Thursday 5 March, 2009

கடந்து போன காற்றலையின் ஊடே..

அன்புள்ள சகாவுக்கு...

கடலுக்குள் நீந்த கரையோரத்தில் நடந்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது...திடீரென வீசிய புயல் காற்று கடலுக்குள் தள்ளி விட்டது போல
இருக்கிறது என் நிலைமை...

வேறென்ன சொல்ல சகா...காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள்.. கல்லடி படலாம் ..ஒன்றும் மோசமில்லை... வெட்டி விடலாம் என்று எப்படி யோசிக்க முடிந்தது.. என்று எனக்கு விளங்கவே இல்லை... கனவு போல இருக்கிறது நடந்த யாவும்...

எனக்கு நல்ல நண்பனாக, குருவாக,இந்த உலகத்தில் யாவுமான ஒரு உறவாக இருந்த உன்னதமான நட்பு ...அப்படிப்பட்ட நட்பின் கதகதப்பில் இருந்த நான் அந்த கூட்டை விட்டு சின்னஞ்சிறிய இறகுகளோடு பறக்க நேர்ந்தது
வருத்தமாய் இருக்கிறது...சகா...

என்னை பிறர் ஏளனம் செய்யும் போதெல்லாம் அது என்னை பக்குவப்படுத்தும் பயிற்சியாகவே இருந்திருக்கிறது..அந்த எதிர்ப்பின் வலி என்னை தீண்டிய போதெல்லாம் வார்த்தைகளில் ஒத்தடம் கொடுத்த தோழன் நீ..

சில சமயங்களில் நீயும் என்னை காயப்படுத்தினாலும்..அது காயமல்ல..என் மீதான நேயம் என்பதை புரிந்து வைத்திருக்கிறது நம் நட்பு...யாருக்கும் உணர முடியாது நம்மை தவிர இதை.. உன் வார்த்தைகளிலே சொல்ல வேண்டும் என்றால்.. நம் நட்பு தாய்ப்பாலை விட சுத்தமானது...

உன்னிடம் பேச நிறையவே விஷயங்கள் இருந்த போதிலும் ஒரு சிறு இடைவெளியில் மீண்டும் உன்னை சந்திப்பேன் என்று உறுதி கூறி இப்போது விடைபெறுகிறேன் ஒன்று மட்டும் சொல்லி.....

உனது நல்ல எண்ணங்களும் ..எனது நம்பிக்கையும்.இடைவிடாத முயற்சியும்..
என்னை உயரும் என்பது திண்ணம்...

இவள் எப்போதும் இயங்கி கொண்டிருப்பாள்....
நட்பிலும்..நம்பிக்கையிலும்...
இன்னும் இவள் பேசுவாள்..
இணைந்திருங்கள்......
தற்காலிகமாக வானொலியில் அல்ல... இணைய தளத்தில்....

தோழமையுடன்......
இவள் பாரதி..

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?