Wednesday 27 August, 2008

தோள் கொடு

என் ரணங்கள்
என் குணங்கள்

என் நிபந்தனை
என் சிந்தனை

என் வேகம்
என் தாகம்

என் வழி
என் வலி

என் முனைப்பு
என் நினைப்பு

என் சொற்கள்
என் அமைதி

என் முகவரி
என் எழுத்து

யாவும் அறிந்தவன்
நீ
மறுக்கவில்லை...

என் ஆசை ஒன்றை
சொல்கிறேன்..
செய்வாயா?

உன் தோளில் சாய்ந்தபடி
இந்த உலகம் அறிய வேண்டும்..

உன் தோள் சாயும் போது
என் கண்ணீர் உதிர வேண்டும்..

உன் தோள் போதும்
என் துயரம் துடைத்தெறிய..
என் உயரம் எட்ட..

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?