சோகத்தை சொல்லிவிட்டால்
மன வேகமது மட்டுப்படும்...
அந்த சோகத்தை சொல்லுதற்கும்
சொந்தமாய் ஒரு நட்பு வேண்டும்...
நட்பே..
சோகங்கள் எல்லாம் சுமைகளல்ல
சுகங்கள் சிலவும் தாங்கக்கூடியதல்ல
சோகத்திற்கும் சுகத்திற்கும் உள்ள உறவு
கடலுக்கும் கரைக்குமான உறவு
இரண்டும் சந்திக்கும் புள்ளியில்தான்
அலைபாய்கிறது
மனமும்..அலையும்..
No comments:
Post a Comment
please post your comment