Monday, 18 April 2011

விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்

இப்படிக்கு அன்புள்ள அம்மா - கலாநிதி ஜீவகுமாரன் (டெனிஷ் மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை வடிவிலான நாவல்.. )

முகங்கள் - தொகுப்பு: ஜீவகுமாரன்(ஐம்பது எழுத்தாளர்களின் புலம்பெயர்வு பற்றிய சிறுகதைகள் )

நீ மிதமாக நான் மிகையாக - இவள் பாரதி (கவிதைகள் )

நான் சொல்வதெல்லாம் - இவள் பாரதி (கவிதைகள் )

கடவுளின் நிலம் - இளைய அப்துல்லா (கட்டுரைகள் )

தேடலே வாழ்க்கையாய் - என்.செல்வராஜா (கட்டுரைகள் )

நாள் : 01-05-2011

நேரம் : காலை 10 மணி

இடம் : கன்னிமாரா நூலகம், சென்னை

அனைவரும் வருக..

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்க..

devathaibharathi@gmail.com

Sunday, 17 April 2011

அழகின் நிழல் ஆபத்து

 55
111 
333
நன்றி : பெண்ணே நீ மாத இதழ்

பிரியங்களின் பூந்தொட்டி

  11 penne ne 2-2
நன்றி - பெண்ணே நீ மாத இதழ்

Thursday, 7 April 2011

 பஞ்ச பூதங்களால் வஞ்சிக்கப்பட்ட ஜப்பான்


ஸ்பெக்ட்ரம் ஊழல், தேர்தல் கால கூட்டணி குழப்பங்கள், கிரிக்கெட் ஜூரம் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு முன் நிற்கிறது ஜப்பானில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கமும், சுனாமியும். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி இவற்றின் பாதிப்பு இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பாதிப்பாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இந்த சுனாமி உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது என்பது உண்மையே.
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் இந்தோனேஷியா, சிலி, பெரு, மெக்ஸிகோ, பிஜி, ஹவாய், தாய்லாந்து, தைவான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ரஷ்யா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும், முன்னறிவிப்பும் விடப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவிலும், ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கம் 8.9 ரிக்டர் அளவிலும் பதிவாகியது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் நான்கு ரயில்கள் காணாமல் போயிருக்கின்றன. சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு சென்ற சுனாமி துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3000 கார்களையும் அடித்துச் சென்றது. பெரும் பொருட்சேதத்தையும் ,உயிர்சேதத்தையும் நிகழ்த்தியிருக்கிறது ஜப்பானின் நிலநடுக்கம்.
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கி.மு.1177 இல் நேர்ந்துள்ள ஓர் பூகம்பம் சீன வரலாறுகளில் பதிவாகியுள்ளது! ஐரோப்பாவின் வரலாற்றில் பண்டைய நிலநடுக்கம் ஒன்று கி.மு.580 ஆண்டில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது! 1556 ஆம் ஆண்டில் சைனாவின் ஷான்ஸி மாநிலத்தில் நேர்ந்த மாபெரும் பயங்கரப் பூகம்பத்தில் 830,000 மக்கள் மாண்டதாக அறிய வருகிறது! பசிபிக் பெருங்கடலில் 1900 - 2001 வரை சுமார் 800 தடவை சுனாமி ஏற்பட்டுள்ளது.
உலகில் 100,000 நபர்களுக்கு மேல் மரணமடைந்த ஒன்பது பூகம்பங்களில் ஆறு நிலநடுக்கம் சைனாவில், இரண்டு ஜப்பானில், ஒன்று இந்தியாவில் நிகழ்ந்தவை! மக்கள் திணிவு மிக்க, மனித எண்ணிக்கை உச்சமான சீன தேசத்தில்தான் அதிகளவில் பூகம்பத்தால் மாண்டு போயுள்ளார்கள். நிலநடுக்கச் சக்தி யூனிட் அளவுக்கு மடிந்த மக்களின் எண்ணிக்கையை ஒப்பு நோக்கின், மத்தியதரைப் பிரதேச நிலப்பரப்புக்கு அடுத்தபடி இடம் பெறுபவை: ஈரான், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இந்தியா, மத்திய ஆசியா, சைனா, டெய்வான், ஜப்பான், தென்னமெரிக்கா ஆகிய நாடுகள்.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் நியுசிலாந்த், சீனா, ஜப்பான், கலிபோர்னியா, இந்தோனிஷியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது மக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி சில நிமிடங்கள் வந்து போகிற நிலநடுக்கம் பெருத்த பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் விளைவித்துவிடுகிறது. பூமியின் எங்கோ ஒரு பகுதியில் நிகழும் இயற்கை பேரழிவுகளான நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, கனத்த மழை மற்றும் செயற்கை பேரழிவுகளான இனஒழிப்பு, அணுகுண்டு சோதனை, இராணுவத் தாக்குதல், பொருளாதாரத் தடை ஆகியவை உலகையே மிரட்டுவது மட்டுமின்றி பாதிப்புக்குள்ளாக்கவும் செய்கின்றன.
ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் இயற்கை பேரழிவானது உலக நாடுகளின் பொருளாதரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜப்பானின் பேரழிவு பங்குசந்தைகளில் மிகப் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் வளமிக்க நாடுகளான லிபியா, எகிப்து, சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை போதாதென்று, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியும் சேர்ந்து கொண்டு ஆசிய பங்குச்சந்தைகளை ஒருகை பார்த்திருக்கின்றன. இதன் பாதிப்பு இந்திய பங்குச்சந்தைகளிலும் ‌எதிரொலித்து வருகிறது.
எட்டு பேர் குழு எனப் பொருள் தரும் ஜி8 (G8 - Group of Eight) என்பது உலகில் அதிக ஆலைத் தொழில் முன்னேற்றம் அடைந்த குடியரசு நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும். ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள், ஐக்கிய இராச்சியம், (1975 வரை ஜி6), கனடா (1976 வரை ஜி7) மற்றும் ரஷ்யா (எல்லா நடப்புகளிலும் பங்கு கொள்வதில்லை) ஆகியவை இந்தக் குழுவில் உள்ள நாடுகளாகும். ஆண்டு தோறும் இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் அனைத்துலக அதிகாரிகள் பங்கு கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் உச்சி மாநாடுகள் ஜி8-இன் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சப்பானின் பாதி ஆற்றல் தேவை பெட்ரோலியத்தின் மூலமும் ஐந்தில் ஒரு பகுதி நிலக்கரி மூலமும் 14% இயற்கைவளி மூலமும் பெறப்படுகிறது. அணு மின்சாரம் நாட்டின் கால் பங்கு மின்தேவையை ஈடுசெய்கிறது. சப்பானில் சாலைப்போக்குவரத்து நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. 1.2 மில்லியன் தொலைவிற்கான நல்ல சாலைகள் இடப்பட்டுள்ளன. சுங்கச்சாலைகளும் பயன்பாட்டில் உள்ளன. 12-க்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிறுவனங்கள் உள்ளூர், வெளியூர் தொடர்வண்டி வசதிகளை அளிக்கின்றன. பெருநகரங்களை சின்கான்சென் (புல்லட் ரயில்) ரயில்கள் இணைக்கின்றன. சப்பானிய ரயில்கள் நேரந்தவறாமைக்குப் பெயர்பெற்றவை.
பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஜப்பான் சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுகிறது. டோக்கியவை தலைநகராக கொண்ட ஜப்பான் 6800 தீவுகளைக் கொண்டது. இதில் ஹொக்கைடோ, ஹொன்ஷு, ஷிகொக்கு, கியூஷு ஆகியவை நான்கு முக்கிய தீவுகளாகும். சப்பானில் 173 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நகரிடைப் போக்குவரத்திற்கு வானூர்தி விரும்பப்படுகிறது. ஆசியாவின் சந்தடி மிக்க வானூர்தி நிலையமான அனீதா நிலையம் சப்பானிலேயே உள்ளது. யோகோகாமா, நகோயா துறைமுகங்கள் ஆகியன பெரிய துறைமுகங்கள் ஆகும்.
இப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சென்டாய் நகரமே மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களில் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஜப்பானில் நிலநடுக்கம் வர இருக்கிறது என்பது தெரிந்திருந்தும் இவ்வளவு பெரிய பாதிப்பு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அத்துடன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி என்பதால் அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள்தான். ஆனால் இந்தமுறை நிலநடுக்கத்துடன் சுனாமியும், தொடர் நில அதிர்வுகளும் சேர்ந்து கொண்டதால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 13000 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 8199 ஆகவும் உயர்ந்திருக்கும் வேளையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிகிறது.
எப்போது நிலநடுக்கம் வரும் என்று கணித்துச் சொல்வதற்கு என தனியாக இணையதளமும் இருக்கிறது. இது உலக நாடுகளில் எந்தெந்த நாட்களில் எவ்வளவு ரிக்டர் அளவுகோலில் வந்திருக்கிறது? எங்கு வர வாய்ப்பிருக்கிறது என்பதைச் சொல்கிறது. கடந்த வாரத்தில், கடந்த நாட்களில், கடந்த ஒரு மணி நேரத்தில் என்று உலகநாடுகளில் வந்த சிறு நிலஅதிர்வையும் பதிவு செய்கிறது. இந்த இணையதளத்தில் எந்த நாட்டையும் குறிப்பிட்டு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். http://earthquake.usgs.gov/
இந்நிலநடுக்கத்தால் அணுஉலைகள் அதிகமுள்ள ஜப்பானுக்கு மேலும் பல புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன. புகுஷிமா அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் நிலநடுக்கம் மற்றும் சுனாமியிலிருந்து தப்பியவர்களை சிரமத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தொடர்ந்து அணு உலைகள் வெடித்ததில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியிருக்கிறது ஜப்பானிய அரசு. அணு உலைகளை குளிரூட்டும் பணி தொய்வடந்ததை அடுத்து அணு உலைகளை புதைக்கலாம என்ற கோணத்திலும் ஜப்பான் யோசித்து வருகிறது. இந்த கதிர்வீச்சின் தாக்கம் அமெரிக்காவிலும் இருப்பதாக தெரிகிறது. அணுஉலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டிருப்பதால் யுரேனியம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி யுரேனியம் வேண்டுபவர்கள் தங்களிடம் கேட்கலாம் என்று கூறியிருக்கிறது.
இலங்கையை கதிர்வீச்சு தாக்கும் அபாயம் இல்லை என்ற செய்தி நிம்மதி அளித்தாலும் ஆகப் பெரும் கவலை இலங்கைக்கு இருக்கிறது என்பதே உண்மை. ஏனெனில் இலங்கைக்கு உதவும் நாடுகளில் ஜப்பான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இலங்கையிடம் இருந்து ஜப்பான் 8.3 மில்லியன் தேயிலையை சென்ற வருடம் வாங்கியிருந்தது. இந்த வருடம் ஜப்பானின் நிலைமை இறக்குமதியைக் கேள்விக்குள்ளக்கியிருக்கிறது. இந்த ஆண்டு இலங்கை அரசு ஜப்பானிலிருந்து ஒரு லட்சம் சுற்றுலாப்பயணிகளை கொண்டு வர திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வந்த நிலையில் ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.
அங்கு இருக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பத் தயாராகி வருகின்றனர். ஜப்பான் பிரதமர் நேட்டோகான் மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசி வருகிறார். அவரின் செயல்பாடுகள் அரசு இணையத்தளமானhttp://www.kantei.go.ஜப் மூலம் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனுக்கதிர்வீச்சின் அபாயம் இருக்கலாம் என்று ஜப்பான் பொருட்களை இறக்குமதி செய்ய மற்ற நாடுகள் யோசித்து வருகின்றன. இதனால் தொடர்ந்து ஜப்பானின் நிலையை உடனடியாக அதன் தாக்கத்திலிருந்து பொருளாதார ரீதியில் மீட்க முடியாத சூழல் ஒருபுறமிருப்பினும் உலக நாடுகள் பொருளாதார ரீதியில் உதவ முன் வந்திருக்கின்றன.
1945க்குப் பிறகு ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களும் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான பின் சில வருடங்களில் பொருளாதாரத்தில் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்ட ஜப்பான் உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஆனால் இந்த ஆண்டு நிகழ்ந்த இயற்கைப் பேரழிவானது அவர்களின் ஏற்றுமதியையும், இறக்குமதியையும், உற்பத்தியையும் கடுமையாக பாத்திருக்கின்றது, மக்கள் தொகையில் உலகின் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஜப்பானில் ஒருபகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் மற்ற பகுதி மக்கள் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள். எனவே ஜப்பான் மூலம் சுற்றுலாவில் சம்பாதிக்கும் நாடுகளுக்கும் பொருளாதார நெருக்கடி உண்டாகும். ஜப்பானில் 12 கோடிக்கும் மேலான மக்கள் வசித்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து தவித்து வருகின்றனர்.
நில நடுக்கம் மற்றும் சுனாமியால் அதிகளவு உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதன்விளைவாக அணு உலைகள் வெடித்தத்தில் பெரு நெருப்பு மூண்டு அடித்துச் செல்லும் தண்ணீரிலும் எரிந்துகொண்டே இருந்தது. அனுக்கதிர்வீச்சின் அபாயத்தை உண்டாக்கியதில் காற்றும் மாசுபட்டிருக்கிறது. அந்த பகுதிகளில் நல்ல குடிநீரும் கிடைப்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இப்படி நிலம், நீர், காற்று, நெருப்பு என பஞ்சபூதங்களால் வஞ்சிக்கப்பட்ட ஜப்பான் விரைவில் மீண்டெழும் என்று நம்புவோமாக.
எதிர்ப்புகளின், சவால்களின் மத்தியில் பிறந்தவர்கள் எத்தகைய தடையையும் எதிர்கொண்டு முன்னேறுவார்கள்.
இவள் பாரதி
நன்றி - கீற்று.காம்

உறங்கா நகரம் - சமன் செய்யப்பட முடியாத இரவுகளின் துயரம்

உறங்கா நகரம் - வெ. நீலகண்டனின் அற்புதமான பதிவு என்று ஒற்றைவார்த்தையில் தொலைக்காட்சியில் ஒரு படத்திற்கான விமர்சனத்தை சொல்வது போல் சொல்லிவிடமுடியாது. ஏனெனில் இதைப் போலான படைப்புகள் அதிகம் வரவேண்டும் என்ற எண்ணத்திலும், மக்களின் அனுபவங்களே கற்பனைகளை விட உயர்ந்தவை என்ற மனப்பாங்கிலும் இந்நூல் குறித்து சில கருத்துகளை முன்வைக்கிறேன். கற்பனைகளை விட விசித்திரமானவை உண்மை.

