Friday 5 September, 2008

உன்னிடமிருந்து

உன்னிடமிருந்து
நானாகவும் கற்றுக் கொண்டேன் ..
நீயாகவும்
சொல்லிக் கொடுத்தாய்..
(ஒன்றை தவிர)
உன்னைப் பிரிந்தால்
எப்படி தாங்கிக் கொள்ள வேண்டும்
என்பதை தவிர..

ஸ்பரிசம்-7


ஒரு நிகழ்வை உங்களிடம் சொல்ல பிரியப்படுகிறேன்.புதிதாய் திருமணமான தம்பதிகள் திருமணம் முடிந்து மூன்று நாட்கள்தான் ஆகிறது.

கணவன் சொல்கிறான்..மூன்றாவது இரவில்.. ஒரு முக்கியமான
அலுவலக வேலை காரணமாக வெளியூர் போக வேண்டும் என்று..
அந்த மூன்று நாட்களில் மனைவியின் மனதில் தோன்றும் அந்த எண்ண்ம் இருக்கிறதே..அந்த உணர்வு இருக்கிறதே..அதை எப்படி ஒரு பெண் சொல்கிறாள் தெரியுமா?..


"தொட்டுவிட்டு நீயும் சொல்ல
மொட்டு விட்ட ஆசைகளை
கட்டுக்குள்ளே வைக்க நானும் கஷ்டப்படுகிறேன்..


வேண்டாம் என்று வாயும் சொல்ல
வேண்டுமென்று உள்ளம் ஏங்க
தீண்டும் இன்பம் வேண்டித்தானே இஷ்டப்படுகிறேன்..


விட்டகுறை தொட்டகுறை வட்டமிட்டு சுத்திவர
விட்டுவிட்டு போனதென்ன ஆசை நிலவே..
இன்னும் என்ன தாமதமோ
உண்மை யாவும் சொல்லிடவே
உச்சிக்குள்ளே பச்சைக்கிளி கூச்சலிடுதே.."
என்று தன் ஸ்பரிச உணர்வுகளைக் கொட்டுகிறாள்

ஸ்பரிசம்-6

கண்ணில் காட்சிகள் பலவும் மோதும்
கற்பனை சிறகுகள் காதில் ஓதும்..
உறவுகள் இறக்கி வைக்கும் மனதின் பாரம்
உணர்வுகள் உலா வரும் உன்னத நேரம்..

அன்பானவர்கள் எல்லோரும் அருகில் இருப்பதில்லை
அருகில் இருப்பவர்கள் எல்லோரும் அன்பானவர் இல்லை
என்று சொல்வார்கள்..

ஆனால் உங்களுடைய இதயத்துக்கு அன்பாகவும்,
இமைகளுக்கு அருகாகவும் அமைந்திருக்கிறது ஸ்பரிசம்...
நம் மனத்திரையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை..
மயக்கும் ஸ்பரிசத்திற்கு மகிழாத நெஞ்சமில்லை..
இன்னும் தேடல் தொடரும்..
தொடர்ந்து இணைந்திருக்க நினைவு சாரல் உதவும்..

ஸ்பரிசம்-5

எங்கும் பேச்சு எதிலும் பேச்சு என்று சொல்லும் அளவுக்கு
பேச்சுதான் உலகத்தில் பல விஷயங்களை மாற்றியிருக்கிறது.
நாம் பேசும் பேச்சு மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல்
இருக்க வேண்டியது மிக முக்கியம்.

அதிலும் கணவன் மனைவியிடையே கேட்கவே வேண்டாம்.
அவர்கள் பேச்சு இதமாக,பதமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
அதிலும் காதோடு காதாக பேசுகிற விஷயம் இருக்கிறதே அது சுகமானது..இரகசியமானது..

என்னதான் கணவன் மனைவியாக இருந்தாலும்
கணவனுக்கு மனைவிதான் முதல் குழந்தை..
மனைவிக்கு கணவன்தான் முதல் குழந்தை..

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளைதான்..நான்
அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்..
உனக்கேற்ர துணையாக எனை மாற்ற வா-என்று
கேட்கும் மனது இருக்கிறதே அது தாய்மையின் உச்சம்..
காதோடு வருடி மனதோடு பேசும் ஸ்பரிசம் தொடரும்

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?