Saturday 14 May, 2011

அறுவடை செய்

விவசாயின் பணி
விதைப்பதும் அறுப்பதும் அல்ல..
நிலத்தை செம்மைப்படுதுவதும் 
களையெடுப்பதும் கூட
நீங்கள் விதைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் 
களைஎடுக்காமல் 
அறுவடை செய்துதான் ஆக வேண்டும் 
புற்களையும் பூண்டுகளையும்..

நீங்களே விதைத்தீர்கள்

என்ன நடந்துவிட்டது 
இப்படி இடி விழுந்தது போல் 
அமர்ந்திருப்பதற்கு? 
உழைத்தால் தான் ஒருபிடி கவளமாவது
கை வந்து சேரும்.. 
பேசாமல் போய் வேலையை பாருங்கள்.. 
==========
நீங்களே விதைத்தீர்கள்.. 
விளைச்சலில் 
களை வந்துவிட்டதென்று 
கவலை கொண்டால் எப்படி?

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே என்றும் 
மறக்க முடியுமா என்றும் 
என்னதான் கதறியும் 
மறக்கக் வேண்டியதை நினைவூட்டி 
நினைக்க வேண்டியதை மறக்கடித்து 
தலை கீழ்விகிதங்கலாய் 
கிழிந்து தொங்குகிறது 
சில மாற்றங்கள்..

மறக்க முடியுமா?

சொன்னதைச் செய்தோம் என்று அய்யாவும்
சொல்லாததையும் செய்தார்கள் என்று அம்மாவும்
என்னதான் செய்கிறார்கள் என்று மக்களும்
வாழ்க தமிழகம்
*******
எல்லாவித கருத்துக் கணிப்புகளையும்
தகர்த்துவிட்டு
ஆள்கிறது மக்களின் மறதி
எந்தவித நல்ல மாற்றங்களும்
வரப்போவதில்லை
என்பது மக்களின் உறுதி
*******
பந்தயத்தில்
வெற்றி என்பது
வலிமையால் அல்ல
எதிரியின்
பலவீனத்தாலும் வாய்த்துவிடுகிறது.
*******
ஒரு கண்ணில் புரையும்
மறு கண்ணில் திரையும்
விழுந்தாகிவிட்டது
மூன்றாவது கண்ணுக்கு
இடம் தேடியநிலையில்
புரை விழுந்த கண்ணிலே
போய் குடிகொண்டது
மூன்றாவது கண்..
எந்த கண்ணும் வழிகாட்டாது
கையால் தடவியே செல்கின்றன..
கால்கள் தட்டுத் தடுமாறி..
எங்கே செல்லும்
இந்த பாதையென அறியாமல்..
*******

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?