இரவுகள் பற்றி எண்ணற்ற படைப்புகள் வெளிவந்திருக்கின்றன..
அன்றைய தஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் தொடங்கி, அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, மையக்கிழக்கு நாடுகளிலும், தெற்காசியாவையும் சேர்ந்தஎழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஆயிரத்தொரு இரவுகள், ஜா.மாதவராஜின் சாலைப்பணியாளர்களின் வாழ்க்கை சாலைக்கே வந்துவிட்ட கொடுமையைச் சொல்லும் ஆவணப்படமான இரவுகள் உடையும், கவிஞர் மதுமிதாவின் படைப்பாளிகளின் இரவு அனுபவங்களை மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட கட்டுரை நூலான இரவு வரையான ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன. இத்தனை படைப்புகளும் வித்தியாசமான படைப்புகள் தான். உறங்காநகரமும் வித்தியாசப்பட்டிருக்கிறது. காரணம் சக மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் விதத்தில் தனித்துவம் பெறுகிறது.

குங்குமம் வார இதழில் தூங்கா நகரம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உடல் வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், வாக்குசொல்லிகள், ஊர்க்காவலர்கள், மருத்துவர்கள், பத்திரிக்கை போடுபவர்கள், பி.பி.ஓக்களில் வேலை செய்பவர்கள், உணவகத்தில் சமைப்பவர்கள், தபால் ஊழியர்கள், பால் வியாபாரிகள் இப்படி 27 தொழில்களின் இரவு நேரத்தை மிக இயல்பாகவும், அதே சமயம் இறுக்கமாகவும் பதிவு செய்திருக்கிறார்.

இரவு ஓய்விற்கான நேரம் என்று சொல்லிக் கொள்ளும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை இரவு உற்பத்தியின் களம். படைப்புகளின் மூலம். சற்று நேரத்தில் விழிக்க இருக்கும் விடியலுக்கு நடை பாதை அமைத்துக் கொடுக்கும் பெருஞ்சாலை.

இரவின் பனிக்குடத்தில் பிறக்கக் கூடிய ஏராளமான கருக்களை உணரத்தவறிய அல்லது கண்டு கொள்ளாது ஒதுங்கி நிற்கும் மனிதர்களை பின்னந்தலையில் அடித்து இங்கே பார்.. ’உனக்காக உறக்கத்தை தொலைத்து அலையும் மனித வாழ்க்கையை’ என்று சொல்லக் கூடியதாக இந்நூலை பார்க்கிறேன்.

விழித்து எழுந்தவுடன் எப்போதோ தாமதமாகும் ஒருநாளில் இன்னும் பேப்பர் வரவில்லையா? பால் வரவில்லையா? என்று எரிச்சல் படுமுன் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இதற்குப் பின்னாலிருக்கும் பேருழைப்பின் விஸ்வரூபம் புரியவரும்.

நான் பண்பலையில் பணியாற்றும் போதும் சரி, பத்திரிக்கையாளராக இருக்கும் போதும் சரி சாலைகளைக் கடக்கும் போது சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளைக் காணும் போது அவர்கள் எப்படி இரவில் மட்டும் வேலை செய்கிறார்கள் என்று பலமுறை யோசித்துள்ளேன். இரவு நிகழ்ச்சி முடித்து 12 மணிக்கு தாமதமாக வீடு திரும்பும் போது ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்புகள், காலை நிகழ்ச்சிக்காக ஐந்து மணிக்கே அலுவலகம் வரும் போது மாறியிருக்கும்.

எட்டுமணி நேரத் தூக்கத்தின் அவசியம் பற்றி ஆய்வுகள் வந்து கொண்டே இருக்கும் வேளையில் நின்று பேசக் கூட நேரமின்றி இரவுகளை நகர்த்திக் கொண்டு ஓடுகிற மனித வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்தி இருக்கிறார். இரவுகள் விற்பனைக்கு என்று சொல்லாமல் சொல்லும் இவர்களின் பெரும் துயரம் கவிந்த வார்த்தைகள் ஈரமுள்ள எந்த நெஞ்சையும் தாக்கக் கூடியவை. சிலரைத் தவிர ஏனையோர் பொருளாதாரத்தின் சிறு பகுதியைக் கூட ஈட்ட முடியாமல் படும் வேதனைகள் இந்தக் கட்டுரைகளில் உச்சமாகத் தெரிகின்றன.

நாம் கடந்து செல்கிற மனிதர்களின் வாழ்க்கைப் பதிவாக உறங்கா நகரம் இருக்கிறது. இரவுகளில் குறி சொல்லிச் செல்லும் குடுகுடுப்பைக்காரர், சாலைகளைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள், பேப்பர் போடுபவர்கள், பால்காரர்கள், ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் பணியாளர்கள், காவல்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், வாட்ச்மேன்கள், மீனவர்கள் இப்படி தன்னால் முடிந்தவரை அனைத்துத்துறையினரையும் பதிவு செய்திருக்கிறார்.

’கீழ்வானம் சிவக்கிறது. நகரம் தன் சுயமுகத்தை தரித்துக் கொண்டு விடியலை உணர்த்த, பச்சையம்மா முகம் இருண்டு கிடக்கிறது.’

’நின்று பேசிய நேரத்தை சமன் செய்வதற்காக மேலும் வேகம் கூட்டுகிறது சிலம்பரசனின் சைக்கிள்’

’நொடிப்பொழுதில் சைரன் சத்தம் தேய்ந்து மறைய, சோகம் தோய்ந்த கனமான நிசபதம் அசோக் நகரைக் கவ்வுகிறது’

’பனி தகிக்கிறது’

போன்ற வார்த்தை பிரயோகங்கள் நீலகண்டனின் ஆளுமையை எடுத்தியம்புகின்றன. நீலகண்டனின் மொழிநடையும், அவர் கையாண்டிருக்கும் வார்த்தைகளும் இந்த கட்டுரைகளில் உலவும் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் மேலும் வலுவைக் கொடுத்திருக்கின்றன. இதில் மக்கள் பேசும் மொழிகளும் பேச்சு வழக்கில் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. சந்தியா பதிப்பகத்தின் அழகிய வடிவமைப்பு வாசகர்களை தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது.

இயந்திரகதியாக, இயங்கியல் விதியாக பகல்களாக இரவுகளை மாற்றிக் கொள்ள நேர்ந்திருப்பது பெரும்பாலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கே வாய்த்திருக்கிறது. ஆனால் இவர்களுக்கு பகல்கள் இரவாகி விடுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. எப்போதும் இயங்கி ஆக வேண்டிய இந்த மக்களுக்கு இரவும் அதனூடான இசையுமே துணையிருக்கிறது.

இதில் இன்னொரு விடயமாக நான் பார்ப்பது என்னவெனில பெரும்பாலான இரவு நேரப் பணியிடத்திலும் பண்பலை கேட்பதைக் குறிப்பிட்டிருக்கும் ஆசிரியர் பண்பலையின் இரவு நேர தொகுப்பாளர்களை எப்படி தவறவிட்டார் என்பது தெரியவில்லை.

தூக்கத்தை விற்று காசாக்குகிற பி.பி.ஓவில் பணிபுரியும் கங்கா, தூக்கத்தைத் தொலைத்துவிடுகிற ஊர்க்காவல் படையின் ஊழியர் ரமேஷ்ராஜ், படிப்பை விலையாகக் கொடுக்கும் பத்திரிக்கை போடும் பள்ளிச் சிறுவன் சிலம்பு இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நம்மை அசைத்துப் பார்க்கின்றன.

இதற்காக நீலகண்டன் எத்தனை இரவுகளை செலவழித்திருப்பார் என்று பார்க்க முற்படுகையில் அந்த இரவுகளின் சேமிப்பாக இந்த நூலை காண்கையில் அவர் அந்த செலவினை சமன் செய்துவிடுவதாகக் கொள்ளலாம்.

இவள் பாரதி

நன்றி - தடாகம் இணைய இதழ், கவி ஓவியா மாத இதழ்

Thursday, 10 March 2011

உலகம் வியக்கும் போராளிப் பெண்கள்

காலம் மாறும் போது போராட்டத்தின் வடிவங்களும், முறைகளும் மாறலாம். ஆனால் போராட்டக் குணமும், நோக்கமும் மாறுவதில்லை. ஒவ்வொருவரும் தன்னளவில் போராட்டத்திற்கான முன்னெடுப்புகளை செய்திருக்கிறார்கள். செய்யத்தூண்டப் பட்டிருக்கிறார்கள். சாதா ரண மக்களுக்கான அனைத்து நியாங்களும் கிடைக்க வேண்டி அசாதாரண வாழ்க்கை முறையை வாழ முன்வருகிறார்கள். அந்த போராட்டத்தின் விளைவாக கிடைக்கக்கூடிய பலனை மக்களுக்கே அளிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் போராட்டத்தின் விளைவாகப் பெற்ற உரிமைகளைத் தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு அடிகோலுகிறார்கள். 

தியாகிகளும், போராட்டக் குணமுள்ள ஆளுமைகளும் தனியே பிறப்பதில்லை. மக்களில் ஒருவராக இருந்து மக்களுக்காக குரல் கொடுத்து சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டு நிற்பவரே போராளிகள். இன்றைய காலகட்டத்தில் நம்முடன் வாழ்ந்துவருகிற, சமகாலத்தில் பேசப்பட்ட சில போராளிகள் குறித்து இக்கட்டுரையில் காணவிருக்கிறோம்.

வங்காரி மாதாய் - சுற்றுச்சூழல் பாதுகாவலர்

2004ல் உலக நாடுகள் உற்றுக் கவனித்த பெயர்.  நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி. நிலைத்த மேம்பாடு மற்றும் அமைதிப் பணிக்காக இவ்வுயரிய விருதைப் பெற்ற மாதாய் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, கென்யா நாட்டைச் சேர்ந்த இவர் எம்.பியாகவும் இரண்டு வருடங்கள் சேவையாற்றிருக்கிறார். 

நாற்பத்தைந்து பேருடன் பதினைந்து பிரதேசங்களுக்குச் சென்று மண் மற்றும் காலநிலைகளில் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்தியவர். பல கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டையும்  உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். முப்பது மில்லியன் மரக்கன்றுகளை நட்டு Prof Maathai 3ஆப்பிரிக்க மண்ணிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நன்மை செய்திருப்பவர். பூமிக்கு புதிய சுவாசப்பையை நிர்மானித்தவர். சரியான திட்டமிடுதலும், தொலை நோக்குப்பார்வையும், எதிர்ப்புகளை சமாளிக்கும் 

திறனும் இவரின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக அமைந்திருக்கின்றன.

உலகமே முட்டாள்கள் தினம் என்று கொண்டாடும் தினத்தில் தான் 1940-ல் பிறந்தார் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இந்த காடுகளின் தாய். தற்போது எழுபது வயதாகும் வங்காரி மாதாய் தன் செயல்பாடுகளால் தனக்குப் பின்னும் இயங்கக்கூடிய ஒரு வலுவான சூழலை மக்களிடம் விதைத்திருக்கிறார். பெண் பொருளாதாரச் சுதந்திரம் பெறாமல் ஆகப் பெரும் மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதை இவரது செயல்பாடு தெளிவாக்குகிறது. 

வங்காரி மாதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவருக்குக் காயத்திற்கு பதிலாக இன்னும் உதவேகமாக செயலாற்றும் தன்மையை வழங்கியிருக்கிறது. ''வங்காரி மிகவும் வலிமையான பெண். இவரை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே எனக்கு விவாகரத்து கொடுக்க வேண்டுகிறேன்'' என்று வங்காரியின் கணவர் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி தனது பெயரை பின்னால் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் வழக்கறிஞர் மூலம் தெரியப்படுத்தியவுடன் Mathai என்ற பெயரில் a சேர்த்து Maathai  என்று வைத்துக் கொண்டார். மணவிலக்கு பெற்றபின் எக்கனாமிக் கமிஷனில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த வேலையில் ஆப்பிரிக்க நாடு முழுக்க பயணம் செய்ய வேண்டியிருந்ததால் தனது இரு குழந்தைகளையும் தனது முன்னாள் கணவரிடம் ஐந்து வருடங்கள் ஒப்படைத்துவிட்டு தனது பணியை தொய்வின்றி செய்ய ஆரம்பித்தார்.

கென்ய பெண்களின் பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்தவர் அம்மக்களிடம் இருக்கும் படைப்பார்வத்தையும், தேவைகளையும் கண்டறிந்து மரக்கன்றுகளை நடுவதென தீர்மானித்து வனத்துறை அதிகாரிகளை நாடியிருக்கிறார். அதிகாரிகள் என்றாலே அகராதியில் காரியவாதிகள் என்று பொருள் போலும். முதலில் மரக்கன்றுகளை இலவசமாக தருவதாக ஒத்துக் கொண்டவர் பின்னர் பணம் கொடுத்து வாங்கச் சொல்லியிருக்கிறார். உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட மக்கள் பணத்தையும், நேரத்தையும் விரயமாக்க விரும்பவில்லை. தாங்களே மரக்கன்று பண்ணைகளை உருவாக்க ஆரம்பித்தனர். இரண்டு மூன்று அடி வளர்ந்ததும் அந்த மரக்கன்றுகளை நட்டு அது பிழைத்தபிறகு பசுமைப்பட்ட இயக்கம் ஒன்றை ஊருவாக்கி அதிலிருந்து சிறு தொகையை அம்மக்களுக்கு வழங்கினர். ஒரு மரக்கன்றுக்குக் கொடுக்கப்படும் தொகை சிறிதுதானெனினும் அது பல மடங்காகப் பெருகும் போது அந்த பணம் பள்ளிக் கூடங்கள் கட்டுவதற்கும், பிள்ளைகளின் கல்விக்கு செலவிடுவதற்கும் பேருதவியாக இருந்தது. இப்படி மக்களை ஈடுபடுத்தி நிலைத்த மாற்றத்திற்கான ஒரு பாதையை ஏற்படுத்தினார். 

