Tuesday 24 March, 2009

இசைக்கும் வீணை..

இசைப்பதை நிறுத்திய கலைஞனும்
இசைக்க மறுக்கிற வீணையும்..
இயற்கையின் நிழலில் ...

மீட்டப்படாத வீணையில்
சில நரம்புகளை
ஒழுங்கு படுத்துகிறான் ..

வீணை
அபரிமிதமான இசையை
வெளிப்படுத்தி
கலைஞனுக்குள்ளிருந்த இன்னொரு
பரிமாணத்தை
அறிமுகப்படுத்த ..

அவ்விசையில் மருகும்
அவன்
மீண்டும் மீண்டும் வாசிக்கிறான்..
ஒரே ராகத்தை..
வீணை ஒவ்வொருமுறையும்
புதிய பாவத்தை..

இருள் விலகிய பின்னும்
இசைத்தபடி அவன்..
இசைந்தபடி வீணை...

யாதுமானவனே..

யாதுமானவனே
யாதுமானவலாய்
இசைகிறேன்
மீட்டெடு ....
கடந்தகாலத்தின்
துயரச் சுவடுகளிளிருந்தும்
நிகழ் காலத்தின் தத்தளிப்புகளிலிருந்தும்..

எதிர்காலத்தின்
வெற்றிப் பதிவிற்காக...

விடிவதற்கான சாத்தியங்கள்...

இருக்கை தேடியலைந்த
களைப்பில்
சோர்வுறுகிறது..
கனவுகளின் எதிர்பார்ப்பு..

சுமைகளையும்
சுகங்களையும்
ஒருசேர தைத்து
பயணப்படும் மனது..

உறங்குவதற்கு சாத்தியமற்ற
இப்பொழுதுகள்
தூவியபடி இருக்கிறது..
உறக்கத்தின் விதைகளை..

ரயிலின் கடைசிப் பெட்டிடில்
ஜன்னலோர ஒற்றை இருக்கையில்
எதிரெதிர் துருவங்களில்
புன்னகையில் எண்ணங்கள் கோர்த்து
ஒரு பாதையில் நாம்...


விடிவதற்கான சாத்தியங்களோடு
இரவு கரைகிறது...
தண்டவாள ஓசைகளிலும்
பயணிகளின் பேச்சரவங்களிலும்...

எதையும் உள்வாங்காமல்
எதிரிருக்கும் நீ மட்டுமே
நிறைந்திருக்கிறாய்..
என் சுவாசமெங்கும்....

கனவுகள் மெய்ப்பட..

சூரிய ஒலி எட்டிப்பார்க்க
வாய்ப்பில்லா சிற்றறைக்குள்
எனது புதிய வாசம்..

அறையெங்கும் அடுக்கபட்டிருந்தது
உன் ஆளுமை..
தேடல் மட்டுமே இயக்கத்தில்..

உணர்வுகள்
ஓடியாடி விளையாட
செய்வதற்கு ஒன்ற்மற்றவர்களாய்..
உருமாற்றியிருந்தது நிகழ்வுகள்...

இயல்புக்கு மாறான
இமைகளுக்கு நேரான
இதயத்திற்கு கூரான
ஒன்றை கண்டெடுத்தேன்..

நீயறியாது பத்திரப்படுத்தி
வெளியேறுகிறேன்..
நீயுமறிந்த ஒன்றை...

'கனவுகள் மெய்ப்பட'
வாழ்த்துகிற தேவதைகளுக்காக
மட்டுமல்ல...

எந்நொடியும் சிந்தித்தபடியிருக்கிறேன்...
நாமிணைந்து பணியாற்றி..
பரபரப்பாகும் கனவோன்றையும்..
பரவசமாகும் இரவொன்றையும்..

இரவின் கண்ணீர்..

அந்த இரவு
அத்தனை சுலபமானதாய்
இருக்க வில்லை..

அந்த இரவின் கண்ணீர்
அத்தனை கரிப்பாயும்
இருந்ததில்லை...
அதற்கு முன்னதான நாட்களிலும்
இனி வரும் பொழுதுகளிலும் கூட...

எனக்கு முன்
இரண்டே விஷயங்கள்தான்
கையழைத்தது..

ஒன்று வலிகளைச் சுமக்கும்
இதயமும்..
மற்றொன்று வலிகளை
பரப்பும் உறவும்...

இந்த இரண்டு வலிகளும்
இமைகளை தானே திறந்து
வந்தமர்ந்து கொண்டன...


மீள்வதற்கு வழியற்று
மீட்ட ஆரம்பித்தேன்..
வலிகள் சுமைகளாக இல்லை..
சுகங்களாகவும் இல்லை...

வலிகள்
மரத்துப் போயிருந்தன....


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?