ஒப்பனைக்கு
ஒப்புக் கொடுக்க
ஒருபோதுமெனக்கு சம்மதமில்லை...
ஒப்பிட்டு
உயர்வு தாழ்வு பேச
உள்ளத்தில் அனுமதியில்லை...
தேடலில்
தொலைந்து போகுமென்னை
தேடலே மீட்டெடுக்கும்..
ஏதுமற்ற
ஏளனங்களை
ஏறிட்டும் பார்ப்பதில்லை..
ஒன்றுமற்ற
உரையாடல்களை
ஒருகணமும் விரும்புவதில்லை..
செதுக்கி
மேம்படுத்த உதவாதவை..
உண்மையான விமர்சனங்களில்லை..
ஒதுக்கப்படும் ஒன்றே
ஒத்துக் கொள்ளப்படும்
இதற்கு காலம் பதில் சொல்லும்..
முளைவிடும் போதே
இலை கிள்ளும் விரல்கள்
நீருற்ற போவதில்லை...
வேர்களின் வளர்ச்சிக்கு...
களையெடு உள்ளே...
முளைவிடு வெளியே...
தலைஎடுப்பாய் தரணிபோற்ற.....
No comments:
Post a Comment
please post your comment