Friday, 13 February 2009

காதலர் தினம் - ஸ்பரிசம்5

காதலுக்கு ஆணை இட முடியாது.. ஆனால் காதல் ஆணையிடும்..
காதலுக்கு அணை போட முடியாது...ஆனால் காதல் அணை போடும்..

எல்லா காதலும் நம்பிக்கையில்தான் கட்டப்படுகிறது..அல்லது நம்பிக்கையில் கட்டப்படுவதுதான் காதல்..எத்தனை காதலர்கள் காதலுக்கு உண்மையாய் இருக்கிறார்கள்.?.இந்த காலத்தில் அரிதுதான் ...உண்மையாய் இருக்கும் காதலர்கள் காதலுக்கு மரியாதை செய்பவர்கள்.. காதலுக்கு மரியாதை செய்பவர்களை காதலும் மரியாதை செய்யும்..

உணர்வுகள் எல்லாமே வெளிப்படுத்தக்கூடியதுதான்..ஆனால் காதல் உணர்வு மட்டும் கவனமாக கையாளப் பட வேண்டும்.. அது ஒரு கண்ணாடி மாதிரி.. எப்போதும் பிரதிபலிக்கும்.. கூடவே அதை புதுப்பித்துக் கொண்டே இருந்தால் நம்மை அது புதுப்பிக்கும்.. நம்மை எல்லா விதத்திலும் அழகாக்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு.. உள்ளத்திலும் உடலிலும் உற்சாகமடைய செய்யும் காதல்...
காதல் எனும் வார்த்தையே வசீகரமானது..காதலும் வசீகரமானது..

No comments:

Post a Comment

please post your comment