Friday, 1 August 2008

நினைவுகள்

மலைக்கோட்டை உச்சி
மருத்துவமனை வளாகம்
பேருந்திற்கான காத்திருப்பு
பெருமழைக்கு ஒதுங்கிய மரம்
இன்னும் இன்னுமாய் ....

நாம் சென்ற இடங்களைக்
காணும் போது
நினைவோட்டிற்குள்
ஐம்புலன்களும்
சுருங்கிக் கொள்கின்றன..
திடீர் வெளிச்சத்தில்
தானாய் கண்கள்
சுருங்குவது போல..

இப்படியாய்
விளம்பரங்களுக்கிடையே
வந்து செல்லும்
நிகழ்ச்சிகளைப் போல
அன்றாட பணிகளினூடே
வந்து செல்கின்றன
உன் நினைவுகள்..

No comments:

Post a Comment

please post your comment