Monday, 2 March 2009

நண்பனே .... அந்த நாள் நண்பனே..

எனது ஒருநாளில்
சில பல நிமிடங்களை ...
பூக்கச் செய்தவன்...
ஒவ்வொரு நொடியையும்..
முடமாக்கி போய்விட்டான்..

புகையை கூட என்
தூக்கி எறிந்தவன்..
என் புன்னகையையும்
மென்று தின்றுவிட்டான்..

என் கண்கள் கலங்கினாலே
ஆயிரம் காரணங்கள் கேட்கிறவன்...
தாரை தாரையாய் வழியும்
கண்ணீருக்குள் நீச்சலடிக்கிறான்..

நிலவொளியில் என்
நிழலையும் கவனித்தவன்...
இன்றெனது நினைவின்
நிழலுக்குள் கூட ஒதுங்க மறுக்கிறான்...

எது நடந்தாலும்..
நண்பனே..
நீ நண்பன்தான்..எனக்கு..

No comments:

Post a Comment

please post your comment