Tuesday, 16 September 2008

அது ஒரு மழைக்காலம்

அது ஒரு மழைக்காலம்
அவளோடு சைக்கிளில்
வீடு வீடாக கணக்கெடுக்க
பயணப்பட்டு பகிர்ந்து கொண்ட
விஷயங்கள் பலப்பல ...

தூறல் ஆரம்பித்த போதில்
சைக்கிளை வேகமாக
அழுத்திய அந்த கணங்களில்
மழை பிடித்து கொண்டது...

சொட்ட சொட்ட மழையை ரசித்தது
அதுவே முதன்முறை..
கடைசி முறையாகவும் அமையும் என்று
அப்போது நினைக்கவில்லை ...

என் திருமணத்திற்கு பிறகு
இரவொன்றில் பிடித்த மழை
விடாது சிணுங்கி ...
ஓட்டைப் பிரித்து உள்ளே
எட்டி பார்க்க ஆரம்பித்தது..
-----------தொடரும்

நட்பே

நட்பு என்பது உப்பு போன்றது ..

அதிகமானாலும் குறைந்தாலும்

சுவை போய்விடும்..

அதுவே பிரிவிற்கு காரணமாகி விடும் ...

கிட்ட உறவு முட்ட பகை

உன்னால் புரிந்தது ....

பழமொழியை கூட கற்றுக்

கொள்ள ஒரு நண்பனை

இழக்க வேண்டி இருப்பதுதான்

வேதனை..


இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?