Wednesday 4 August, 2010

பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ்


சிறுவயசுல எப்படி இருந்தீங்க?
இப்படியேதான். இவ்வளவு உயரம் இல்லை. இவ்வளவு சைஸ் இல்லை. இப்ப எப்படி ஜாலியா இருக்கேனோ அது மாதிரிதான் அப்பவும் இருந்தேன்.

திரைத்துறையில் வாரிசுகளுடைய வருகை அதிகமாயிருக்கு. இதை எப்படி பாக்குறீங்க?
இருக்கலாம். ஆனா அதை விட செகண்ட் ஜெனரேஷனை சேர்ந்தவங்க, டோட்டலி ஃப்ரெஷர்ஸ் நிறைய வந்திருக்காங்க. உண்மை என்னனா எங்களை மாதிரி ஆட்களுக்குத்தான் இன்னும் கஷ்டம். என்னோட அப்பா வந்து எனக்கு இன்ட்ரடக்ஷன் கொடுத்து இந்த இன்டஸ்ட்ரிக்குள்ள வரல. என்னைத் தேடி வந்த வாய்ப்புகள சரியா பயன்படுத்திட்டுத்தான் வந்திருக்கேன்.

உங்களோட ஃப்ர்ஸ்ட் ரெக்கார்டிங் பத்தி சொல்லுங்கள்..
என்னோட ஃபர்ஸ்ட் ரெக்கார்டிங் வித்யா சாகர் மியூசிக்ல ஒரு மலையாளப் பாட்டு. தமிழ்ல ஃப்ர்ஸ்ட் ரெக்காடிங் தேவா சார்கிட்டதான். ஃப்ர்ஸ்ட் ரிலீஸ்னு பாத்தீங்கன்னா இளையராஜா சார் கிட்ட ஃப்ரண்ட்ஸ் படத்துல 'வானம் பெரிசு'தான் பாட்டு. இது அருண்மொழி, எஸ்.பி.பி, நான் மூணு பேரும் சேர்ந்து பாடிய பாடல். அதுலயே 'ருக்கு ருக்கு ரூபிக்யா'ங்ற பாட்டுதான் ஹிட்டாச்சு.

ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கைல மறக்க முடியாத விஷயம் இருக்கும். உங்களுக்கு மறக்க முடியாத விஷயம்?
ஜனவரி 21. என்னோட ஃப்ர்ஸ்ட் வெடிங் ஆனிவர்ஸரி. அன்னைக்கு என்னோட மலையாளம் சாங்குக்கு ஒரு அவார்டு கிடைச்சது. இது முழுக்க முழுக்க மக்களால இன்டர்நெட் மூலமா ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப் பட்டது. அந்த பாட்டை பாடுனவங்க, இசையமைச்சவங்க, எழுதுனவங்க எல்லாருக்குமே கிடைச்சது. அன்னைக்கு என் மாமனார், மாமியார், அப்பா, அம்மா எல்லாரும் கூட இருந்தாங்க. பொதுவா நேஷனல் அவார்டு, ஸ்டேட் அவார்டு எல்லாம் ஜூரி செலக்ட் பண்ற மாதிரிதான் இருக்கும். அது மோஸ்ட்லி பாப்புலர் சாங்காவும் இருக்காது. ஆனா ஒரு மோஸ்ட் பாப்புலர் சாங்க மக்கள் தேர்ந்தெடுத்தாங்க. அந்த சாங்குக்கு கேரளா ஸ்டேட் அவார்டும் கிடைத்தது. அது பெரிய சந்தோஷம். மறக்க முடியாத விஷயம்.

முறைப்படி கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டீங்களா? இல்ல அப்பாகிட்ட இருந்து வந்ததா?
அப்பாகிட்ட இருந்து வந்ததானு தெரியாது. ஆனா இப்பதான் முறைப்படி கத்துக்கிட்டிருக்கேன். கத்துக்கிட்டாதான் இம்ப்ரூவ் பண்ண முடியும். நமக்கு ஒரு டைமண்ட் கிடைச்ச பிறகு அத இன்னும் பட்டை தீட்டுற மாதிரிதான்.

