Wednesday, 3 September 2008

ஸ்பரிசம்-3

உடலுக்கு வாசல் கண்கள்
காதலுக்கு வாசலும் கண்கள்தான்..

வார்த்தை வெளிப்படுத்த முடியாத விஷயங்களை
கண்கள் உணர்த்திவிடும்.அதே போல
வார்த்தைகள் கூட புரியவைக்க முடியாத
பல விஷயங்களை மெளனம் சொல்லிடும்.

மெளனம் வலிமையானது.. அதே சமயம் எளிமையானது
சில நேரம் கொடுமையானது.. சில நேரம் இனிமையானது..

மெளனத்தோட பேச ஒரு சிலருக்குத்தான் தெரியும்
மெளனத்தின் அசைவுகளை வைத்தே
வலிகளையும் சந்தோஷத்தையும் உணரமுடியும்...

நீங்க எப்போதாவது மெளனமா இருந்திருக்கீங்களா?
அப்போது அந்த மெளனத்தை யாராவது புரிந்து கொண்டார்களா?

இல்லையென்றால் நீங்க யாரோட
மெளனத்தையாவது புரிந்துகொள்ள முயன்றதுண்டா?
என்ன மெளனமாக யோசனை செய்கிறீர்களா?
பார்வையால் மட்டுமல்ல மெளனத்தாலும் பேசிக்கலாம்...

No comments:

Post a Comment

please post your comment