Wednesday, 3 September 2008

கேள்வியும் பதிலும்

கேள்விகள் கேட்கத்தான்
காத்திருக்கிறது
எல்லா நாவுகளும்...

பதில்களை கேட்பதற்கு
எந்த காதுகளும்
தயாராயிருப்பதில்லை...

பதிலுக்கு காத்திருக்காத
கேள்விகளால்
யாதொரு பயனுமில்லை...

கேள்விகளை உள்வாங்காத
பதில்களாலும் கூட...

No comments:

Post a Comment

please post your comment