Friday, 5 September 2008

ஸ்பரிசம்-5

எங்கும் பேச்சு எதிலும் பேச்சு என்று சொல்லும் அளவுக்கு
பேச்சுதான் உலகத்தில் பல விஷயங்களை மாற்றியிருக்கிறது.
நாம் பேசும் பேச்சு மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல்
இருக்க வேண்டியது மிக முக்கியம்.

அதிலும் கணவன் மனைவியிடையே கேட்கவே வேண்டாம்.
அவர்கள் பேச்சு இதமாக,பதமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
அதிலும் காதோடு காதாக பேசுகிற விஷயம் இருக்கிறதே அது சுகமானது..இரகசியமானது..

என்னதான் கணவன் மனைவியாக இருந்தாலும்
கணவனுக்கு மனைவிதான் முதல் குழந்தை..
மனைவிக்கு கணவன்தான் முதல் குழந்தை..

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளைதான்..நான்
அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்..
உனக்கேற்ர துணையாக எனை மாற்ற வா-என்று
கேட்கும் மனது இருக்கிறதே அது தாய்மையின் உச்சம்..
காதோடு வருடி மனதோடு பேசும் ஸ்பரிசம் தொடரும்

No comments:

Post a Comment

please post your comment