அந்த இரவு
அத்தனை சுலபமானதாய்
இருக்க வில்லை..
அந்த இரவின் கண்ணீர்
அத்தனை கரிப்பாயும்
இருந்ததில்லை...
அதற்கு முன்னதான நாட்களிலும்
இனி வரும் பொழுதுகளிலும் கூட...
எனக்கு முன்
இரண்டே விஷயங்கள்தான்
கையழைத்தது..
ஒன்று வலிகளைச் சுமக்கும்
இதயமும்..
மற்றொன்று வலிகளை
பரப்பும் உறவும்...
இந்த இரண்டு வலிகளும்
இமைகளை தானே திறந்து
வந்தமர்ந்து கொண்டன...
மீள்வதற்கு வழியற்று
மீட்ட ஆரம்பித்தேன்..
வலிகள் சுமைகளாக இல்லை..
சுகங்களாகவும் இல்லை...
வலிகள்
மரத்துப் போயிருந்தன....
1 comment:
வலிகள் சுமைகளாக இல்லை..
சுகங்களாகவும் இல்லை...
வலிகள்
மரத்துப் போயிருந்தன....
அனைத்து கவிதைகளும் நன்றாக இருந்தது
Post a Comment