ஒப்பனைக்கு
ஒப்புக் கொடுக்க
ஒருபோதுமெனக்கு சம்மதமில்லை...
ஒப்பிட்டு
உயர்வு தாழ்வு பேச
உள்ளத்தில் அனுமதியில்லை...
தேடலில்
தொலைந்து போகுமென்னை
தேடலே மீட்டெடுக்கும்..
ஏதுமற்ற
ஏளனங்களை
ஏறிட்டும் பார்ப்பதில்லை..
ஒன்றுமற்ற
உரையாடல்களை
ஒருகணமும் விரும்புவதில்லை..
செதுக்கி
மேம்படுத்த உதவாதவை..
உண்மையான விமர்சனங்களில்லை..
ஒதுக்கப்படும் ஒன்றே
ஒத்துக் கொள்ளப்படும்
இதற்கு காலம் பதில் சொல்லும்..
முளைவிடும் போதே
இலை கிள்ளும் விரல்கள்
நீருற்ற போவதில்லை...
வேர்களின் வளர்ச்சிக்கு...
களையெடு உள்ளே...
முளைவிடு வெளியே...
தலைஎடுப்பாய் தரணிபோற்ற.....
Monday, 2 March 2009
நண்பனே .... அந்த நாள் நண்பனே..
எனது ஒருநாளில்
சில பல நிமிடங்களை ...
பூக்கச் செய்தவன்...
ஒவ்வொரு நொடியையும்..
முடமாக்கி போய்விட்டான்..
புகையை கூட என்
தூக்கி எறிந்தவன்..
என் புன்னகையையும்
மென்று தின்றுவிட்டான்..
என் கண்கள் கலங்கினாலே
ஆயிரம் காரணங்கள் கேட்கிறவன்...
தாரை தாரையாய் வழியும்
கண்ணீருக்குள் நீச்சலடிக்கிறான்..
நிலவொளியில் என்
நிழலையும் கவனித்தவன்...
இன்றெனது நினைவின்
நிழலுக்குள் கூட ஒதுங்க மறுக்கிறான்...
எது நடந்தாலும்..
நண்பனே..
நீ நண்பன்தான்..எனக்கு..
சில பல நிமிடங்களை ...
பூக்கச் செய்தவன்...
ஒவ்வொரு நொடியையும்..
முடமாக்கி போய்விட்டான்..
புகையை கூட என்
தூக்கி எறிந்தவன்..
என் புன்னகையையும்
மென்று தின்றுவிட்டான்..
என் கண்கள் கலங்கினாலே
ஆயிரம் காரணங்கள் கேட்கிறவன்...
தாரை தாரையாய் வழியும்
கண்ணீருக்குள் நீச்சலடிக்கிறான்..
நிலவொளியில் என்
நிழலையும் கவனித்தவன்...
இன்றெனது நினைவின்
நிழலுக்குள் கூட ஒதுங்க மறுக்கிறான்...
எது நடந்தாலும்..
நண்பனே..
நீ நண்பன்தான்..எனக்கு..
Subscribe to:
Posts (Atom)
இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..
அமைதி,அழகு,தனிமை