உங்களுக்கு பிடிச்ச ராகம் எது?
கீரவாணி, தோடி, பகாடி.

உங்களைக் கவர்ந்த பாடகர்கள் யார்?
என்னோட அப்பா, சுஜாதா அக்கா, பி.சுசீலா அம்மா, சமீபமா சங்கர் மகா தேவன் சார். அவரோட ஸ்டேஜ் பெர்ஃபாமன்ஸ் ரியலி அமேஸிங்.

ஏதாவது ஒரு பாட்டு இது நமக்குக் கிடைச்சிருந்தா நல்லா இருக்குமேனு நினைச்சதுண்டா?
அப்டிலாம் கிடையாது. ஒரு குறிப்பிட்ட பாடல்கள பாடணும்னு ஆசைப்பட்டதும் இல்ல. எல்லா சாங்கும் நம்ம பாடினா எப்டி இருக்கும்?னு யோசிப்பேன். அப்டி யோசிச்ச பாட்டுனா வெயில் படத்துல 'உருகுதே மருகுதே' பாடல்தான்.

பிறமொழிப்பாடகர்கள் குறித்து உங்க கருத்து என்ன? மற்ற மொழிகள்ல இருந்து தமிழ் மொழிக்கு பாட வர்றவங்கள பத்தி கேக்குறேன். நீங்களும் இதில் அடக்கம் தானே..
கண்டிப்பா. அதுல நானு ஒரு ஆளுதான். நான் வளந்தது எல்லாமே சென்னையில தான். நானும் ஒரு அவுட்சைடு சிங்கர் தான். அப்பா நிறைய பாடியிருக்கார். ஸ்ரேயா கோஷல், சோனா நீகம் இவங்கள்லாம் தமிழ்ல பாடும் போது அசிங்கமா பாட மாட்டாங்க. தி மேக் ஸ் பெர்ஃபக்ட். ஈவன்தோ மியூஸிக் டைரக்டர் வொர்க்கிங் வித் தெம். நிறைய இம்ப்ரூவ் பண்ணிதான் பாடுறாங்க. அது மாதிரி எல்லாரும் பண்றாங்க. ஆனா நாம ஹிந்தில பாடும்போது ஏத்துக்க மாட்டாங்க. அதே மாதிரி நாமளும் எஃபர்ட் எடுத்து சவுத் இன்டியன் அக்சன்ட் இல்லாம பாடுனா அக்சப்ட் பண்ணுவாங்க.

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?
பேசுறதுக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம், கொஞ்சம் ஹிந்தி அவ்ளோதான் தெரியும். பாடுறதுக்கு தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஸ்பானிஷ், ஜெர்மன், ஃப்ரெஞ்ச்.

உங்க அப்பா பாடிய பாடல்கள்ல உங்களுக்குப் பிடிச்சது?
அது ரொம்ப கஷ்டமான விஷயம். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் பாட்டு பிடிக்கும்.

ஆங்கில வார்த்தைகளில் கலப்போடு பாடுவதை எப்படி உணருகிறீர்கள்?
அது நல்லபடியா வந்தா சரிதான். ஒரு நல்ல ஆங்கிலப் பாடல் சவுண்ட் எப்படி இருக்கணுமோ அப்டி இருக்கும் போது நல்லாதான் இருக்கும். ஆனா சில நேரங்கள்ல தேவையில்லாம வந்தா நல்லா இருக்காது. என்னோட 'தாவணி போட்ட தீபாவளி' பாடல்ல கடைசில 'ஆனாலும் நீ ஏஞ்சலு'னு வரும். அப்டி ஒரு வார்த்தைய யூஸ் பண்ணா பரவாயில்ல. ரைமிங்கா நல்லா இருக்கும். சில பாடல்ல இங்கிலீஷ் ஃபுல்லா வரும் போது நல்லா இருக்கும். டிஃபரண்ட் டைப் ஆஃப் சவுண்ட் வரணும்னா அதுமாதிரிதான் இருக்கணும். மோஸ்ட்லி எவிரிபடி கரெக்ட்டா பண்றாங்க. யுவன், மணிசர்மா, ஸ்ரீகாந்த் தேவா, பிரேம்ஜி, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாருமே நல்லா பண்றாங்க. வலுக்கட்டாயமா வராம இயல்பா வந்தா பரவாயில்லை.

