Monday 29 December, 2008

தெரியாதா?..

கண்ணிமையோரம்
கசியும் ஈரம்
காற்றுக்குத் தெரியாதா?

கனவுகள் தோறும்
காணும் உருவம்
நினைவுக்கு தெரியாதா?

துப்பாக்கி...

உன்
துப்பாக்கி ரவைகள்
சீறுவது...
ஆணவத்தின் வெளிப்படுத்த..

என்
துப்பாக்கி ரவைகள்
சீறுவது...
அமைதியை நிலைப்படுத்த..

காரியம் ஒன்றுதான்..
நோக்கம் வேறானது....
----------------------------

வேர்கள்...

எனது
வேர்களை
அசைத்து
பிடுங்கிவிடயெண்ணி...
கிளைப்பூக்களை
உதிர்க்கிறாய்...

புரிந்து கொள் எதிரியே..
பூக்கள் உதிர்க்கும்
ஒவ்வொரு
விதையும்...
பற்பல வேர்களைச்
சுமந்தே
விழுகின்றன ...
இம்மண்ணில்...

------------------------

ஒற்றைப்புள்ளி

ஏதேதோ
புத்தகங்களையும்
எத்தனையோ
பக்கங்களையும்
புரட்டினாய்...
என்னை
ஓரத்தில்
உட்கார வைத்து விட்டு....
-----------------------------
உனக்கான
இரண்டுகோடுகளின் மீது
ஒற்றைப் புள்ளியையும்
உனக்கான
ஒற்றைப் புள்ளியின் மீது
இரண்டுகோடுகளையும்
வரைகிறேன்...
ஒரு பாதி
பாம்பாகவும்..
மறு பாதி
மீனாகவும்...
மாறுகிறது..

தேவாவுடன்....


தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் 'இவள்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணத்தின் பதிவு...

தூங்கு...

தூங்கிய
என்னை எழுப்பி
'நன்றாய் தூங்கு'
என சொல்லிய பிறகுதான்..
தொலைந்து போனது
என்
தூக்கம்..
------------------------------
எண்ணும்மையாக
'ம்' மறைத்து
பேசுகிறாய்...
உம்மைத் தொகையாக
எப்போது பேசுவாய்...?
---------------------------

உதிர் சொற்கள்



நீ
உதிர்த்த
சொற்களை
முதலில் கோர்த்துப்
பார்த்துத் தோற்றுப் போனேன்...
மீண்டும் மீண்டும்
முயற்சித்ததில்
சில சொற்கள் விடுபட
மற்றதெல்லாம்
கோர்த்து
நீர் தெளித்து
மூடி வைத்து
மறுநாள் பிரித்தேன்...
ஒவ்வொன்றும்
இரட்டை வாக்கியங்களை
பிரசவித்தது...
உன்
சொற்கள் வீரிய விதைகள்..
என்
மனம் தாங்கும் நிலம்..

இதமான...

உன்

இதமான பார்வையிலே

என் இமைகள் நிறைத்தாய்...

உன்

பதமான வார்த்தையிலே

என்

இரவுகள் கரைத்தாய்...

உன்

ஓவியக் கைகளால்

சில கவிதைகள் பரப்பினாய்...

உன்

விதவிதமான கையெழுத்தை

அவ்வெள்ளைதாளில் நிரப்பினாய்...
--------------------------


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?