Friday 29 August, 2008

ஸ்பரிசம்-2

ஜன்னல்களை வருடிப் போகும் தென்றலைத்
தண்டிக்க ஜன்னலுக்கு உரிமை இருக்கிறதா?
இல்லை- ஆனால் நம்மை நேசிக்கிற
ஒரு ஜீவனுக்கு மறுப்பு
சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது...எப்படி?

காதலைச் சொல்ல யாருக்கும்
உரிமை இருப்பது போல மறுப்பதற்கு
நமக்கும் உரிமை இருக்கிறது..
யாராவது நம்மகிட்ட காதலை சொல்லும் போது
நாம மறுக்கிற சந்தர்ப்பத்தை போல..

நம்ம காதல் நிராகரிக்கப்படும்போது
அதை ஏத்துக்குற பக்குவம் வேணும்..
இவங்க நமக்கு வாழ்க்கைத் துணையா
வந்தா நல்லாயிருக்கும்னு நம்ம மனசுக்கு தோணும்..
ஆனா அவங்களுக்கும் தோணனுமே?..

"என் காதலை உங்கிட்ட சொல்லிட்டேன்..
நல்ல பதிலா சொல்லுனு" நமக்கு பிடிச்சவங்க
இல்லனா நெருக்கமா இருக்குறவங்க கோரிக்கை
வைக்கும்போது மனசு பதைக்கும்..
படபடக்கும்..என்ன பண்றது?

அது மட்டுமில்ல..
"நீ முடியாதுனு சொன்னா அந்த வார்த்தைய
தாங்கிக்க எனக்கு இன்னொரு ஜென்மம் வேணும்"
அப்டின்னா என்ன புரியுது?
இன்னொரு ஜென்மம்னா இந்த ஜென்மத்துல
செத்தாதானே முடியும்..

என்ன சொல்றது?
காதல் மட்டுமே வாழ்க்கை இல்லைனு சொல்லிடலாமா?
ஆனா வாழ்க்கைனா காதலும் சேந்ததுதானே?
சரி அப்டினா?
"நினைவுகளோட வாழ்ந்திடு"னு
வாழ்த்தலாமா?
அதை சொல்ல நாம யாரு?

வியப்பின் உச்சம்

வியப்பின் உச்சம் ...

வியர்வையின் விலாசம் ...

விழிகள் விரியும் பரவசம் ...


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?