இன்று ஆப்பிரிக்க மக்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகக் கிடைத்தவைதானெனினும் இந்த மாற்றத்தை முன்னெடுத்த வங்காரியின் உழைப்பு பெருமைப்படுத்தப்படவும், வணங்கக்கூடியதாகவும் இருக்கிறது. 

குடிநீர் இல்லை, சரியான சாலைவசதி இல்லை, கட்டுமானப் பொருட்கள் இல்லை, உணவு இல்லை, மண்வளமில்லை என்று முப்பது வருடங்களுக்கு முன் இருந்த நிலையைத் தலைகீழாக மாற்றியமைத்திருக்கின்றனர் வங்காரி மாதாவின் தலைமையிலான ஆப்பிரிக்க மக்கள். சுற்றுச் சூழலைப் பேணாத சமூகம் அல்லது நாடு எல்லாவற்றிருக்கும் கையேந்தி நிற்கும் நிலைமையைத்தான் பெறக் கூடும். இன்று தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக சாலையோர மரங்களை அழித்தெடுத்துவிட்டு சாலை நடுவினில் அழகுச் செடிகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்ற ஒரு வாகனத்தையும், அலுவலரையும் நியமித்து நாம் சாதித்தது கார்பன் மோனாக்சைடை அதிகப்படுத்தியதும் , சிறுவிலங்குகளையும், பறவையினங்களையும் அழித்ததுதான்தான். 

மரமின்றி மழையில்லை என்பது முதல் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கே தெரியும். ஒரு மரம் வெட்டப்படுகிறதெனில் அதற்கு பதிலாக ஒரு மரக்கன்றையாவது  நட்டு வளர்க்க வேண்டும் எனும் மனப்பாங்கு நம்மிடையே வளர்ந்திருந்தால் இன்று நமது சாலைகளின் இருமருங்கும் பசுமையின் பயணிப்பு தொடர்ந்திருக்கும். இனி நாம் மழை நீர் சேகரிக்க வெறும் தொட்டிகளைக் கட்டிவிட்டு மழைக்காக காத்திருக்க வேண்டியதுதான். சுற்றுச் சூழலைப் பாதுகாக்க காடுகள் அவசியம். காடுகள் மனிதகுலத்தின் நாகரீகத்தை மேம்படுத்தும் என்பதை உலகம் மெதுவாக உணரத் துவங்கியிருக்கும் வேளையில் அதைச் செயல்முறைப்படுத்தியிருக்கும் வங்காரி மாதாய் வணங்கத்தக்கவர் மற்றும் பின்பற்றப்பட வேண்டியவர். 

இசைப்ரியா - ஊடகவியலாளர்.

உலகத் தமிழர்களிடையேயும், ஊடகத்துறையினரிடமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஊடகவியலாளர். புலிகளின் பெண் போராளியும், தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியா கடைசிக்கட்ட போரில் தனது கணவரையும், ஆறு மாதக் குழந்தையையும் இழந்து சிங்கள இராணுவத்தால் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இதை ஐ.நா.வும் போர்க்குற்ற விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளது. isaid

ஒரு போரளியாக தன்னை இய க்கத்தில் இணைத்துக் கொண்ட இசைப்ரியா குரல்வளமிக்கவராகவும், கலைத்துறைக்குப் பொருத்தமானவராகவும் அறியப்பட்டு செய்திவாசிப்பாளரானார். 2006-ல் கிழக்கு மாகாண கடற்புலிகளின் தளபதியான ஸ்ரீராமைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வேலி என்ற குறும்படத்தில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வாழும் ஒரு பெண்ணாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ‘கட்டுமரம் மேலே ஏறி’ என்ற ஒரு மெல்லிசைப் பாடலிலும் நடித்திருக்கிறார். அந்த பாடலுக்குப் படத்தொகுப்பும் செய்திருக்கிறார். இப்படி பல கலைகளைக் கற்று செயல்படுத்தி வந்தவர். 

பெண்களை இழிவுபடுத்தவேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் சிங்கள ராணுவம் தன் கையில் ஏந்தியிருக்கும் குரூர ஆயுதம் வன்புணர்வு. இந்த ஆயுதத் தாக்குதலுக்கு இசைப்ரியாவும் இரையாகியிருக்கிறார். இதனை செல்ஃபோனில் பதிவுசெய்து வைத்திருக்கிறது சிங்கள ராணுவம். இந்த படுபாதக காட்சியை இங்கிலாந்தின் சேனல் 4 வெளியிட்டது. பார்ப்பவர்களைக் கதற வைக்கும் அளவுக்கு படுகோரமாகவும் மோசமாகவும் சிங்களப் படையினர் இசைப்பிரியாவைச் சீரழித்திருந்தனர். வாழ்க்கையில் இப்படி ஒரு கோரமான நிகழ்வைப் பார்த்ததில்லை என்றும், இந்தக் காட்சியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றும் சேனல் 4 செய்தியாளரே மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் அறிவரசன் இரண்டு வருடங்கள் ஈழத்தில் தமிழ் பணியாற்றியவர். அவர் (2010 ஜனவரி 6) நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் ‘மாலை ஏழு மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே புலிகளின் 'தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இதில் தினமும் செய்தி வாசிப்பார் இசைப்பிரியா. நல்ல கணீர் குரல் மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு இசைப்பிரியாவிடம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவரது செய்தி வாசிப்பை கவனிப்பேன்.

துவக்கத்தில் கடற்பிரிவில் பெண் போராளியாக இருந்துள்ளார். அவரிடமிருந்த கலை மற்றும் இலக்கிய ஆர்வம், குரல் வளம் அறிந்து அவரை அரசியல் துறைக்கு அழைத்துக் கொண்டனர். தமிழீழ வானொலியும் , தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

அதனால் அரசியல் துறைக்கு மாற்றப்பட்ட இசைப்பிரியா, தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சி பணியாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் ஒருமுறை நான் அங்கு சென்றபோது இசைப்பிரியாவை சந்தித்தேன்.

அப்போது அவரிடம், "இசை சரி... பிரியா என்பது தமிழ்ப் பெயர் இல்லையே..." என்றேன். அதற்கு அவர், 'இயக்கத்தில் நான் சேர்ந்தபோது இசை அருவி என்றுதான் பெயரிட்டனர், ஆனால் இசைப்பிரியா.. இசைப்பிரியா.. என்று என் தோழிகளும் உறவினர்களும் அழைத்த்தால், அதுவே நிலைத்துவிட்டது' என்றார்.

இசை அருவி மிக அழகான தமிழ்ப் பெயர், ப்ரியா என்பது தமிழ் கிடையாது என்றேன். மறுநாள் தொலைக்காட்சியில் செய்தியை கவனித்தபோது செய்தி வாசிப்பவர் இசை அருவி என்றே பதிவு செய்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ப்ரியா என்பது தமிழ்ப் பெயர் என்றே நினைத்திருந்தனர். தமிழ்ப் பெயர் அல்ல என்று சொன்னதை ஏற்று உடனே அவர்கள் அதை மாற்றிக் கொண்டது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. துடிப்பான அந்த இளம்பெண் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை நக்கீரனில் பார்த்து மிகுந்த வேதனைப்பட்டேன் என்றார் அறிவரசன். 

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதும் என்ற எண்ணத்தை வளரவிடாமல் செய்பவர்கள் கலைத்துறையினரே. கலை கலைக்காக அல்ல. மக்களுக்காக. என்று செயற்பட்டு வந்த இனப் போராளிகளில் ஒருவரான இசைப்ரியா கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. எத்தனையோ இசைப்ரியாக்கள் வெளியே தெரியாமல் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதையெல்லாம் இன்றும் கண்டும் காணாமல் இருக்கும் இனம் வரலாறு கூறும் பழிச்சொற்களில் இருந்து தப்பமுடியாது என்பது மட்டும் நிதர்சனம். போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். விதைத்தவன் உறங்கலாம். விதைகள் உறங்குவதில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

சோமாலி மாம் - மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

கம்போடியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் இவர் .

சோமாலியிடம்  தான் பிறந்தற்கான எந்த அத்தாட்சிப் பத்திரங்களோ,  ஆதரங்களோ இருக்கவில்லை. அவளது நினைவிலும் அது பற்றி தெரியவில்லை அவள் 1970 அல்லது 1971 இல் பிறந்திருக்கலாம் என சொல்லப்படுகின்றது. எழுபதுகளின் நடுப்பகுதிலில் கம்போடியமிது Khmer Rouge  கொண்ட பயங்கரவாதம் பல மக்களை கிராமப் புறங்களுக்கு தள்ளியது. அந்த நிலையில் அவள் தன் பெற்றோsomali mamரை Phnong  என்ற கிராமத்தில்  அவள் தவற விட்டாள். அநாதை ஆகினாள். ஒரு மனிதன் அவளை அவளது தகப்பனைக் கண்டுபிடித்து தருவேன் என சொல்லி அழைத்துக் செல்லும் வரை அவள் அந்த அநாதை இல்லத்திலேயே வாழ்ந்தாள். அவள் அங்கு அவனின் அடிமை என ஒப்பந்தம் செய்யப்பட்டு அடிமையாக நடத்தப்பட்டாள்.  அவனை தாத்தா என அழைக்குமாறு பணிக்கப்பட்டாள். 

14 வயதிருக்கும் போது வளர்த்தவராலேயே வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார். வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலுக்கும் தள்ளப்பட்ட சோமாலி யாரோ ஒருவனுக்கு மணம் முடித்துவைக்கப்பட்டார். அவருடைய கணவரிடமும் கொடுமை அனுபவித்த மாம் தினமும் ஆறேழு பேருடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தப்பட்டார். மறுத்தால் பாம்புகளும், தேள்களும் விடப்பட்ட அறையில் அடைக்கப்படுவார். இப்படியான வன்முறைக்குள் வீழ்த்தப்பட்ட சோமாலி தெருவில் நின்று தானே ஆள் கூப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட சரியான சந்தர்ப்பம் பார்த்து அங்கிருந்து தப்பியிருக்கிறார். 

கம்போடியாவிலிருந்து தப்பித்த சோமாலி மாம் 1993ல் ஃபிரான்சுக்கு வந்தார். பின் பாரிஸ் சென்ற அவர் திருமணம் செய்து கொண்டார். அப்போது அங்கு அவர் கண்ட உண்மை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிறைய பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதைக் கண்டு 1996ல் AFESIPஅமைப்பொன்றை உருவாக்கி பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்றினார். தாய்லாந்த், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளிலும் ஹெச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதுவரை 4000 பெண்களைக் காப்பாற்றியுள்ளார். 2007ல் சோமாலி மாம் பவுண்டேஷன் ஒன்றை நிறுவி தீவிரமாகச் செயற்பட்டு வருகிறார். 

அந்த வயதில் நடந்த சம்பவங்களை ஒருநாளும் இரவுகளில் நினைக்காமலிருக்க முடியவில்லை. நினைத்துவிட்டால் என்னைக் கத்தியால் குத்துவதைப் போன்ற உணர்வும், கெட்ட கனவுகளும் வரும். இது தினமும் நிகழ்ந்தபடிதான் இருக்கிறது. என்னால் இதிலிருந்து விடுபட இயலவில்லை. பாலியல் அடிமைகளாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய ரணமாக இருக்கும். வாழ்வது பெரும் போராட்டத்திற்குறியதாகவும் இருக்கும். வலிகளோடு இந்த சமூகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குற்றவுணர்வும், தனிமையும் சூழ்ந்திருக்கும் இந்த வேதனையிலிருந்து அவர்களை மீட்க வேண்டியது அவசியம். யாரும் அவர்களுக்கு உதவி செய்யவோ, அன்பு செலுத்தவோ முன்வர மாட்டார்கள். அவர்களை நேசிக்கவும், உதவி செய்யவும் முன் வந்து அவர்களுக்கு இந்த உலகை எதிர்கொண்டு வாழும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்குவது என் நோக்கமாக இருக்கிறது. 

என்னுடைய அம்மா, அப்பா யாரென்று எனக்கு தெரியாது. எனது வயது தெரியாது, சோமாலிதான் எனது பெயரா என்றும் தெரியாது. நான் தெரிந்து கொண்டதெல்லாம் வலி, வேதனை, சோகம். இதைப் போல பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் பேசாமலே  என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் இதயத்திலிருந்து சிரிப்பைக் கொண்டு வருவது மிகப் பெரிய சாதனையாக நான் நினைக்கிறேன். என்று சோமாலி நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். 'The Road of Lost Innocence' என்ற புத்தகத்தில் தன் வாழ்க்கை வரலாற்றோடு கம்போடிய நாட்டு அடிமைகளைப் பற்றியும்  எழுதியிருக்கிறார். 

 

சோமாலி தRoad-of-Lost-Innocence_Viragoனது பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் அவரது மிகப்பெரும் சாதனை ஒரு அடிமையான தன்னை மீட்டெடுத்து அதே போல பாதிக்கப்பட்ட பலரையும் மீட்டெடுத்து வருவதுதான். 

சமூகத்தில் புரையோடிப் போன சில விஷயங்களை அழித்தெடுத்து புதிய மாற்றங்களையும், உரிமைகளையும் பெற போராடும் இவர்களைப் போன்றவர்களை பார்த்தாவது, படித்தாவது நமது செயல்பாட்டையும் சமூகத்தில் முன்னெடுத்தோம் எனில் அதுவே மனிதம் இன்னும் இருப்பதற்கான அடையாளமாகும். 

- இவள் பாரதி 

நன்றி - தடாகம் இணைய இதழ்

Monday, 13 September 2010

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்


உங்க சின்ன வயசுல சினிமாவுக்கான ஆர்வம் இருந்ததா?
சின்ன வயசுல சினிமா பாக்குற ஆர்வம் இருந்தது. நிறைய படங்கள் அம்மாவோட போய் பார்ப்பேன். அப்ப சினிமாங்றது வேற உலகம். கடவுள் மாதிரி இருந்தது. இவங்களுக்கெல்லாம் பசிக்குமா? அந்த மாதிரி ஒரு பயங்கரமான பிரமிப்பு இருந்துச்சு. அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இந்த துறையில நுழைஞ்சா எப்டி இருக்கும்ங்ற ஆர்வம் வந்தது. நான் ஏழாவது, எட்டாவது படிக்கும் போது எனக்கு கதை எழுத முடியும்னு நினைச்சேன். அந்த நேரத்துல அம்புலிமாமா மாதிரி கதைதான் எழுதுவேன். அத எங்கேயும் அனுப்பியது கிடையாது. அப்டி தோணவும் இல்ல. அம்புலி மாமா, பாலமித்ராக்கு ரெகுலரா ரைட்டர்ஸ் இருப்பாங்க. யார் அதுக்கு முதலாளியோ அவங்களே அந்த கதைலாம் எழுதுவாங்கன்னு நினைச்சுட்டிருந்தேன். பின்னால அது ரைட்டர்ஸ் எழுதுவாங்கன்னு தெரியும் போது அந்த வேலைக்குப் போகனும்னு ஆசைப்பட்டேன். அத விட பிரம்மாண்டமான ஒரு உலகம் சினிமா உலகம்னு தெரிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா இதுக்கு வந்துட்டேன்.

