Monday, 23 March 2009

பறை

இதயத்தின் திரை
கிழித்து
ஊடுருவிய
பறையின் அதிர்வு
இன்னும் நின்ற பாடில்லை...

தலைமுறை கோபங்களை
தப்பில் தாளமாக்கி
உட்செவியினை உசுப்பிவிடுகிறது..

ஐம்புலன்களையும் அதிர வைக்க
ஐம்புலன்களும் ஆடுகிற காட்சி
விடுதலையின் ஓலத்தின் நீட்சி...

காற்றினை கட்டுக்குள் வைத்து
இசைக்கப்படும் அவ்விசை
வீரியத்தின் வெளிப்பாடு..

இன்னும் இன்னும் கிழிக்கட்டும்..
அதிகாரங்களையும்
அக்கிரமங்களையும்
தன்னகத்தே கொண்ட
செவிப்பறைகளை
இந்த பறை...

No comments:

Post a Comment

please post your comment