Wednesday 3 September, 2008

ஸ்பரிசம்-4


காமமில்லாத காதலும்
அலையில்லாத கடலும்
சாத்தியமில்லை ...


ஒவ்வொன்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது
அந்த எல்லையை புரிந்துகொள்வதற்கு விலை இருக்கிறது ..


பார்வையின் உச்சம் காதல்
காதலின் உச்சம் மோகம்


மோகம் தலை தூக்கும் போது பார்வைகள் பேசும்
வார்த்தைகள் மூர்ச்சையாயிடும்..
நேற்றுவரை சேர்த்துவைத்த ஆசையெல்லாம்
வெளியே தலைகாட்ட ஆரம்பித்து விடும்.
ஈருடல் ஓருயிர் என்று சொல்வார்களே
அதற்கான அஸ்திவாரம்தான் இது..

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?