சினிமாவுல எப்படி நுழைஞ்சீங்க?
நான் ரைட்டர் கலைமணி சார்கிட்ட டயலாக் அஸிஸ்டென்ட்டா இருந்தேன். அவரோட கொஞ்ச நாள் வேலை பாத்தேன். அப்புறம் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாகிட்ட குஷி படத்துல கொஞ்சம், பிரவின் காந்த் கிட்டயும் வேலை பாத்தேன். தவசி படம் பண்ண உதயசங்கர் இப்டி எல்லார்கிட்டயும் கொஞ்ச கொஞ்ச நாள் வேலை பண்ணேன். ஆனா யாருகிட்டயும் முழுசா வேலை செய்யல. அதுல இருந்து கத்துக்கிட்டேன்.
நீங்க முதல் படம் 2001ல தீனா கொடுத்தீங்க. ரவுடியிசம் சார்ந்த படம். திட்டமிட்டுதான் அந்த ப்டம் எடுத்தீங்களா?
திட்டமிட்டுதான் எடுத்தேன். ஆனா அந்த திட்டம் வேற மாதிரி இருந்தது. அந்த நேரங்கள்ல தொடர்ந்து பொயட்டிக்கான படங்கள்தான் வந்துட்டு இருந்தது. ஒரு ஹிடார், வண்ணத்துப் பூச்சி, பாட்டு, லவ், பூ இந்த மாதிரியே சினிமா போயிட்டிருந்தது. அதுல இருந்து சடார்னு மக்கள திருப்பி வேற மாதிரி காட்டணும்ங்றதுக்காக ஒரு கவன ஈர்ப்புக்காக பண்ணேன்.

தீனா & அடிதடி, ரமணா & தேசப்பற்று, கஜினி & கமர்ஷியல் அப்டினு ஒண்ணுக்கொண்ணு ஒற்றுமை இல்லாம மூணு படமுமே வித்தியாசமா பண்ணிருக்கீங்களே.
ஆமா. ஒரு ரெகுலரான லைஃப் வாழக்கூடாதுனுதான் சினிமாவுக்கு வந்தேன். இல்லைனா அப்பா மாதிரி மளிகைக்கடை திறந்து, இல்ல மாசம் ஒண்ணாம் தேதியானா சம்பளம் வாங்கிட்டு வேலை பாக்குறதோ, ஒரு ஆஃபிஸ்ல வொர்க் பண்றதோ வேண்டாம்னு நினைச்சுதான் சினிமா பண்றோம். அதுலயும் ஒரே மாதிரி வொர்க் பண்ணா திரும்ப அது போரடிக்கும். ஒரே மாதிரி வேலை செய்யும் போது ஒரே ஊர்ல இருக்குற ஃபீல்தான் கிடைக்கும். அதுக்காகத்தான் அந்த மாதிரி வச்சுக்கிட்டது.

ரமணாவுல விஜயகாந்த சார் கூட வொர்க் பண்ண அனுபவம் பத்தி?
அவரைப் பொறுத்த வரைகும் அவரு எதுலயும் இன்வால்வ் ஆகல. அப்டி இன்வால்வ் ஆனா அது இதுனு இன்டர்ஃபியர் ஆவாங்க. முதல் தடவை மூணு மணி நேரம் கதை சொன்னேன். படம் எந்தளவுக்கு ஓடுமோ, அந்தளவுக்கு கதை சொன்னேன். கதைய முழுசா கேட்டுட்டு ‘எதுவும் இதுல சேஞ்ச் பண்ண வேணாம்’னு ஷூட்டிங் போய்ட்டாரு. எந்த விதமான தலையீடும் இல்லாம சுதந்திரமா இயக்குனேன்.

2005ல வந்த கஜினி ரொம்ப லேட் இல்லையா?
ஒரு படம் முடிச்சுட்டு ‘மிரட்டல்’னு ஒரு ஸ்கிரிப்ட் நடிகர் விக்ரமுக்கு ரெடி பண்ணது. விக்ரமுக்கு புடிக்கலைனு சொல்லிட்டாரு. பிடிக்க்லைனு சொன்னவுடனே எனக்கு என்ன பண்றதுனே தெரியல. மைன்ட் அளவுல நான் அந்த கதைய செட் பண்ண பிறகு வேற ஹீரோக்கிட்ட போனாலும் அவங்களும் பிடிக்கலைனு சொல்லிட்டாங்க. ஒரு ஹீரோ பிடிக்கலைனு சொன்னவுடனே அதே மாதிரியே குருட்டுத்தனமா எல்லாரும் பிடிக்கலைனு சொல்லிட்டாங்க. எல்லாரும் பிடிக்கலைனு சொன்னதும் எனக்கும் பிடிக்காம போச்சு. 4 தடவை நல்லா இல்லைனு சொன்னதும் நான் கொஞ்சம் சேஞ்ச் பண்ணி அஜித்த வச்சு கஜினினு பண்ண ஆரம்பிக்க நினைச்சேன். அவரு நான் கடவுள் பண்ணிட்டு, பண்றேன்னு சொன்னாரு. என்னோட படத்துக்கு மொட்டை போடணும். நான் கடவுளுக்கு முடி வளர்க்கணும். ஒண்ணுக்கொண்ணு ஒத்து வரல. அந்த படம் முடிச்சு முடி வளத்து மொட்டை அடிக்கிறதுக்கு சரி வராதுன்னு சொல்லிட்டு சூர்யாகிட்ட போக வேண்டியதாயிடுச்சு. அதான் காலதாமதமாயிடுச்சு.

ஹிந்தியில கஜினிய கொண்டு போக எப்டி யோசிச்சீங்க.?
ஒளிப்பதிவாளர் ஜீவாகிட்டதான் முதல்ல இந்த கதைய சொன்னேன். அவர் இது ஹிந்திக்கு நல்லா இருக்கும்னு சொன்னாரு. அதுக்கப்புறம் அவர் பண்ண முடியாம போனாலும் அவர் சொன்னபடி ஹிந்தி வாய்ப்பு இருக்காது. இன்னைக்கு ஒரு உலக அளவுல கஜினி பாராட்டப்பட்டிருக்குன்னா அது ஜீவா சார் சொன்ன வார்த்தைதான்னு நம்புறேன்.

கஜினி ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் பத்தி சொல்லுங்க.
நான் அவரோட தீவிர ரசிகன். அவர் ஒளிப்பதிவுல ஒரு படமாவது டைரக்ட் பண்ணணும்ங்றது என்னோட ஒரு ஆசை. அப்டி ஒரு வாய்ப்பு அமையுமானு நினைச்சேன். அவர் ஹிந்தியில பண்றாரு. நான் தமிழ்ல பண்றேன். எப்பவாவது ஒரு நாள் உங்களுக்குப் போரடிச்சா தமிழ்ல படம் பண்ணலாம்னு தோணுச்சுனா என் படம் பண்ணுங்க சார்னு சொல்லி வச்சிருந்தேன். அதுக்கு தகுந்த மாதிரி நான் ஹிந்தி படம் பண்ண வாய்ப்பு கிடைச்சது. ஹீரோ அமீர்கான். அவரோட விஷுவலா ஸ்கோர் பண்றதுக்கு நிறையெ ஸ்பேஸ் இருக்குனு அவரும் ஒத்துக்கிட்டாரு.

உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?
எனக்கு ஹிந்தி தெரியுது. ஆனா புரிஞ்சுக்குவேன். பேச தான் கத்துக்கல. எனக்கு ஹிந்திதான் தெரியாதேயொழிய டைரக்ஷன் தெரியுமே.

உங்களுடைய அடுத்த படம் எப்படி இருக்கும்?
அடுத்த கதை ரொமாண்டிக் ப்ளஸ் காமெடி பண்ணலாம்னு இருக்கேன்.

ஒரு வெற்றி கிடைச்ச பிறகு அடுத்த ஒரு முயற்சி தாமதாகும். அந்த வெற்றிய ரசிக்கணும் அல்லது சுவைக்கணும்னு சொல்வாங்க. நீங்க எப்படி?
இல்ல. எனக்கு ரிலாக்ஸ் பண்றது பிடிக்காது. ரிலீஷுக்கு ஒரு வாரத்துக்கு முன்னால எப்படி இருக்கேனோ அப்டிதான் ரிலீஷுக்கு அப்புறமும் இருப்பேன். இதுவரை 5 படங்கள் பண்ணியிருக்கேன். எல்லாமே ஹிட்தான். இருந்தாலும் கூட எனக்கு ரிலாக்ஸ் பண்ற பழக்கம் கிடையாது. ஒரு படம் ஹிட்டுனு சொன்னதும் அடுத்த நாளும் இப்டி இருக்கணும். யாரும் தப்பு சொல்லிடக் கூடாது. சண்டே நல்லா ஓடுனா மண்டேவும் இப்டி இருக்கணுமேனு ஒரு எண்ணம் இருக்கும். ட்யூஸ்டேல 50 டிக்கெட் ப்ரேக்னு சொன்னதும் அடுத்த நாளும் இப்டி இருக்கணும்ணு தோணும். மார்னிங் ஷோ ஒரு இடத்துல ஃபுல்லாகும். வேற இடத்துல நைட் ஷோ ப்ரேக் ஆகும். இப்டி போய்ட்டே இருக்கும். அதுக்குள்ள ப்டம் சூப்பர் ஹிட்டுனு சொல்வாங்க. திரும்பிப் பாத்தா ஒன்றரை மாசம் ஆகியிருக்கும். அப்புறம் அடுத்த படம் பண்ணனுமேனு டென்ஷன் வந்துடும். எப்பவும் டென்ஷன்தான்.

ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலையை மாற்றிச் செல்வதுதான் ஓய்வு அப்டினு சொல்வாங்க. நீங்க ஓய்வு நேரத்துல என்ன செய்வீங்க?
புத்தகம் படிப்பேன், படங்கள் பார்ப்பேன். மக்களத் தொடர்பு கொள்வேன். எப்பவாவதுதான் வெளியே போவேன்.

திருச்சியில படிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்களேன்.
திருச்சி பிஷப் ஹீபர்ல படிச்சேன். நான் நல்ல வளர்ச்சி அடைஞ்சதுக்குக் காரணம் திருச்சினு சொல்லலாம். எனக்கு மறக்க முடியாத ஊர். நான் இருந்தது 3 வருஷம்தான். திருச்சிக்குள்ள நுழைஞ்சாலே காதலிய பாக்குற அனுபவம் மாதிரியே இருக்கும். அப்ப கோ&எஜுகேஷன் கிடையாது. ஆனா திருச்சியில இருக்குற எல்லா காலேஜ் கல்சுரல்ஸ்லயும் கல்ந்துருக்கேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துல கல்சுரல்ஸ் மெம்பரா இருந்தேன். என்.சி.சிலயும் இருந்தேன். நிறைய பேர் என்னைய மறந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். எல்லா இடத்துலயும் நண்பர்கள், ஹாஸ்டல் எல்லாமே மறக்க முடியாத அனுபவம். தமிழ் பேராசிரியர் ஐயா பூரணச் சந்திரன் ரிடையர்மென்ட்க்கு முன்னாடி ஒரு காலேஜ் டே ஃப்ங்கஷனுக்கு நான் வரணும்னு ஆசைப்பட்டாங்க. எல்லா வேலையையும் தூக்கிப் போட்டுட்டு வந்தேன். அவரை கௌரவ படுத்த வேண்டியது என் கடமைனு நினைச்சேன்.
----------to be continued

Thursday, 26 August 2010

திரைப்படப்பாடலாசிரியர் & நடன இயக்குனர் பிரபுதேவா



ஒரு நடன இயக்குனரா இருந்து இப்ப திரைப்பட இயக்குனரா மாறியிருக்கீங்க. இந்த வளர்ச்சிய எப்டி எடுத்துக்கிறீங்க?
அதுவா எல்லாம் படிப்படியா அமைஞ்சிருச்சுங்க. திரைத்துறை ஒரு கடல். அதுல நானும் ஒரு சிறுநதியா ஓடி அந்த கடலத் தொட்டுட்டு இருக்கேன். அவ்ளோதான்.

உங்களை நீங்க எப்டி பாக்குறீங்க? ஒரு நடிகரா? ஒரு இயக்குனரா? ஒரு இயக்குனரா இந்த மாதிரி..
நீங்க சொன்ன எல்லாமே என்னுடைய வேலை. வேலைய வேலையாதான் பாக்குறேன். அதுக்கு மேல என்ன இருக்கு.

உங்களோட பலம் என்ன?
என்னோட கடினமான உழைப்பு.

உங்க நடிப்புல உங்களுக்கு பிடிச்ச படம்?
ஏழையின் சிரிப்பில், மின்சார கனவு

என்ன காரணம்?
‘மின்சார கனவு’ வரைக்கும் எப்டி கைய வச்சுக்கனும்னு கூட தெரியாது. மின்சார கனவுலதான் கொஞ்சம் தேறிட்டேன்னு நினைச்சேன். ‘ஏழையின் சிரிப்பில்’ படத்துல் அந்த கேரக்டர் ரொம்ப பிடிக்கும்ங்க. ரொம்ப எக்ஸ்ட்ரார்டினரி கேரக்டர். அந்த கேரக்டர பாத்தாலே பாவமா இருக்கும்.

உங்களுடைய குழந்தை பருவம் எப்டி இருந்துச்சு?
நார்மலா ஒரு மிடில் க்ளாஸ் ஃபேமிலில எப்டி இருந்துச்சோ அப்டிதான் இருந்துச்சு. அண்ணன், தம்பிக்குள்ள சண்ட, ஸ்கூல் போறதுனு ஜாலியா இருந்துது.