உங்களை மூத்த பாடகர்கள் யாராவது பாராட்டியதுண்டா?
சமீபத்துல நாம் ஃப்ளைட்ல போகும் போது பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களை ரெண்டு தடவை பாத்தேன். ஏர்போர்ட்டுல தொடர்ந்து ரெண்டு நாளா பாக்குற வாய்ப்பு கிடைச்சது. அப்ப ‘உன்னைப் பாத்ததுல ரொம்ப சந்தோசமா இருக்கு. வெஸ்டர்ன் மியூஸிக் கத்துக்க. ரொம்ப முக்கியம் அது. நம்ம இன்டஸ்ட்ரியில வெஸ்டர்ன் நிறைய இருக்கு. ஆனா வெஸ்டர்ன்ல நம்ம மியூஸிக் அவ்ளோ இல்ல. இந்தியர்கள் வெஸ்டர்ன்ஸ நல்லா யூஸ் பண்ணிருக்கோம். வெஸ்டர்ன் ஆல்பம்ல அங்க இங்க நம்ம மியூஸிக் வந்துட்டு போகும். நம்ம மியூஸிக் இவ்ளோ ஹைலெவல்ல இருக்கும் போது ஏன் மத்தவங்கள ஃபாலோ பண்ணனும்.’னு சொன்னாரு. யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

உங்க துறையில நீங்க என்ன புதுமை செய்ய விரும்புறீங்க?
நம்ம செய்ற விஷயத்த சிறப்பா செய்யணும். எல்லாருமே புதுமை புதுமைனு சொல்லி ரொம்ப அதிகமா யூஸ் பண்றாங்க. இது புதுசா இருக்கும், வித்தியாசமா இருக்கும்னு சொல்றோமே தவிர நிறைய பேர் பண்றதில்ல. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் காலத்துல யுவன் வந்தாரு. டி.எம்.எஸ். காலத்துல கூட அப்பா, எஸ்.பி.பி அங்கிள் வந்தாங்க. இப்ப எல்லாத்துக்கும் ஒரு எக்ஸ்போர்ஷர் இருக்கு. டிவி. ரேடியோ அப்டினு நிறைய ஸ்பேஸ் இருக்கு. முன்னாடி அப்டி கிடையாது. நிறைய பேர் இருக்குறதால போட்டி அதிகமாக இருக்கு. ஆரோக்யமான போட்டிதான். அது இருந்தாதான் நல்லா இருக்கும்.

நீங்க பாடகரா இல்லாட்டா யாரா மாறியிருப்பீங்க?
தெரியாது. ஒருவேளை நடிகரா ஆகியிருப்பேன். அதுக்கு அழகு மட்டும் போதாதுல. நடிக்கவும் தெரியணுமே.

உங்களுடைய பொழுது போக்குகள்?
ஸ்போர்ட்ஸ், டிவி, மியூஸிக் கேக்குறது, படம் பாக்குறது.

உங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடு எப்படி இருக்கும்?
எப்பவும் எல்லா விஷயத்திலயும் பாஸிட்டிவ் திங்கிங் உண்டு. ரொம்ப நல்ல விஷயங்களைப் பத்தித்தான் அதிகம் யோசிப்பேன். மத்தவங்கள்ல கூட தப்பு பாக்குறது ரொம்ப கம்மி. ஒருத்தவங்கள பத்தி மத்தவங்க தப்பா சொன்னா கூட நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன். நம்மளோட தவற நாம சரி பண்ணிக்கணும். எனக்கு புறம் பேசுறது பிடிக்காது. எனக்கு ரெண்டு, மூணு ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. அதுல ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை. அதனால ரெண்டு பேரையும் தனித்தனியா சந்திக்க வேண்டியதிருக்கு. மத்தவங்கள குறை சொல்லிட்டே இருக்கக்கூடாது. நம்ம பெர்ஃபக்ட்டானு பாக்கணும். அப்படி யாராலும் இருக்க முடியாது.

