Monday 29 December, 2008

ஒற்றைப்புள்ளி

ஏதேதோ
புத்தகங்களையும்
எத்தனையோ
பக்கங்களையும்
புரட்டினாய்...
என்னை
ஓரத்தில்
உட்கார வைத்து விட்டு....
-----------------------------
உனக்கான
இரண்டுகோடுகளின் மீது
ஒற்றைப் புள்ளியையும்
உனக்கான
ஒற்றைப் புள்ளியின் மீது
இரண்டுகோடுகளையும்
வரைகிறேன்...
ஒரு பாதி
பாம்பாகவும்..
மறு பாதி
மீனாகவும்...
மாறுகிறது..

No comments:


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?