பள்ளியில நடந்த மறக்க முடியாத சம்பவம்னா எத சொல்வீங்க?
பள்ளியினா எனக்கு பயம். அதனால கலாட்டாலாம் பண்ணதில்ல. என்ன நிறைய விளையாடுவேன். ஃபுட்பால்னா ரொம்ப பிடிக்கும்.

திரைக்கு பின்னால இருந்து இயங்குறவங்கள பத்தி என்ன நினைக்கிறீங்க?
நான் திரைக்கு முன்னாலயும், பின்னாலயும் இருக்குறதால பிரிச்சுப் பேச முடியல.

நடிக்க வந்த புதுசுல எந்த மாதிரியான எண்ணங்கள் மேலோங்கி இருந்துச்சு?
எப்டியாச்சும் இதுல இருந்து தப்பிச்சுடணும்னு தோணுச்சு.

உங்கள புதுப்பிக்கிற விஷயமா எதப் பாக்குறீங்க?
வேலை எதுவா இருந்தாலும் அது என்னப் புதுப்பிக்கிற விஷயம்தான். ஏன்னா வேலை இருந்தா க்ரியேட்டிவா இருக்கோம்னு அர்த்தம்.

சமீபத்திய சாதனையா எதைப் பாக்குறீங்க?
சென்னைல ட்ராஃபிக்ல வண்டி ஓட்டுறது.

உங்களுக்கு பிடிச்ச நேரம் எது?
எனக்கு பொதுவா சாயந்திரம் நேரம் 4 & 7 பிடிக்கும். ஏன்னா ஸ்கூல் டேஸ்ல இருந்து அப்பதான் விளையாட டைம் கிடைக்கும்.

உங்கள சந்திக்க வர்றவங்ககிட்ட உங்க அணுகுமுறை எப்டி இருக்கும்?
தெரிஞ்சவங்களா இருந்தா ஜாலியா பேசிட்டிருப்பேன். தினமும் சந்திக்கிறவங்களதான சந்திச்சிட்டு இருக்கோம். புதுசா சந்திச்சா அவங்ககிட்ட நல்லா பழகுவேன்.

உங்க பொழுதுபோக்கு?
டிவி பார்ப்பேன். விளையாடப் பிடிக்கும்.

நீங்க அடிக்கடி உபயோகிக்கிற ஒரு வார்த்தை?
ஜாலியா இருக்கணும்.

நட்புக்கு என்ன முக்கியத் தேவைனு நினைக்கிறீங்க?
எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது.

ஒரு படத்தோட வெற்றி யாரால நிர்ணயிக்கப் படுதுனு நினைக்கிறீங்க?
மக்களாலதான்.

காதல்ங்றது என்ன?
டேஞ்சரஸ்

இந்த உலகத்துல ரொம்ப பிடிச்ச விஷயம்?
நடனம்.

உங்க சகோதரர்கள் பத்தி..
ராஜூ அண்ணன் அவர் ரொம்ப டேலண்ட். பிரசாத் தம்பி. சினிமாவுல ட்ரை பண்ணிட்டிருக்காரு.

ஒரு கலைஞனுக்கான தகுதிகள்?
கடின உழைப்பு

பிரபலம்ங்றது உங்க பார்வையில்..?
அது ஒரு பார்ட். பிரபலம்னு நினைச்சுட்டே இருக்காம நம்ம லைஃப நாம வாழ்ந்துட்டு போகனும்.

நீங்க ஒரு ரேடியோ ஜாக்கியா (நிகழ்ச்சி தொகுப்பாளர்) இருந்தா எந்த மாதிரி நிகழ்ச்சி செய்ய விருப்பம்?
யாரையாச்சும் கூப்பிட்டு இந்த பாட்டு எப்டி பண்ணீங்கன்னு பேட்டி எடுப்பேன்.

நீங்க சொன்ன முதல் பொய்?
நிறைய சொல்லியாச்சுங்க. அதனால ஞாபகத்துல இல்ல.

அழகுங்றது என்ன?
எனக்கு மைக்கேல் ஜாக்சன் தான் அழகு. அவர் ஆடுற ஸ்டைல்.

புத்தகங்கள் படிக்கிற பழக்கம் உண்டா?
முதல் பக்கம் படிக்கும் போதே தூக்கம் வந்துடும். ஸ்கூல்லயே படிக்கததாலதான் நடிக்கவே வந்தேன்.

உங்க ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
எதப்பத்தியும் கவலைப்படாதீங்க. ஜாலியா இருங்க.

- இவள் பாரதி

இயக்குனர் & நடிகர் மௌலி


உங்களுடைய குழந்தைப் பருவம் பத்தி சொல்லுங்க..
எங்க பூர்வீகம் தஞ்சாவூர் ஜில்லா. ஆனா நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான். சென்னையை அடுத்த அம்பத்தூர். என்னுடைய ஆரம்ப கல்வி அங்க தான் படிச்சேன். என்னுடைய கலை தாகம் வந்தது அங்க தான். என்னுடைய பல நண்பர்கள் இன்னைக்கு நாடகத்துறை, திரைத்துறை பலரும் ஒண்ணா வளர்ந்ததும் அங்கே தான்.

உங்களுக்கு நாடகம், நகைச்சுவை வந்தது சின்ன வயசுலேயே இயல்பா வந்ததா? இல்லை வீட்டுல மத்தவங்களை பார்த்து கத்துக்கிட்டதா?
எனக்கு அக்கா ஒண்ணு தங்க தம்பி ஒண்ணு. ஆண் பிள்ளைய நான் தான் வீட்டுக்கு மூத்த மகன். வீட்டுல மூத்த மகன் சரியா வளரணும்ங்கற கண்டிப்பும், கறாரும் எல்லா குடும்பத்துலயும் இருக்கும் அதே தான் எங்க வீட்டுலயும் இருந்தது. படிக்கிற காலத்துல படிக்கணும்ங்கறதுல வீட்டுல தீவிரமா இருந்தாங்க. அது நியாயமானதும் கூட. அப்படி தான் இருந்தாங்களேயொழிய நான் கலைத்துறையில, சினிமாத்துறையில, நாடகத்துறையில வரணும்னு வீட்டுல எண்ணம் கிடையாது. ஆனாலும், பள்ளிக்கூடங்கள்ல நாடகம் போடுவாங்க. அப்ப வார்த்தைகளை சத்தமா பேசக் கூடிய பசங்கள பிடிச்சு வேஷம் போட வைப்பாங்க. ஏனா பள்ளிகள்ல சரித்திர நாடகங்கள் தான் போடுவாங்க. அது வந்து தவறான முன்னுதாரணமா இருக்காதுங்கறதால ராஜ ராஜ சோழன் போன்ற நாடகங்கள் போடுவாங்க. அதுக்கு கணீர் பேசக் கூடிய, உச்சரிப்பு சரியா இருக்கக் கூடிய பசங்களா வேணும்னு தேடுவாங்க. அப்படிதான் என்னைத் தேர்ந்தெடுத்தாங்க.

உங்களுக்கு சின்ன வயதுலேயே நாடகம் போடணும்ங்ற ஆவல் அதிகமா இருந்ததா?
எனக்கு கிரிக்கெட்லதான் அதிகம் ஆர்வம் இருந்தது. நிச்சயமா நாடகம் போடணுங்கறதுல இல்ல நாங்க நண்பர்கள் எல்லாம் ஒரு டீம் வச்சிக்கிட்டு வீட்டுல இருந்து பணம் வாங்கி ஒரு ரூபா, இரண்டு ரூபாணு போட்டு பேட், பால் வாங்குரதுங்றதுலாம் எங்க குறிக்கோள் இருக்குமே தவிர பள்ளி நாடகங்கள்ல நடிச்சு என்னுடைய எதிர்காலம் இது தான் போகப் போகுதுங்கறது எண்ணமெல்லாம் கிடையாது. கிரிக்கெட்ல போல் ஸ்டேட் லெவலுக்கு ஆடணும்ங்ற ஆசைதான் எங்க எல்லாருக்குமே இருந்தது. டென்னிஸ், பேட் மிண்டன், ஆடியிருக்கேன். வேயிட் லிஃப்டிங் இதெல்லாம் சிறு வயசுல பண்ணியிருக்கேன். அதனால விளையாட்டுல தான் ஆர்வம் இருந்ததேயொழிய கலைத்துறைல இல்லை. ஆனால் சினிமாக்கள் பிடிக்கும். நாடகங்கள் பிடிக்கும்.

வீட்டுல மாசத்துக்கு ஒரு சினிமா மூணு மாசத்துக்கு ஒரு சினிமானுதான் கூட்டிட்டு போவாங்க. எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு டெண்ட் கொட்டகை இருக்கும். அங்க வச்சிருக்கிற ஸ்பீக்கர் எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கும். எங்க வீட்டு மாடில போய் உக்காந்துட்டேம்னா வசனம் சத்தமா கேக்கும். ஒரு முறை படம் பாத்துட்டு அப்புறம் 16 தடவை இல்ல அந்த படம் ஓடுற வரை வசனத்த கேட்டுக்கிட்டே இருப்போம். அது ஒரு ஆர்வத்தையும், எண்ணத்தையும் என்னுள்ள தூவிருக்கு. எனக்கு வெளியே அதன் வெளிப்பாடு கிடையாது. மனசுக்குள்ள எங்கேயோ நல்ல சினிமாங்றது பதிஞ்சிருக்குது.

விளையாட்டுத்துறை ஒரு கிரிக்கெட் வீரர இழந்துடுச்சுணு சொல்லலாமா?
நிச்சயமா! ஏனா கல்லூரி வரைக்கும் கிரிக்கெட் ஆடினேன். என் கூட ஆடின இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கட்ராகவன்லாம் என்கூட படிச்சவங்க. எப்படியோ நாம விளையாட்டுத் துறையில வரணும்ங்கறது தான் பெரிய ஆர்வமா இருந்தது.
சின்ன வயசுனாலே விளையாட்டுலதான் ஆர்வமா இருப்பாங்க. நீங்க எப்டி விளையாட்டுலயும், நாடகத்துலயும் ஈடுபட்டீங்க.
கிரிக்கெட்ல மாசம் ஒரு ரூபா, ரெண்டு ரூபா போடுறது பிரச்சினையா இருந்துச்சு. அதனால ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடத்தி டிக்கெட் வசூல் பண்ணி அது மூலமா ரூ.2,000/& , ரூ. 3,000/& கிடைச்சா கிரிக்கெட் விளையாட சௌகரியமா இருக்குமேன்னு நினைச்சோம். ஆதனால வெளில இருந்து ஒரு ஆர்க்கெஸ்டரா கூப்பிட்டா சினிமா பாட்டெல்லாம் பாடுவாங்க. இது சில பேருக்கு பிடிக்கும். சில பேருக்கு பிடிக்காது. குடும்பத்தோட வந்து பாக்கும் போது என்னவோ பாட்டெல்லாம் பாடுறாங்க அப்டினு நினைப்பாங்க. அப்ப சில பேரு ‘‘நீங்க இத்தனை பசங்க இருக்கீங்கள்ல, நீங்க நடிக்கலமேடா’’னு சொன்னாங்க. எங்களுக்கும் ‘‘நாம ஏதாவது செஞ்சா காசு கொடுப்பாங்க. அப்டினு சரினு தோணுச்சு. அப்ப நாங்களே வெளில இருந்து கொண்டு வந்த டி.கே.எஸ். சண்முகத்தோட ரத்த பாசம் நாடகம் போட்டோம். நாடகம் வெளில இருந்து கொண்டு வர்றதுல சிக்கல் இருந்துச்சு.

யாரும் முழு ஸ்கிரிப்ட் கொடுக்கமாட்டாங்க நீங்க இங்க உக்காந்து எழுதிட்டுப் போங்கடா அப்டினு சொல்வாங்க. எல்லாருக்கும் படிப்பு, வேலைனு இருக்கும்போது உக்காந்து எழுதிட்டுப் போக நேரமிருக்காது. அப்ப தான் நாமலே எழுதலாம்னு டீம்ல சொல்லும்போது ‘‘யாருடா எழுதுவா’’ அப்டினு கேக்கும்போது ‘‘இவன் எழுதுவான்’’னு என்னை கையக் காட்டிட்டாங்க. அதுவரை நாடகத்த எழுதுற கண்ணோட்டத்துல நான் பாத்ததே கிடையாது. நான் பார்த்து பிரமிச்ச நாடகங்கள் எல்லாம் பெரிய பெரிய நாடகங்கள். அதெல்லாம் எழுத வருமானு தெரியாது. நான் நினைச்சது நம்ம குடும்பத்துக்குள்ள நடக்குற விஷயங்கள எழுத நினைச்சேன். வீட்டுல பொய் சொல்லிட்டு காசு வாங்கிட்டுப் போறது, லேட்டானா காலேஜ்ல வச்சுக்கிட்டு ‘‘காதலுக்கு கண்ணுல்ல’’ சின்னதா 40 நிமிடத்துக்கு ஒரு நாடகம் எழுதி அரங்கேற்றம் பண்ணோம். அந்த நாடகத்துக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார். அந்த நாடகம் பெரிய வெற்றி அடைந்தது.

அந்த முதல் நாடகத்தில் அனுபவங்கள் எப்படி இருந்தது?
திடீர்னு ஓவர் நைட்ல நான் பாப்புலராகுற அளவுக்கு எல்லாரும் ஸ்கிரிப்ட் பத்தி ‘‘பிரமாதம்’னு பேசுவாங்க. நடிப்ப பத்தி பேச ஆரம்பிச்சாங்க. ஓ இது ஏதோ நமக்கு சரியா வரும் போலிருக்கேனு தோணுச்சேயொழிய அன்னைக்கு இந்த லைன்லயே போயிடலாம்னு தோணல. இது எப்ப நடந்ததுனா 1966. அப்ப சிவாஜிக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தாங்க. அந்த பாராட்டு விழாவையும் சேர்த்து நடத்தி நாடகத்தையும் அரங்கேற்றினோம்.

