Wednesday 11 February, 2009

கையகப்படுத்திய...காதல்.

*
சில
ஞாபங்களை
நினைவோடும்
பொருள்களோடும்
கையகப்படுத்திய
வந்துவிட்டேன்.
இதோ
என் முன்
பரப்பி வைக்கப்பட்ட
பொருள்கள்
நிரப்புகிறது
உன் மீதான
நேசத்தை...

*
மூச்சு முட்டுகிறது..
இந்த
ஜன்னலோரக்காற்று
உனதன்பைப்போல்..

*
உன்
விரல்கள்
கரும்பின்
வேராய்
இருந்திருக்குமோ..
முன் ஜென்மத்தில்..
நீ
அனுப்பும் சொற்கள்
இப்படி
தித்திக்கிறதே...

*
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
கண்டுகொண்ட
நிமிடங்களில்
காதல்
கைதட்டி சிரித்தது..
சிறந்த காதல்
இணையினை
கண்டுவிட்டதாக...

கசியும் காதல்..

*
உச்சிவெயிலில்
காய்ந்து கொண்டிருக்கும்
கூழாங்கற்கள்
பிரதிபலிக்கிறது..
இனிய தருணங்களின் பதிவை...

அதன் கீழே
வலியோடு
முனகுகிறதென் காதல்...

*
இலைகளற்ற
மரங்கள்தான்
அவை
வேர்களற்றவையல்ல..
இணக்கமற்ற
மனத்தான்
எனக்கு
காதலற்றவையல்ல..

*
என்
கண்ணீரின்
கரிப்பு
உனக்கு
சுவைஎனில்
நதியாய்
பெருகட்டும்..

*
உன்
என்னுள்
வந்து சென்ற
நிமிடங்கள்
இயற்கை
எனக்களித்த
பரிசு
அதை
பதியமிடுகிறேன்...
என் பயணமெங்கும்
அவை பூத்து
மணம்பரப்பும்
நம் காதலை சுமந்து...

காதல் துளிகள்..

*
உன்
இதழ்களில்
சிறு புன்னகை
தவழ்வதை
ஒளிந்திருந்து பார்க்க
இவளிடம்
அனுமதி
இவனிடம்
வந்திருக்கும்
என் பெயர்
காதல்...

*
உனதன்பின்
துளிகள்
என்னை
மூழ்கடிக்கிறது
காதல் கடலில்..

*

அலையும் மனசு
அடங்கிட
வழி சொல்லு
அலையே...
கலையும் கனவு
நிலைத்திட
வழி சொல்லு
நிலவே..

*
உதட்டின்
ரேகைகள்
அழியும் வரை..
உயிரின்
தேவைகள்
முடியும் வரை
இந்த காதல்
தீரப்போவதில்லை...


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?