Wednesday 27 August, 2008

தோள் கொடு

என் ரணங்கள்
என் குணங்கள்

என் நிபந்தனை
என் சிந்தனை

என் வேகம்
என் தாகம்

என் வழி
என் வலி

என் முனைப்பு
என் நினைப்பு

என் சொற்கள்
என் அமைதி

என் முகவரி
என் எழுத்து

யாவும் அறிந்தவன்
நீ
மறுக்கவில்லை...

என் ஆசை ஒன்றை
சொல்கிறேன்..
செய்வாயா?

உன் தோளில் சாய்ந்தபடி
இந்த உலகம் அறிய வேண்டும்..

உன் தோள் சாயும் போது
என் கண்ணீர் உதிர வேண்டும்..

உன் தோள் போதும்
என் துயரம் துடைத்தெறிய..
என் உயரம் எட்ட..

உன்னால் மட்டுமே

உன்னால் மட்டுமே புரியக்கூடிய
சில தேவைகள்..

உன்னால் மட்டும் ஆற்றக்கூடிய
சில காயங்கள்..

உன்னால் மட்டுமே உணரக்கூடிய
சில எல்லைகள்...

எதுவும் எனக்கு உற்சாகம் தான்..
ஏனெனில்
நண்பா
உனக்கு மட்டுமே தெரியும்
எனக்கான வலிகள்..

நீ மட்டுமே அறிவாய்
என்னையும்...
என் உலகையும்...

காத்திருப்பு

உனக்காக நானும்
எனக்காக நீயும்
காத்திருந்த பொழுதுகள்
சுகமானவை ...

மழைநாளில் உன்னொடு
நனைந்த நினைவுகள்
இதமானவை...

ஒரு மத்திய நேரத்தில்
பேசப்பட்ட அந்த வார்த்தைகள்
மிதமானவை ...

உன்னாலும் என்னாலும்
சந்திக்க முடியாத நொடிகள்
வலியானவை ....

விமர்சனம்

என்னைக் காயப்படுத்துவதாய்
எண்ணி உன்னால் உதிர்க்கப்பட்ட
விமர்சனங்கள் எல்லாம்
என்னை சோர்வடைய செய்ய வில்லை
நட்பே
உற்சாகப் படுத்தி இருக்கிறது
என் தவறுகள் கவனிக்கப்படுகிறது
என்பதே என் வளர்ச்சியின் அறிகுறிதானே .......

நட்பு

என் வார்த்தைகளுக்கே
விளக்கம் கேட்கும்
பலருக்கு மத்தியில்
என் மௌனத்தையும் மொழிபெயர்க்க
உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது
தோழா

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?