Wednesday 1 October, 2008

தனிமை

அந்த ரயில் நிலையத்தில்
என்னைத் தவிர யாருமில்லையென
சொல்ல முடியாது...

நடுநிசியில்
பொது இடத்தில்
தனியே இரவைக் கழிக்கும்
வெறுமை யாருக்கும் வாய்க்கக் கூடாது...

எங்கேயோ இருந்து கேட்கும்
நாய்களின் ஓலமும்...
அனைத்துப் போட்ட
சிகரெட் துண்டுகளாய்
சிதறிக் கிடக்கும் மனித உருவங்களும்...

நன்றாகத் திருகி மூடியும்
சொட்டுச் சொட்டாய் ஒழுகும்
நீர்க்குழாயும்..
மின்னொளிகளும்..

ஆங்காங்கே
நடமாடுகிற அறிமுகமற்ற ஆட்களும்
ஊசிமுனை கொசுக்களும்
துர்நாற்றம் வீசுகிற கழிவறைகளும்
போக்கி விடவில்லை
என் தனிமையை..

பேட்டரியில் சார்ஜ் இல்லாத
அலைபேசியும்...
காகிதம் ஏதுமில்லாத நேரத்தில்
அழகாய் எழுதும் பேனாவும் கூட..

கைப்பையின்
கடைசித் திறப்பில்
கைவிட்டு எடுத்தேன் ...
என் தனிமையை நீக்குகிற
அந்த புத்தகத்தை...

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?