அந்த ‘‘காதலுக்கு கண்ணில்லை’’ நாடகத்துல எனக்கு ஹீரோயினா நடிக்க வெளில இருந்து கூட்டிட்டு வர அனுமதிக்கமாட்டாங்க. ஏன்னா பொம்பளங்களோட கூத்தடிக்கிறாங்கன்னு பேசிடுவாங்களோ அப்டினு பயம். ஆதனால எங்கள்ல ஒருத்தரே ஹீரோயினை நடிக்க வச்சோம். அப்ப எனக்கு ஹீரோயினா நடிச்சது இப்ப திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கக்கூடிய விசு அவர்கள் தான். நாங்க சிறந்த நண்பர்கள், அதனால அவர் ஹீரோயின் வேஷம் போட்டாரு. அப்டி ஆரம்பிச்சது தான் என்னுடைய கலைப் பயணம் அப்ப நான் பி.டெக். படிச்சேன். அதனால அரசு கல்லூரி நாடகங்கள்ல பங்கெடுக்குர வாய்ப்பு கிடைச்சுது. அப்படி நான் எழுதி நடிச்ச நாடகங்கள் ரெண்டு, மூன்று தடவை பெஸ்ட்னு கப்பெல்லாம் வாங்குஙக. அத பத்திரிக்கைகள் எல்லாம் கவர் பண்ணி போட ஆரம்பிச்சாங்க. அதப் பாத்துட்டு ஒரு அமெச்சூர் ட்ருப்ல இருந்து ‘‘நீங்க எங்க ட்ருப்ல வந்து நடிக்கணும்’’ அப்டினு கேட்டாங்க.

நாடகக் கம்பெனில இருந்து வந்த இந்த வாய்ப்பை ஒத்துக்கிட்டீங்களா? வீட்டுல என்ன சொன்னாங்க?
அப்ப நான் பி.டெக். இரண்டாவது வருஷம் படிச்சிட்டிருந்தேன். அதனால எங்க வீட்டுல வந்து வாங்கி பரீட்சை லீவுல ஏப்ரல், மேல நாடகங்கள் போடுவாங்க. டிசம்பர் மாசம் விட்டுடனும்னு சொல்லி அதுக்குள்ள எவ்வளவு வேணாலும் நாடகம் போட்டுக்கலாம்னு சொன்னாங்க. இப்படிதான் நான் நாடகத்துறையில நுழைஞ்சு 67, 68ல இருந்து இதுல முழு நேரமா ஈடுபட ஆரம்பிச்சேன். நான் கல்லூரில படிக்கும் போதே முழு நீள நாடகம் ஒண்ணு எழுதினேன். அத மேடையிலேயே கிட்டதட்ட 400, 500 தடவை போட்டிருக்கோம். தொலைக்காட்சியிலயும் போட்டு அது பாப்புலராச்சு, 40 வருஷம் ஆச்சு இன்னமும் அது டிவிடி போட்டு போயிட்டிருக்கு.

ஒரு படைப்பு அப்டிங்றது காலத்த தாண்டி நிக்குதுங்றதே படைப்பாளிக்கு மகிழ்ச்சிதரக்கூடிய விஷயம். அந்த வகையில இத்தனை வருஷம் ஒரு படைப்பு பேசப்படுதுங்றப்போ கிடைக்குற சந்தோஷம் தனிதான். இல்லையா?
எந்த தொழிலுமே இதுல நமக்கு என்ன வரப் போகுதன்னு நினைக்காம அதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி இது தான் நம்ம முழு நேர வேலைன்னு செய்யனும். நான் அன்னைக்கு மேடை நாடகங்கள் போடும் போதும் வேலைக்குப் போகணுங்ற ஆர்வமிருந்ததே தவிர இது மூலமாக நாடகத்துறையில பிரகாசிக்கணும்ங்ற ஆர்வம்லாம் கிடையாது. அந்த நாடகத்த நல்லா கொண்டு வரணும்ங்ற எண்ணம் மட்டும்தான். அதையே தொலைக்காட்சில கொண்டு வரும்போது நான் சினிமாவுல டைரக்டராகி நிறைய படங்கள் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இத வந்து தொலைக்காட்சில கொண்டு வரணுமா? இதுல என்ன பெரிசா காசு வரப்போகுது, பேரு வரப் போகுதுனு நினைக்கல. அன்னைக்கு அதுலமுழு கவனத்த செலுத்த முடிஞ்சது. அப்படி செலுத்தியதால் இன்னிக்கும் அது பேசப்படுது... அது தான் அதனோட வெற்றினு நினைக்கிறேன்.

உங்களோட முதல் திரைப்பட வாய்ப்பு பத்தி சொல்லுங்களேன்.
என்னுடைய நாடகங்கள் தொடர்ந்து வெற்றியடையவே நிறைய சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. சினிமா வாய்ப்பெல்லாம் வருதேன்னு ரொம்ப சந்தோஷம். ஆனாலும் படிப்ப முடிச்சுட்டு தான் சினிமாவுக்குப் போகணும்ங்றதுல வீட்டுல கண்டிப்போட இருந்தாங்க. அஞ்சு வருசப் படிப்ப முடிச்சிட்டு வேலைக்குப் போகும் போது நான் கேட்டது ஒண்ணே ஒண்ணு. வேலைலே கால் வைக்கும் போதே நான் பாப்புலர் மனுஷன். என்னுடைய நாடகங்கள் சினிமானு கூப்பிடுவாங்க. நான் எனக்குண்டான லீவ மட்டும் எடுத்துக்குறேன்.

நான் அதிகமா எதிர்பார்க்கல. ஏனா என்னோட அந்த உத்தியோகம் ரொம்ப பொறுப்பான உத்தியோகம். என்கிட்ட 150 பேர் வேலை செய்றாங்க. நான் அன்னாடம் லீவு போட்டுட்டு சாயந்திரம் வந்தல்லாம் செய்யமுடியாது. லீவுங்கறது முன்னாடியே சொல்லிட்டுதான் எடுக்கணும்ங்ற நிலைமை இருந்துச்சு. அப்படி இருந்தாலுமே நான் வேலை செய்யும் போது நாடகங்களும் போட்டுட்ருந்தேன். என் நாடகங்கள்ல புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாத்திருக்காங்க. அது மாதிரி இயக்குனர்கள் ஸ்ரீதர், பாலசந்தர், திருலோகசந்தர் எல்லோரும் பாத்துருக்காங்க. பாராட்டிருக்காங்க. அவங்க எப்படியும் நம்மள எழுதக் கூப்பிடுவாங்க. நடிக்கக் கூப்பிடுவாங்க. அப்படியே போய் சின்ன சின்னதா நடிச்சுட்டு வந்தேன். ஏனா வெளியூர்க்குக் கூப்பிட்டாங்கன்னா வேலைக்கு லீவு போட முடியாது.

ஆனாலும் ஒரு கட்டத்துல நான் எழுத ஆரம்பிச்சேன். சினிமாக் கதை மட்டும். இல்ல வசனம் மட்டும்னு எழுத ஆரம்பிச்சேன்.நான் முதல்ல அதாவது 1970&ல வசனம் எழுதினது. ‘‘புதிய வாழ்க்கை’’னு ஒரு படம் அப்புறம் ‘‘கை நிறைய காசு’’னு எழுதினேன். அது இன்னும் தொலைக்காட்சில போட்டிருப்பாங்க. அது நாகேஷ் அவர்கள் ஹீரோவா நடிச்ச படம். அப்புறம் ‘‘பெண்ணொன்று கண்டேன்’’னு ஒரு படம் எழுதினேன். அப்புறம் சிவாஜி அவர்கள் நடிச்ச ‘‘ஹிட்லர் உமாநாத்’’னு ஒரு படம் எழுதினேன். அப்படி என்னுடைய கலைப்பயணம் போய்ட்டுருக்கும் போது என்னுடைய ஒரு மேடை நாடகத்தை சினிமாவாவும் எடுத்திருக்காங்க. அப்ப என்னா மேடை நாடகங்கள்ல இருக்கிற அநத் சுவாரசியமான விஷயம் சினிமாவா மாறும் போது அதுல இருக்குற பொழுது போக்கு அம்சங்கள் அதிகமாகும் போது அது வெற்றி பெறாம போயிடும். எல்லாம் என்கிட்ட நல்ல நாடகத்த சினிமாக்கு கொடுத்து கெடுத்துட்டியேனு சொல்வாங்க. உனக்கு தேவையா இதுனு கேட்டாங்க. அதனால சில சமயம் நான் கொடுக்காமலேயே இருந்தேன்.

அப்ப உன்னுடைய ஒரு நாடகத்த என்னுடைய நண்பர் எடுக்க ஆசைப்படுறாங்கன்னு சொல்லும்போது அத ஸ்ரீதர், பாலசந்தர் மாதிரி பெரிய டைரக்டர்ட்ட தான் கொடுப்பேன். யாராவது எடுத்து கொடுத்துடு நாங்க (சினிமா மாதிரி பண்ணியிருக்கே 48 சீன் இருக்கு அப்ப பெரிய டைரக்டர்ள்ல பாலசந்தர் வந்து பாத்துட்டு இதுல நான் பண்றதுக்கு என்ன இருக்கு? நல்ல கேமராமேன், அசோசியேட் வச்சு நீயே டைரக்ட் பண்ணு சொல்லிட்டாங்க. அப்படியாக நான் எங்கேயும் உதவியாளனா வேலை செய்யாம என்னுடைய முதல் படமான ‘‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’’னு 1980&ல ரிலீசான கருப்பு வெள்ளைப் படத்தை எடுத்தேன். நான் ஆரம்பிக்கும் போது அது கருப்பு வெள்ளப் படமா தான் இருந்தது. ஆனா படம் முடிக்கம்போது கலர் வந்துடுச்சு. அப்ப கருப்பு வெள்ளைப் படங்களுக்கு ஒரு தேக்கம் வந்துடுச்சு. இருந்தாலும் வெளிவந்த 3,4 படங்கள்ல என் படமும் ஒண்ணு. ஆனாலும் 75 நாட்களுக்கு மேல பெரிய தியேட்டர்கள்ல ஓடி ஒரு பெரிய வெற்றிய ஏற்படுத்தி தந்தது.

ஒரு உதவி இயக்குனரா இல்லாம நேரடியா இயக்குனரான அந்த அனுபவம் ரொம்பவே வித்யாசமானது. இன்றைக்கு அந்த நிலைமை ரொம்ப குறைவு. நீங்க கொஞ்சம் முன்னாடியே வித்தியாசமான முறையில திரைத்துறைக்குள்ள வந்திருக்கீங்க.
நிறைய பேரு கேக்கும் போது ‘‘நான் வந்த பாதையிலவந்தது தவறுனு’’ சொல்லியிருக்கேன். நான் எங்கேயும் உதவி இயக்குனரா வேலை செய்யாட்டியும் நான் நடிச்ச படங்கள் எல்லாத்துலயும் நான் கூடவே இருந்திருக்கேன். என்னுடைய கதை, வசனங்கள் 18 படங்களுக்கு எழுதியிருக்கேன். அப்ப சினிமா என்னனு ஒரு பாதி தெரிய ஆரம்பிச்சது. அதே மாதிரி நம்ம எழுதுற வசனம் எப்டி எடுக்கப்படுதுனு பார்ப்பேன். சிவாஜி நடிச்ச படங்கள்ல என்னுடைய பங்களிப்பு நிறைய இருந்தது. ‘‘கௌரவம்’’னு சிவாஜி நடிச்ச படம் என்னுடைய மேடை நாடகம் தான். அந்த நாடகத்த சினிமாவா எடுக்கும் போது செய்ய இருந்திருக்கேன். ஆதனால நிறைய டெக்னிக் சமாச்சாரங்கள் எல்லாம் கத்துக்கிட்டேன். நான் எழுத்தாளனா, நடிகனா இருக்கும் போது கத்துக்கிறதுக்கு நிறைய வாய்ப்பு கிடைச்சது. அது வந்து எனக்கு ரொம்பவே கைகொடுத்தது. அதனால உதவி இயக்குனரா அனுபவம் இல்லாம சினிமாவுக்கு வரக்கூடாது.

நீங்க நடிச்சதுலேயே குறிப்பிடத்தக்க படங்கள்னா எதைச் சொல்வீங்க?
எனக்கு இயக்குநராகணும்ங்றது தான் குறிக்கோளா இருந்துருக்கு. நான் முதல் படம் ‘‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’’ செய்யும் போது தான் பாய்ராஜ் வர்றாங்க. இவங்கள்லாம் அவங்களே எழுதி, அவங்களே நடிக்கிறவங்க். அதே பாணில நானும் செய்யக்கூடாதுனு சொல்லிட்டு என் படங்களில் நான் நடிப்பதில்லைனு வச்சுக்கிட்டேன். நான் இயக்கும் படங்கள்ல வெளியே இருந்து தான் ஆர்ட்டிஸ்ட் எல்லாம் கூப்பிடுவேன். முதல்ல 8, 10 படம் நான் இயக்குனதுல நான் நடிக்கல. அப்புறம் தான் ‘‘புல்லாங்குழல் அடுப்பூதுகிறது’’ படத்துல மெயின் ரோல்ல நடிச்சேன். அப்புறம் ‘‘அண்ணே, அண்ணேன்’’னு ஒரு படத்துல முக்கிய வேடத்துல நடிச்சேன். இப்படி ஒரு நாலு படம் பண்ணின பிறகு தெலுங்கு படங்கள் பண்ண போயிட்டேன். தெலுங்கு படங்கள் ஆந்திராவுல எடுத்ததுல தமிழ தொடர்பே இல்லாம போயிடுச்சு.

அப்ப ‘‘தமிழ மறந்துட்டனு’’ எல்லாரும் கேட்பாங்க. தாய்வீட மறக்கலாமானு கேக்கும் போது ஏதாவது ஒரு தொடர்பு இருக்கணுமேனு இயக்காம போனாலும் நடிக்கிறதுன்னு முடிவு பண்ணி தமிழ்ல நிறைய படங்கள் பண்ண ஆரம்பிச்சேன். மாசத்துக்கு ஒரு 4, 5 நாள் படங்கள் தமிழ்ல நடிக்கவும் பத்து நாட்களல தெலுங்குல டைரக்ட் பண்ணவும் ஆரம்பிச்சேன். 84&ல இருந்து 2000 வரை தெலுங்கு படங்கள் மட்டும் தான் பண்ணிட்டிருந்தேன். 32 படங்கள் பண்ணியிருக்கேன். இருந்தாலும் தமிழ் மக்கள் என்னைய மறக்காததுக்கு காரணம் நான் தொடர்ந்து தமிழ் படங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். நான் டைரக்ட் பண்ண தெலுங்கு படங்கள் எல்லாம் மொழி மாற்றமாகி தமிழுக்கு வந்திருக்கும். அதனால நான் மறக்கப்படவில்லை.

