Friday 6 March, 2009

சுனை நீர்....

ஊற்றுக் கண் தேடியலைந்த

மானின் கால்கள் சோர்வுற்று நிழலில்

ஒதுங்கியது...


இலைகள் மேவிக்கிடந்த

நீரூற்று காற்றின் விலக்குதலில்

கண்ணிற்பட்டது...


தாகம் தீர மான் நீரை

உறிஞ்ச புதிய புதிய

சத்தங்களோடு

வெளிப்படுகிறது...நீரூற்று..


சுனை நீரின் சுவை ஏறுகிறது...

சுவை ஏறிக் கொடிருக்கிறது..

அதிசயம்தான்..பூக்கள் யாவும்...

மல்லாந்துறங்கும்
வண்டின் மீது
பூக்கள் மகரந்தங்களைச்
சொறிவதும்....

நெப்பந்தஸ் போலான
தாவரங்களின் செயல்பாடும்...
அதிசயம்தான்...

வண்டின் ஒற்றைக் கால்
உரசுதலில்
பூத்துக்கொட்டும்
கிளிட்டோரியஸ்
என்றும் ஈரம் காயாத இதழ்களையும்...
வற்றி போகாத நீர்த்துளிகளையும்...

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?