Friday, 1 August 2008

பிரிவு

சில நாட்களுக்கு
முன்பு வரை
என் நினைவுகளில்
கீதமிசைத்த பூபாளம்
இப்பொழுது முகாரியாய்....
இருட்டிலிருந்து
விடுதலையளித்தவளே
பாதாளத்திற்கு
பயணப்பட வைக்கிறாய்...

நீதிமன்றத்தில்
ஒத்திவைக்கப்படும்
வழக்கைப்போல்
மரண மன்றத்தில்
உன் பயணமும்
ஒத்தி வைக்கப்பட்டு...
யுரேனியத்தைப்
பிரயோகிக்கிறது
உன் பிரிவு!

No comments:

Post a Comment

please post your comment