Wednesday, 27 August 2008

காத்திருப்பு

உனக்காக நானும்
எனக்காக நீயும்
காத்திருந்த பொழுதுகள்
சுகமானவை ...

மழைநாளில் உன்னொடு
நனைந்த நினைவுகள்
இதமானவை...

ஒரு மத்திய நேரத்தில்
பேசப்பட்ட அந்த வார்த்தைகள்
மிதமானவை ...

உன்னாலும் என்னாலும்
சந்திக்க முடியாத நொடிகள்
வலியானவை ....

No comments:

Post a Comment

please post your comment