Tuesday, 26 August 2008

சிந்தனைத் துளிகள்

  1. எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி.அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம்.
  2. அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று.அது எப்போது எப்படி தோன்றுகிறது என்பதை நாம் அறிய முடியாது.
  3. செய்யத் தெரிந்தவன் போதிக்கிறான்
    செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.
  4. உலகத்திற்கு வேண்டுமானால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்
    ஆனால் யாராவது ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம்.
  5. மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவில் இருந்துதான் பிறக்கின்றன.
  6. தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப்
    பெரிய பலவீனம்.
  7. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.
  8. எவர் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ அவரால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.
  9. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
  10. பகலைக் காட்டிலும் இரவுத்தூக்கம் அதிகம்-கனவு காண்பவர்களுக்கு
    இரவுத்தூக்கத்தைக் காட்டிலும் பகல் நேரம் அதிகம்-இலட்சியக் கனவு
    மெய்ப்பட வேண்டுமென எண்ணுபவர்களுக்கு.
  11. உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக்கூடாது. அது நம்மை தொடர்ந்து வர வேண்டும்.

No comments:

Post a Comment

please post your comment