Friday, 13 February 2009

காதலர் தினம்-ஸ்பரிசம்4

காதல் வந்ததும் செயல்பாடுகள் மாறும்..
காதல் ஒரு மனிதனை அணுவேனும் முன்னேற்றனுமே ஒழிய
இருக்கும் நிலையிலிருந்து கீழே தள்ளி விடக்ககூடாது..

ஈர்ப்பில் ஆரம்பிப்பதுதான் காதல்.. ஆனால் காதல் ஈர்ப்பாகவே இருக்க சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்..இருவருக்குமிடையே காற்றை தவிர வேறு எதுவும் சுலபமாக நுழைய அனுமதிக்கக் கூடாது..முக்கியமாக மூன்றாம் நபரின் தலையீடு இருக்கவே கூடாது..ஆயிரம் பேர் ஆயிரம் விஷயங்களை சொல்லும் போதும் நம் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய துணிவு வேண்டும்...

காதல் போல எளிமையான விஷயம் எதுவும் கிடையாது..
காதல் போல கடினமான விஷயமும் இல்லை..
அதனால் சிந்தித்து செயல் படுங்கள்..செயல்பட்டுவிட்டு சிந்திக்காதீர்கள்...
காதல் எதிர்பார்ப்பில் தொலைகிறது...காதல் சந்தேகத்தில் கலைகிறது..
காதல் புரிதலில் வாழ்கிறது..காதல் புன்னைகையில் பிரசவமாகிறது..

No comments:

Post a Comment

please post your comment