நீ
உதிர்த்த
சொற்களை
முதலில் கோர்த்துப்
பார்த்துத் தோற்றுப் போனேன்...
மீண்டும் மீண்டும்
முயற்சித்ததில்
சில சொற்கள் விடுபட
மற்றதெல்லாம்
கோர்த்து
நீர் தெளித்து
மூடி வைத்து
மறுநாள் பிரித்தேன்...
ஒவ்வொன்றும்
இரட்டை வாக்கியங்களை
பிரசவித்தது...
உன்
சொற்கள் வீரிய விதைகள்..
என்
மனம் தாங்கும் நிலம்..
No comments:
Post a Comment
please post your comment