இல்லனா ஒரு 5 வருஷம் ஃபீல்டுல இல்லைனா மறந்துடுவாங்க. 3000, 4000 நாடகங்கள் ஓடிச்சதால என்னைய ஞாபகம் வச்சிருந்தாங்க. அப்புறம் 2000 க்கு பிறகு நிறைய தெலுங்கு படங்கள் பண்ணியாச்சு. குடும்பத்த விட்டு பிரிஞ்சி இருக்கோம். அவங்க அதாவது என் குடும்பம் சென்னல இருந்தது. அப்ப பிள்ளைகள் வளர்றதையே கண்கூடா பார்க்க முடியாம இருந்துச்சு. அந்த காரணத்துக்காகவும் நண்பர்கள் தெலுங்கு போதும் தமிழ்ல வந்து பண்ணுனு சொன்னதாலயும் இங்க வந்துட்டேன். நண்பர்கள் கமலஹாசன், பாக்யராஜ்லாம் ‘‘என்னங்க தமிழ விட்டுட்டு அங்க போய்ட்டீங்கன்னு சொல்வாங்க. அதனால 97&ல பிஸ்தா பண்ணேன். அப்புறம் நிறைய பண்ணியிருக்கேன்.

சில குறிப்பிட்ட படங்கள்னா சொல்லியிருக்கலாம். ஏகப்பட்ட படங்கள் அதனால சொல்லமுடியல இல்லையா?
ஆமாங்க. எல்லா நடிகர்கள் கூடவும் நடிச்சிருக்கேன். கிட்டத்தட்ட எல்லாருக்கும் அப்பாவா நடிச்சிருக்கேன்.

உங்களுக்கு கதாநாயகனா நடிக்கனும்னு ஆசையே இல்லையா?
இல்லைம்மா. எனக்கு கதாநாயகனா நடிக்கிற ஆசைய முதல்ல இருந்ததே வளத்துக்கல. ஹீரோனா முழு நேரமா லவ் பண்ணுவாரு. வில்லன் வந்தா துரத்தி துரத்தி ஃபைட் பண்ணுவாரு. ஹீரோக்கான பர்பாமன்ஸ் ரொம்ப கம்மியா இருக்கும். கேரக்டர்னு பண்ணும்போது ஒரு கேரக்டர்னு பண்ணும்போது ஒரு கேரக்டர் ஒரு மாதிரி, இன்னொரு கேரக்டரு வேற மாதிரி செஞ்சுட்டு போக முடியும். நம் நடிப்புக்கு சவாலா இருக்கிறது. குணச்சித்திர கதாபாத்திரங்களே தவிர கதாநாயக பாத்திரம் இல்லை.

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இயல்பாவே இருக்குமா?
ஐயோ, நான் ரொம்ப சீரியஸான ஆளுங்க. வீட்டுல கேட்டுப் பாருங்க. அவங்க சொல்வாங்க. எனக்கு இயல்பா கேட்டுப் பாருங்க. அவங்க சொல்வாங்க. எனக்கு இயல்பா வர்றது நகைச்சுவை. ஆனாலும் அதுலயும். நான் கண்டிப்பு, கறாராத்தான் இருப்பேன். நகைச்சுவையை சரியான அளவுல கொண்டு போய் சேர்க்கணும். நகைச்சுவைங்கறது. சினிமா கண்டுபிடிச்சவுடனேயே திரையில் வளர ஆரம்பிச்சுடுச்சு. நகைச்சுவை மூளைக்கு வேலை கொடுக்குறதா இருக்கணும்னு நிகைக்கிறேன்.

நீங்க நடிச்ச படத்துல உங்களுக்கு பிடிச்ச படம் எது?
இப்போதைக்கு ‘‘பொய் சொல்லப் போறோம்’’ அதத்தான் சொல்றேன். முக்கியமா நான் என் கேரக்டராயும், கதையாயும் கேட்பேன். அது முக்கியமா இருந்தா நடிப்பேன். இல்லனா வேற யாராவது கூப்பிடுங்கன்னு சொல்லிடுவேன். பொதுவா வருஷத்துல 3, 4 படத்துக்கு மேல நடிக்கக் கூடாதுனு ஆரம்பித்துலயே நினைச்சத இப்ப வரைக்கும் கடைபிடிக்கிறேன். இப்ப நான் நடிக்கிற படத்தோட கதை ரொம்ப நல்ல கதை. அதாவது காதலிக்கிறதுக்கும் ரெண்டு பேருடைய மனசு ஒத்துப் போனா போதும். ஆனா கல்யாணம்னு வரும் போது ரெண்டு குடும்பமும் ஒத்துப் போகணும். குடும்பத்துக்குக் குடும்பம் படிக்கணும்.

கவிஞர் அறிவுமதி



உங்க சிறு வயது அனுபவங்கள் பற்றி சொல்லுங்களேன்.
விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள தூக்கினனூர் என்ற சின்னஞ்சிறிய ஊரில் பிறந்தவன். மணிமுத்தாறு என்ற வெள்ளிமலையிலிருந்து இறங்கி வருகிற ஆற்றில் 14 ஆண்டுகள் குளித்த அந்த ஈரம் தான் மணிமுத்தாறு என்கிற அந்த அம்மாவின் ஈரம்தான் இன்னும் என் விரல் வழியே கவிதைகளாக, எழுத்துக்களாக கசிந்து வந்து கொண்டிருக்கின்றன என்று கருதுகிறேன். ஆறு ஓடினாலும் எனது ஊர் ஒரு புன்செய்க் காடாகத்தான் இருந்தது. அங்கே கம்பு, நெல், கேழ்வரகு, பச்சைப் பயறு, தட்டைப்பயறு, சாமை, திணை என என்தாய் மடிகணக்க விதைகளை அள்ளி அள்ளித் தெளித்து பயிர் வைத்து வாழ்ந்த அந்த வயல்வெளிகளில் நான் ஓடித் திரிந்தேன்.

அந்த காலக்கட்டங்களில் என்னுடைய உழைக்கும் அந்த தாய்கள், தந்தைகள், பாட்டன்கள், பாட்டிகள் அள்ளிக் கொடுத்த நாட்டுப்புறப் பாடல்கள்தான் என் காதுகள் வழியே உள் நுழைந்து என் இதயம் நிறைய அது கூடு கட்டிக் கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து சிறகடிக்கிற பறவைகளாகத்தான் இன்று என் எழுத்துக்களாக இருந்தாலும், பாடல்களாக இருந்தாலும், சிந்தனைகளாக இருந்தாலும் அனைத்தும் அந்த புன்செய் காட்டு என் மூதாதையர்கள் போட்ட பிச்சை அல்லது பரிசு என்றுதான் சொல்வேன்.

புதிதாக எழுத வருகிறவர்களுக்கும், புரிதலோடு எழுத வருகிறவர்களுக்கும் ஒரு தமிழ்ப் பாலமாய் விளங்குகிற நீங்கள் கவிஞராயிருந்து பாடலாசிரியராய் வளர்ந்த பயணம் பற்றிச் சொல்லுங்கள்.
என்னுடைய உழைக்கும் மக்களுடைய பாடல்களை உள்வாங்கி வைத்திருந்தேன். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வ.சுப.மாணிக்கம், தண்டபாணி தேசிகர், வெள்ளை வரனார் போன்ற பழம்பெரும் பேராசிரியர்கள் எனக்கு அள்ளிக் கொடுத்த தமிழ் செம்மையோடும்தான் சென்னைக்குச் சென்றேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘முருகன் நடுகல் வீரனே’ என்கிற முனைவர் பட்டத்திற்கான ஆய்வாளனாகத்தான் அங்கே சென்றேன். ஆனால் திரைப்பட உலகில் இயக்குனர்கள் பாக்யராஜ், பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோரிடம் நான் ஏறக்குறைய 10, 15 படங்களுக்கு உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளேன்.

அந்த காலகட்டத்தில் நான் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற உணர்வோடுதான் அந்த திரையுலகத்திற்குள் நுழைந்தேன். என்னுடைய ஆண் தாய் என்று சொல்லத்தக்க அளவிற்கு என் உள்ளத்தில் ஊடுருவியிருக்கும் பாரதிராஜா அவர்களுடைய 16 வயதினிலே என்கிற திரைப்படம்தான் என்னையும், என்னைப் போன்றவர்களையும் நீங்களும் திரைப்பட இயக்குனர்களாக வரலாம். திரைக்கதை எழுதலாம், பாடல் எழுதலாம் என்கிற நம்பிக்கை ஊட்டிய படம். அதுவரையிலும் திரைப்பட உலகம் என்பது தமிழர்களுக்கு அதுவும் அடிநிலைத் தமிழர்களுக்கு ஒரு இரும்புக் கோட்டையின் சுவர் எப்போது திறக்கும், திறக்காது என்கிற அவநம்பிக்கையிலேயே இருந்த தமிழர்களுக்கு அந்த இரும்புக்கதவை உடைத்து எங்களையும் உள்நுழைய வைத்த உணர்வுகளுக்குக் காரணமானவர் எம் ஆண் தாய்கள் இசைஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர். அப்போது அந்த தளத்தில் என் நண்பர்கள் ஆங்காங்கே நீ எழுது, எழுது என்று சொன்ன போது நான் இயக்குனராக வேண்டும் என்பதற்காக மறுத்து வந்தேன்.

அந்த காலகட்டத்தில் தான் ‘கிழக்குச் சீமையிலே’ என்கிற படத்தில் பாரதிராஜா அவர்களோடு இணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த என் உணர்வுகளைக் கவனித்த அண்ணன் தயாரிப்பாளர் தாணு அவர்கள் ‘நான் சிறைச்சாலை என்கிற ப்ரியதர்ஷனின் படத்தின் தமிழ்மொழியை எடுக்கிறேன். அதில் உரையாடல்கள், பாடல்கள் அறிவுமதி என்று போடப் போகிறேன். என்ன சொல்கிறாய்’ என்று கேட்க நான் மறுக்காமல் சரியென்று சொல்லிவிட்டேன். சிறைச்சாலை என்கிற படத்தில் இசைஞானியின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல்கள்தான் ‘செம்பூவே பூவே’, ‘மன்னன் கூறைச்சேலை’, ‘சுட்டும் விழிச் சுடர் பார்வையிலே’, ‘ஆலோலங்கிளி தோப்பிலே’, ‘இது தாய் பிறந்த தேசம்’, என்கிற 5 பாடல்கள். அது உலகத் தமிழர்கள் அனைவரின் இல்லத்திற்கும் அழைத்துச் சென்று அவர்களுடைய செல்லப் பிள்ளையாக என்னை அறிமுகம் செய்து வைத்தன.

திரைத்துறையின் போக்கு இப்போது எப்படி இருக்கிறது?
இப்போது திரைப்படத்துறையின் அகப்போக்கு சரியானதாக, திருந்தியதாக தெரியவில்லை. ஆனால் புறப்போக்கு என்று பார்க்கிற போது தமிழ் இன உணர்விற்கும், உலகத்தில் எங்கே தமிழன் காயப்பட்டாலும் அதற்கு மருந்து தடவ நாங்களும் தயாராக இருக்கிறோம் என்கிற உணர்வுகளை இன்றைக்கு திரைப்படத்துறை காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் திரைப்படத்துறை என்பது பல்வேறு வகையான இன் மக்களுடைய கூத்துப்பாடல்கள், நடவுப் பாடல்கள், தாலாட்டுகள், தெம்மாங்குகள், ஒப்பாரிகள், அவர்களுடைய கூத்து அடவுகள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு நவீன துறைதான். அந்த தமிழ்த்திரைத்துறை என்பது தமிழர்களுக்கானத் திரைத்துறையாக இன்னும் முழுமையாக ஒரு வெற்றியைக் காட்டவில்லை.

தமிழில் எடுக்கப்படுகிற திரைப்படங்களாக இருக்கின்றன. ஆனால் தமிழர்களுக்கான திரைப்படங்களாக இருக்கின்றனவா என்றால் இல்லையென்றே சொல்லலாம். எனவே இந்தப் போக்கு அதாவது தமிழர்களுக்காக எடுக்கப்படுகிற 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், உதிரிப்பூக்கள், பருத்திவீரன் போன்ற தமிழர்களுடைய முகங்கள், தமிழர்களுடைய கதாபாத்திரங்கள், தமிழர்களுடைய வாழ்வியலினுடைய பல்வேறு வகையான தளங்களை இன்னும் முழுமையாக திரைக்கதையாக்கத்திற்குள் கொண்டு வர வேண்டும்.

அதன் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை எடுத்து அலசுகிற திரைப்படங்கள் இன்னும் அதிகமாக வருமானால் அந்த நாளில்தான் இது செழித்த திரைப்படத்துறையாக, தமிழர்களுக்கான கலைத்துறையாக நான் ஏற்றுக் கொள்வேன். அதற்கான முயற்சிகளில் இன்றைக்கு பல்வேறு வகையான என்னுடைய இளைய தம்பிகள் இயக்குனர்களாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கை விதை ஆங்காங்கே முளை விட்டுக் கொண்டிருக்கின்றன.

திரைத்துறையில் பாடலாசியருக்கான மதிப்பு எப்படி இருக்கிறது?
இன்றைக்குப் பாடலாசிரியருக்கான மரியாதை என்பது ஏறக்குறைய அனைத்து மக்களும் யார் எழுதிய பாடல் என்று தெரிவதற்கு ஊடகங்கள் இன்னும் உதவி செய்யாத ஒரு சோகம் இருக்கத்தான் செய்கிறது என்பதை இந்த ஊடகத்தின் வாயிலாகவும் பதிவு செய்கிறேன். இசையமைப்பாளர் பெயர்களைச் சொல்கிறார்கள், எந்த படம் என்று சொல்கிறார்கள், இதை எழுதியவர் யார் என்று மட்டும் சொல்வதில்லை.

