடும் அந்த பறவை
சொந்தமாக முடியாத
உறவுதான்...

No comments:

Post a Comment

please post your comment