Wednesday 11 February, 2009

கசியும் காதல்..

*
உச்சிவெயிலில்
காய்ந்து கொண்டிருக்கும்
கூழாங்கற்கள்
பிரதிபலிக்கிறது..
இனிய தருணங்களின் பதிவை...

அதன் கீழே
வலியோடு
முனகுகிறதென் காதல்...

*
இலைகளற்ற
மரங்கள்தான்
அவை
வேர்களற்றவையல்ல..
இணக்கமற்ற
மனத்தான்
எனக்கு
காதலற்றவையல்ல..

*
என்
கண்ணீரின்
கரிப்பு
உனக்கு
சுவைஎனில்
நதியாய்
பெருகட்டும்..

*
உன்
என்னுள்
வந்து சென்ற
நிமிடங்கள்
இயற்கை
எனக்களித்த
பரிசு
அதை
பதியமிடுகிறேன்...
என் பயணமெங்கும்
அவை பூத்து
மணம்பரப்பும்
நம் காதலை சுமந்து...

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?