ஊற்றுக் கண் தேடியலைந்த
மானின் கால்கள் சோர்வுற்று நிழலில்
ஒதுங்கியது...
இலைகள் மேவிக்கிடந்த
நீரூற்று காற்றின் விலக்குதலில்
கண்ணிற்பட்டது...
தாகம் தீர மான் நீரை
உறிஞ்ச புதிய புதிய
சத்தங்களோடு
வெளிப்படுகிறது...நீரூற்று..
சுனை நீரின் சுவை ஏறுகிறது...
சுவை ஏறிக் கொடிருக்கிறது..