Friday, 5 September 2008

ஸ்பரிசம்-7


ஒரு நிகழ்வை உங்களிடம் சொல்ல பிரியப்படுகிறேன்.புதிதாய் திருமணமான தம்பதிகள் திருமணம் முடிந்து மூன்று நாட்கள்தான் ஆகிறது.

கணவன் சொல்கிறான்..மூன்றாவது இரவில்.. ஒரு முக்கியமான
அலுவலக வேலை காரணமாக வெளியூர் போக வேண்டும் என்று..
அந்த மூன்று நாட்களில் மனைவியின் மனதில் தோன்றும் அந்த எண்ண்ம் இருக்கிறதே..அந்த உணர்வு இருக்கிறதே..அதை எப்படி ஒரு பெண் சொல்கிறாள் தெரியுமா?..


"தொட்டுவிட்டு நீயும் சொல்ல
மொட்டு விட்ட ஆசைகளை
கட்டுக்குள்ளே வைக்க நானும் கஷ்டப்படுகிறேன்..


வேண்டாம் என்று வாயும் சொல்ல
வேண்டுமென்று உள்ளம் ஏங்க
தீண்டும் இன்பம் வேண்டித்தானே இஷ்டப்படுகிறேன்..


விட்டகுறை தொட்டகுறை வட்டமிட்டு சுத்திவர
விட்டுவிட்டு போனதென்ன ஆசை நிலவே..
இன்னும் என்ன தாமதமோ
உண்மை யாவும் சொல்லிடவே
உச்சிக்குள்ளே பச்சைக்கிளி கூச்சலிடுதே.."
என்று தன் ஸ்பரிச உணர்வுகளைக் கொட்டுகிறாள்

No comments:

Post a Comment

please post your comment