உங்களுடைய தனித்துவமா எதை நினைக்கிறீங்க?
அப்படி ஒண்ணுமில்ல. வாழ்க்கைய முழுமையா அனுபவிச்சு வாழ்றதுதான் என்னோட தனித்துவம்.

ஃபாஸ்ட் சாங் பிடிக்குமா? மெலடி பிடிக்குமா?
ஸ்டேஜ்ல அதிகமா ஃபாஸ்ட் சாங்தான் பாடுற மாதிரி இருக்கும். எனக்கு ரெண்டுமே பிடிக்கும். வித்யாசாகர், யுவன், இளையராஜா இவங்களோட ஃபாஸ்ட் சாங்ஸ் பிடிக்கும். ரஜினி சாரோட பொதுவாக எம்மனசு தங்கம் பாட்டுல லேசா மெலடியும் இருக்கத்தான் செய்யும். பீட் மட்டும் இருந்து ரிதம் ஒண்ணுமே இல்லனா பிடிக்காது.

உங்க அப்பாவுக்கு பிடிச்ச பாடல்?
எனக்கு தெரியல. ஒருவேளை 'உன்னிடம் மயங்குகிறேன்' பாடல்.

உங்க அப்பா பாடல்கள உங்களுக்கு பிடிச்சது?
அப்பாவும் நானும் சேர்ந்து பாடுன ராம் படப்பாடல் 'மனிதன் சொல்கின்ற நியாயங்கள்'. தனித்தனியா ரெக்கார்டிங் பண்ணப்பட்ட பாடல்தான் அது. அதுல அப்பாவோட 'ஆராரிராரோ' எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த படத்துல நான் தனியா பாடுனது 'நிழலினை நிஜமும் கடந்திடுமா?'.

இந்த மாதிரி ரெண்டு பேர் பாட வேண்டிய பாடல தனித்தனியா பாடும் போது அந்த ஃபீல் இருக்குமா?
ஒண்ணா பாடும் போது சில டைம்ல கன்டினியுட்டி இருக்காது. அதுமட்டுமில்ல அவங்கவங்க ஃப்ரீ டைம்ல வந்து பாடிட்டு போறது வசதியா இருக்கு.

உங்க பாடல்களைப் பாடும் போது அதில் இருக்கும் வரிகளை ரசித்ததுண்டா?
'எனக்குப் பிடித்த பாடல்' மாதிரி பாடல்ல வரிகளை ரசித்ததுண்டு. அதுல எவ்ளோ இருக்கு. மியூஸிக்கும், லிரிக்ஸும் சேரும் போது அதுல அவ்ளோ ப்யூட்டி இருக்குது. அந்த மாதிரி 'சிவாஜி' படத்துல 'சஹாரா பூக்கள் பூக்குதோ' பாடலும் ரொம்ப பிடிக்கு. 'நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது'.

ஒரே குடும்பத்துல உருவ ஒற்றுமை சகஜம்தான். ஆனா குரல் ஒற்றுமை உங்க அப்பாக்கும், உங்களுக்கும் இருக்கே எப்படி?
அவர் கண்டிப்பா என்னோட அப்பாதான்னு ப்ரூஃப். சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். சில சமயங்கள்ல பாடும் போது அப்பா மாதிரி வரும். பிரேம்ஜி ஒருதடவை அப்பா மாதிரியே பாடுறேன்னு சொன்னாரு. எல்லா சாங்கும் அந்த மாதிரி வராது.

ரொம்ப பிடிச்ச பண்டிகை எது?
அமெரிக்காவுல கிறிஸ்துமஸ் ட்ரெடிஷனலா கொண்டாடுவாங்க. அது எனக்குப் பிடிக்கும். அங்க பெரிய பெரிய வீடுகள்ல அலங்காரம் பண்ணுவாங்க. அதுவும் ரொம்ப பிடிக்கும்.

--இவள் பாரதி


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?