ஆனாலும் பாடலாசிரியர்கள் தளத்தில் கண்ணதாசன், வைரமுத்து, வாலி என்று அதீதமாக தெரிந்து கொள்ளப்பட்ட முகங்களை, பெயர்களைத்தான் சொல்கிறோமே தவிர, ஆலங்குடி சோமு, தேவநாதன், சுரதா, மாயவனார், மருதகாசி, பூவை.செங்குட்டுவன், புலமைப் பித்தன், யுகபாரதி, கபிலன், தாமரை, தேன்மொழி என்று வரிசை கட்டி 10 பாடல்கள் எழுதினாலும் அந்த பாடல்களுக்குள்ளாகவும் சிறப்பாகத் தமிழை நிறுத்துகிறார்கள் என அறிமுகப்படுத்த தவறுகின்றன என்ற குற்றச்சாட்டினை இங்கே முன் வைக்கிறேன்.

‘73, அபிபுல்லா சாலை’ நிறைய படைப்பாளிகளை தமிழுலகுக்குக் கொடுத்திருக்கிறது. இது தாங்கள் திட்டமிட்டு செய்த பணிதானா?

‘73, அபிபுல்லா’ சாலை இன்று ‘181 அபிபுல்லா’ சாலையாக மாறியிருக்கிறது. எண்தான் மாறியிருக்கிறதே தவிர என்னுடைய எண்ணங்கள் மாறவில்லை. என்றைக்கும் தமிழ்நாட்டின் எந்த மூலை முடுக்குகளிலிருந்து வருகிற இளைஞர்களுக்கும் ஒரு தாய்மைக் கூடாக இருந்து பல படைப்பாளிகளைத் திரைத்துறைக்கு வார்த்தெடுக்கக் கிடைத்த ஒரு தமிழ்க்கூடாகத்தான் பார்க்கிறேன். இன்றைக்கு அந்த சூழல் இருக்கிறதா என்று என்னால் சொல்ல முடியவில்லை.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கேதான் பழநி பாரதி, முத்துக் குமார், யுக பாரதி, கபிலன் என பாடலாசிரியர்களான என் தம்பிகள், இதைப் போலவே இயக்குனர்களான சுந்தர்.சி, சீமான், செல்வ பாரதி, கவிதா பாரதி, ஜெயா என வரிசை கட்டி பல தம்பிகள் இங்கே தான் வளர்ந்தார்கள். என்னுடைய வளர்ச்சி அல்லது வளர்த்தெடுத்தேன் என்று சொல்வதை விட அந்த புன்செய்காட்டில் வளர்ந்த சூழல்தான் காரணம் என நினைக்கிறேன்.

முருங்கை மரத்தில் ஏறி காய்பறிக்கச் சொல்கிற கைகள் நான் இருபதோ, முப்பதோ பறித்துக் கொடுத்தால் முதலில் பதினைந்து காய்களை ‘அந்த அத்தை வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்திட்டு வா, மாமா வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்திட்டு வா, சித்தப்பா வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்திட்டு வா, பெரியப்பா வீட்டுக்குக் கொண்டு போய் கொடுத்திட்டு வா’ என்று பல வீடுகளுக்கு அந்த முருங்கைக்காய்களை பறித்த என் கைகளாலேயே கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்து நான்கு முருங்கைக்காய்களைத்தான் என்னுடைய வீட்டுக்குள் எடுத்துச் செல்ல என்னை அனுமதிப்பார்கள்.

எனவே நமக்குக் கிடைத்த ஒன்றை அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிடுத்தான் நாம் ருசி பார்க்க வேண்டும் என்று சொன்ன என் அம்மாவின், என் மூதாதையர்களின் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற பண்பாட்டுத் தளத்தினுடைய வெற்றியாகத்தான் இந்த 73, அபிபுல்லாசாலையை பார்க்கிறேனே தவிர தனித்த அறிவுமதியினுடைய ஒரு குணமாகப் பார்க்கவில்லை

73 அபிபுல்லா சாலை நிறைய படைப்பாளிகளைத் திரையுலகுக்குத் தந்திருக்கிறது. இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. 73 அபிபுல்லா சாலை மட்டும்தான் ஆலமரம் என்பது அல்ல. என் தம்பிகள் இருக்கும் ஒவ்வொரு இடமும் ஆலமரமாகி அவர்களும் என்னைப் போலவே பல படைப்பாளிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தோப்பாக இந்த தனிமரம் வளர்ந்து செழித்திருக்கிறது என்ற மகிழ்ச்சியை உள்ளம் நெகிழ பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போதும் அந்த வழிகாட்டுதல்கள் தொடர்கிறதா?
வழிகாட்டுதல் தொடர்கிறது. ஆனால் வருகிறவர் இதுதான் பாலாவை நான் பாலுமகேந்திராவிடம் அறிமுகப்படுத்தினேன் என்ற கட்டுரையைப் படித்துவிட்டு மேம்போக்காக வருகிறார்கள். அதற்கான திறமையும் அடையாளப் பதிவுகளும் இல்லாமல் என்னை வந்து பார்த்துவிட்டால் திரைப்பட உலகிற்குள் நுழைந்துவிடலாம் என்கிற ஆசையோடு வருகிறார்களே தவிர அவர்களுடைய அந்த திறமையின், முயற்சியின், வலிகளின் அடையாளங்களை எனக்கு காட்டியவங்களாக பெரும்பகுதி வரவில்லை என்பது ஒரு சோகமாத்தான் நான் பார்க்கிறேன்.

திடீர்னு விவசாயத்துல கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டீர்களே ஏன்?
16 வயது வரை எந்த வாழ்க்கையை வாழ்ந்தேனோ, எந்த மண்ணில் வளர்ந்தேனோ அங்கே இப்போது சென்றிருக்கிறேன். விவசாயக் குடும்பங்களின் பண்பாட்டில் ஊறி வளர்ந்த நான் இதுதான் திணை, சாமை, வரகு, என்று என் பிள்ளைகளுக்கு காட்டுவதற்கு அந்த மண்ணில் அந்த பயிர்கள் விளையவில்லை. எல்லாம் செயற்கையாகி விட்டது. 40, 50 மாடுகள் வளர்த்த குடும்பத்தில் இன்று ஒரு மாடு கூட இல்லை என்ற சோகம் எனக்குள் எப்போதும் இருந்துவருகிறது. இப்போதுதான் அதை உறைப்பாக உணர்ந்தேன்.

நம்முடைய அடையாளங்களை இழந்துவிட்டு, நமது மொழியை இழந்துவிட்டு, தமிழினம், தமிழன் என்று சொல்வதற்கு நமக்கு உரிமையே கிடையாது. அதனால்தான் மறுபடியும் எனது ஊருக்கு வந்திருக்கிறேன். அங்கே என்னுடைய மண்ணில் மண்புழுக்களே இல்லாத வயல்வெளிகளைப் பார்க்கிறேன். மறுபடியும் எனது மண்ணில் மண்புழுக்களை நெளிய விடுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதைப் போலவே என்னுடைய மரபு சார்ந்த மரங்களை நட்டு வைத்திருக்கிறேன். செயற்கை உரம் போடாமல் இயற்கை உரத்திலேயே விளைகிற காய்கறிகளை இப்போது என் தோட்டத்தில் போய் நான் பறித்து சாப்பிட தொடங்கியிருக்கிறேன்.

தமிழில் ஆங்கிலம் கலப்பது எவ்வளவு கொடுமையானதோ அப்படித்தான் நம்முடைய மண்ணில் நம் இனம் சாராத அந்த தைல மரங்களை நடுவதும் என்கிற உணர்ச்சியை என் மண் இப்போது எனக்குச் சொல்லியிருக்கிறது. என் மண் என்பது என் தாய். அந்த தாயைக் களங்கப்படுத்தக் கூடாது. அவளை மறுபடியும் கழுவிக் குளிப்பாட்டி அவள் முகத்தில் ஒரு ஆதிப் புன்னகையை மீண்டும் நான் பார்க்க வேண்டும் என்கிற பசிதான் ஒரு எழுத்தாளன் விவசாயியாக மாறக்காரணம். ஒரு மண்ணில் ஒரு விதையை நட்டு, முளைவிட்டு அதிலிருந்து பசுமை பார்க்கிறவன்தான் எழுதுவதற்கே லாயக்குள்ளவன் என்கிற உணர்ச்சியை என் மண்தாய்தான் எனக்கு ஊட்டி வைத்திருக்கிறாள்.

நீங்கள் திரைத்துறையிலிருந்து விலகக் காரணம்?
திரைத்துறையிலிருந்து நான் விலகவில்லை. இப்போதும் நான் குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். பாடல் எழுதியதிலிருந்து விலகியது என்பது இன்றைக்கு வருகிற பாடல்கள் அனைத்தும் பெண்களை உடல்ரீதியாக வர்ணிக்கச் சொல்கிற பாடல்களாகவே பெரும்பகுதி இருக்கின்றன. அத்தகைய சூழலில் பெண்களைக் கொச்சை செய்யும் பாடல்களை உடல் உறுப்புகளை
வர்ணிக்கிற பாடல்களை எழுதிவிடக்கூடாது என்ற உணர்வோடுதான் நான் அதை மறுத்தேன்.

அதுமட்டுமல்ல தங்கள் உடலுறுப்புகளை இழந்தபிறகும் கூட தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக பொறுப்புணர்வுகளை இழக்காத தம்பி, தங்கைகள் போராட்டக் களத்திலே போராடிக் கொண்டிருக்கிற தமிழ் வாழ்வியல் சூழலில் அந்த தங்கைகளுடைய உடல் உறுப்புகளை வர்ணித்துதான் நான் காசு வாங்கி என் பிள்ளைகளுக்கு உடைகள் வாங்கித் தர வேண்டும் என்றால் அது கேவலமான வாழ்க்கை என்றுணர்ந்தே இந்த முடிவை எடுத்தேன்.

ஒரு கவிஞனுக்கு நிம்மதி எது?
உலகம் எந்தவித அணுஆயுத சோதனைகளும் இல்லாமல் எந்தவித போருமில்லாமல் அனைத்து மக்களுக்குமான, போர்க்குண்டுகள் விழாத வானத்தை என்றைக்கு அவன் உணர்கிறானோ அன்றைக்குத்தான் கவிஞனுக்கு அமைதி. ஏனென்றால் கவிஞன் என்பவன் உண்டு, களித்து ஏதோ மிதப்பவனாகத்தான் சமூகமே கருதுகிறது. அல்ல அல்ல. உலகத்தின் எந்த மூலையிலும் ஒரு வண்ணத்துப் பூச்சி காய்மபட்டாலும் கூட அதற்கு மருந்து தடவ வேண்டும் என்ற தேடல் உள்ளவன்தான் கவிஞனாக இருக்க முடியும் என்ற தளத்தில் சொல்கிறேன்.

எந்த மண்ணிலும் போர்கள் இருக்கக் கூடாது. எந்த மக்களையும், எந்த வல்லாதிக்க உணர்வுகளும் நசுக்கக் கூடாது. குருதி கசிவு கூடாது. கண்ணீர் கசிவு கூடாது. போர் அமைதி, போர் நிறுத்தம் என்கிற நிம்மதியை உலகம் முழுதும் என்றைக்கு ஒவ்வொரு இனத்திற்கும் உரிமையாக்குகிறதோ, நான் இன்னொருவனுக்கு அடிமை இல்லை. இன்னொருவனை அடிமையாக்கவும் மாட்டேன் என்று நினைக்கிற சமூகத்தை என்றைக்கு உணர்கிறானோ அன்றைக்குத்தான் கவிஞன் நிம்மதியடைவான்.

கவிஞனுக்கான தகுதிகளாக எதைச் சொல்வீர்கள்?
இயற்கையின் பிள்ளையாய், காயத்திற்கான மருந்தாய் தன்னை உணர வேண்டும், உணர்த்த வேண்டும். அதுதான் அவனுடைய தகுதிகளாக நான் பார்க்கிறேன்.

நட்புக்காலத்தின் வெற்றி எதிர்பார்த்ததுதானா? நட்புக்காலம் & 2 என்று ஏன் கொண்டு வரவில்லை?
நான் ஏறக்குறைய ஒரே இரவில் 60, 70 கவிதைகள் எழுதினேன். அந்த கவிதைகளைத்தான் இன்றைக்கு நீங்கள் நட்புக்காலமாகப் பார்க்கிறீர்கள். இந்த நட்புக்காலம் எழுதிமுடித்துவிட்ட பிறகு தம்பி பழநிபாரதி, தபு சங்கர் போன்றவர்களும் நானும் உட்கார்ந்துதான் கவிதைகள் எது எது அச்சுக்கு வரலாம், எதுயெது வேண்டாம் என்று முடிவு செய்து இந்த 40 கவிதைகளாக முதலில் வெளியிட்டோம். அதை வெளியிடுகிற போது இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எண்ணவில்லை.

ஏராளமான காதல் கவிதைகளே வந்து கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான ஒரு நட்பைச் சொல்லுகிற அந்த முயற்சி எனக்கு அன்றைக்கு புதிதாக இருந்தது. அதனை எனது திரைப்பட இயக்குனர்களான தம்பிகள் பலரும் படித்து விட்டு இந்த சிந்தனையே சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். அந்த சூழலில் தமிழக மக்களும், உலகத தமிழர்களும் இவ்வளவு பெரிய வரவேற்பைக் கொடுப்பார்கள் என நினைக்கவில்லை. ஆனால் இந்த வரவேற்பு என்பதெல்லாம் அறிவுமதிக்கான வரவேற்பாக நான் கருதவில்லை. இது புஞ்சைக் காட்டு வெளிகளிலே என்னோடு பழகிய தோழியர், தோழர்கள் இவர்களோடு நான் வாழ்ந்த வாழ்க்கை.

ஆண், பெண் என்ற பிரிவில்லாமல் ஆற்றிலே ஆடைகளைக் களைந்து விட்டு நாங்கள் முழுநிர்வாணமாக குளித்துக் கரையேறியவர்கள். அங்கே எந்த பால் முரண்பாடுகளையும் உணர்ந்ததில்லை. அது போலவே சோளக்காடுகளின் அந்த பரண்களால் ஏறி அமர்ந்து கொண்டு அவர்கள் முந்தானைகளில் வைத்து அடித்துக் கொடுத்த காக்கைச் சோளத்தை வாங்கித் தின்ற அந்த பால் பருவத்திலும் பால் முரண்பாடுகள் வந்ததில்லை. எனவே நட்புக்காலத்தின் வெற்றியும், வரவேற்பும் வாழ்த்தும் என்னுடைய அந்த புன்செய் காட்டின் அழுக்குப் படாத அந்த நட்பு வாழ்க்கை, நட்பு உறவுகள், நட்பு தோழிகள் அவர்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?