Wednesday 3 September, 2008

ஸ்பரிசம்-4


காமமில்லாத காதலும்
அலையில்லாத கடலும்
சாத்தியமில்லை ...


ஒவ்வொன்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது
அந்த எல்லையை புரிந்துகொள்வதற்கு விலை இருக்கிறது ..


பார்வையின் உச்சம் காதல்
காதலின் உச்சம் மோகம்


மோகம் தலை தூக்கும் போது பார்வைகள் பேசும்
வார்த்தைகள் மூர்ச்சையாயிடும்..
நேற்றுவரை சேர்த்துவைத்த ஆசையெல்லாம்
வெளியே தலைகாட்ட ஆரம்பித்து விடும்.
ஈருடல் ஓருயிர் என்று சொல்வார்களே
அதற்கான அஸ்திவாரம்தான் இது..

ஸ்பரிசம்-3

உடலுக்கு வாசல் கண்கள்
காதலுக்கு வாசலும் கண்கள்தான்..

வார்த்தை வெளிப்படுத்த முடியாத விஷயங்களை
கண்கள் உணர்த்திவிடும்.அதே போல
வார்த்தைகள் கூட புரியவைக்க முடியாத
பல விஷயங்களை மெளனம் சொல்லிடும்.

மெளனம் வலிமையானது.. அதே சமயம் எளிமையானது
சில நேரம் கொடுமையானது.. சில நேரம் இனிமையானது..

மெளனத்தோட பேச ஒரு சிலருக்குத்தான் தெரியும்
மெளனத்தின் அசைவுகளை வைத்தே
வலிகளையும் சந்தோஷத்தையும் உணரமுடியும்...

நீங்க எப்போதாவது மெளனமா இருந்திருக்கீங்களா?
அப்போது அந்த மெளனத்தை யாராவது புரிந்து கொண்டார்களா?

இல்லையென்றால் நீங்க யாரோட
மெளனத்தையாவது புரிந்துகொள்ள முயன்றதுண்டா?
என்ன மெளனமாக யோசனை செய்கிறீர்களா?
பார்வையால் மட்டுமல்ல மெளனத்தாலும் பேசிக்கலாம்...

சோகமும் சுகமும்

சோகத்தை சொல்லிவிட்டால்
மன வேகமது மட்டுப்படும்...
அந்த சோகத்தை சொல்லுதற்கும்
சொந்தமாய் ஒரு நட்பு வேண்டும்...

நட்பே..
சோகங்கள் எல்லாம் சுமைகளல்ல
சுகங்கள் சிலவும் தாங்கக்கூடியதல்ல
சோகத்திற்கும் சுகத்திற்கும் உள்ள உறவு
கடலுக்கும் கரைக்குமான உறவு
இரண்டும் சந்திக்கும் புள்ளியில்தான்
அலைபாய்கிறது
மனமும்..அலையும்..

கேள்வியும் பதிலும்

கேள்விகள் கேட்கத்தான்
காத்திருக்கிறது
எல்லா நாவுகளும்...

பதில்களை கேட்பதற்கு
எந்த காதுகளும்
தயாராயிருப்பதில்லை...

பதிலுக்கு காத்திருக்காத
கேள்விகளால்
யாதொரு பயனுமில்லை...

கேள்விகளை உள்வாங்காத
பதில்களாலும் கூட...

நட்புக்கு

சின்னதாய் ஒரு புன்னகை
மென்மையாய் ஒரு பார்வை
இது போதும்
நட்பு உரசிக் கொள்ள...

மறக்க முடியாத துயரம்
போகத் துடிக்கும் உயரம்
இது போதும்
நட்பு பேசிக் கொள்ள...

ஆக்கப்பூர்வ விமர்சனம்
ஆழமான ஆலோசனை
இது போதும்
நட்பு நலமாய் நடந்து செல்ல...

சின்ன சின்ன சண்டை
செல்ல செல்ல கோபம்
இது போதும்
நட்பை உணர்ந்து கொள்ள...

எப்போது இந்த எல்லைக்குள்வருவாய்?
எல்லையில்லா நட்பைத் தருவாய்?
காத்திருக்கிறேன்
காற்றினூடே....

ஸ்பரிசம்-1

சாதாரணமா வீசுற காத்து கொஞ்சம்
இதமா வருடிப் போனா அதுக்கு பேரு தென்றல்...
அது எப்ப வரும்னு யாருக்குத் தெரியும்?
அது மாதிரிதான் காதலும்...

சாதாரணமா பழகிகிட்டு இருக்குற
யாருகிட்டயோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல
லேசா தலைதூக்க ஆரம்பிச்சுடும்
இந்த காதல்(தென்றல் மாதிரி)..

இதோட அறிகுறிகள் என்னனு நினைக்குறீங்க?
எப்படா பாக்கலாம்?
எப்படா பேச சந்தர்ப்பம் கிடைக்கும்?
எப்ப நாம பேசுறத கேக்க வைக்கிறது?
இப்படி ஏராளமான விஷயங்களை
நம்ம மனசு கேக்க ஆரம்பிச்சுடும்..இல்லனா
தேட ஆரம்பிச்சுடும்...

ஏதோ ஒரு தருணத்துல சும்மா
விடைபெறும் போது கூட..
கொஞ்ச தூரம் போயிட்டு திரும்பி பாத்தா
மனசு சிறகடிச்சு பறக்கும்..

உங்க மனசு சிறகடிச்ச சந்தர்ப்பத்த நீங்க
உணர்ந்திருக்கீங்களா?..
அந்த உணர்வு எல்லாரையும் தொட்டுட்டு
போயிருக்கும் அப்டிங்றதுல எந்த சந்தேகமுமில்லை...
அப்படித்தானே?

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?