சற்று முன்
எடுத்த இம்முடிவு
குறித்து எனக்குள்
எந்த சலனங்களும் இல்லை..
முடியப் போகும்
ஒரு பயணம் குறித்தோ
துவங்க இருக்கும்
புதிய பயணம் குறித்தோ
எவ்வித ஆற்றாமையுமில்லை...
விழப் போகும்
ஒரு மர வேரின் பெருத்த
ஓலமும்...
விதையொன்றின்
முளைவிடுதலில்
துளிர்த்த நிசப்தமும்...
உச்சி வெயிலில்
காலுக்கடியில்
விழும் நிழலை யொத்தது...
No comments:
Post a Comment
please post your comment