வணக்கம் காதலனே..
சொல்வதை செய்..
செய்வதை சொல்..
சொல்லி விட்டு செய்யாதே..
செய்து விட்டு சொல்லாதே..
சொல்வதை செய்யாமல்
சொல்லி சொல்லி கொல்வாய் உனது கடிதத்தில்......
நல்ல வரிகள்தான் இல்லையா?
காதலனும் காதலியும் சேர்ந்து எழுதிய வரிகள் என்று...
சொல்லாமலே புரியும்...
கடிதம் என்பது அருகில் இருக்கும் ஒரு காகித உறவு....
நம்மை நேசிப்பவர் அருகில் இல்லாத நேரத்திலும்...
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் போதும்..
பிரிந்த நேரத்திலும்..நம்மை ஆற்றுப்படுத்துகிற அற்புதம்...