அன்று
நீ தேடி வரும் போதெல்லாம்
நிமிர்ந்து பார்க்க நேரமின்றி தவித்தேன்..
இன்று
நான் காத்திருக்கிறேன்
நீ வருவாயென
ஆனால்
உன் சுவடுகளையும்
சுருட்டிக் கொண்டு எங்கே போனாயென
தெரியாமல் துடிக்கிறேன்..
ஒரே ஒரு வாய்ப்பு கொடு
மீண்டும் உன்னை ஒரு போதும்
தவற விட மாட்டேன்
என் நினைவிருக்கும் வரை!
No comments:
Post a Comment
please post your comment