முத்துக்கு பெயர் பெற்றது
தூத்துக்குடி...
தூத்துக்குடியே பெற்றெடுத்த
முத்து நீ...
உன் தீக்குளிப்பை
ஈனர்கள் சிலர்
ஏளனமாய் பேசலாம்..
அது எப்போதும்
நடப்பதுதானே...
உன் தியாகம்
ஏராளமானோரை
உசுப்பி விட்டிருக்கிறது...
இருட்டை கொளுத்திப்
போட்ட வெளிச்சமே...
பல முகத்திரைகளை
கிழித்தெறிந்த தீவி(வீ)ரனே
வரலாற்று நாயகன் நீ...
வரலாற்றை புரட்டும் நாயகன் நீ...
உன் வெளிச்சத்தில்
பலரின் முகங்களும்
வெட்ட வெளிச்சமாயின..
நீ இட்ட தீ
புகைகிறது உலகமெங்கும்...
இனத்தீயாய்..
No comments:
Post a Comment
please post your comment