Monday 13 September, 2010

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்


உங்க சின்ன வயசுல சினிமாவுக்கான ஆர்வம் இருந்ததா?
சின்ன வயசுல சினிமா பாக்குற ஆர்வம் இருந்தது. நிறைய படங்கள் அம்மாவோட போய் பார்ப்பேன். அப்ப சினிமாங்றது வேற உலகம். கடவுள் மாதிரி இருந்தது. இவங்களுக்கெல்லாம் பசிக்குமா? அந்த மாதிரி ஒரு பயங்கரமான பிரமிப்பு இருந்துச்சு. அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இந்த துறையில நுழைஞ்சா எப்டி இருக்கும்ங்ற ஆர்வம் வந்தது. நான் ஏழாவது, எட்டாவது படிக்கும் போது எனக்கு கதை எழுத முடியும்னு நினைச்சேன். அந்த நேரத்துல அம்புலிமாமா மாதிரி கதைதான் எழுதுவேன். அத எங்கேயும் அனுப்பியது கிடையாது. அப்டி தோணவும் இல்ல. அம்புலி மாமா, பாலமித்ராக்கு ரெகுலரா ரைட்டர்ஸ் இருப்பாங்க. யார் அதுக்கு முதலாளியோ அவங்களே அந்த கதைலாம் எழுதுவாங்கன்னு நினைச்சுட்டிருந்தேன். பின்னால அது ரைட்டர்ஸ் எழுதுவாங்கன்னு தெரியும் போது அந்த வேலைக்குப் போகனும்னு ஆசைப்பட்டேன். அத விட பிரம்மாண்டமான ஒரு உலகம் சினிமா உலகம்னு தெரிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா இதுக்கு வந்துட்டேன்.

சினிமாவுல எப்படி நுழைஞ்சீங்க?
நான் ரைட்டர் கலைமணி சார்கிட்ட டயலாக் அஸிஸ்டென்ட்டா இருந்தேன். அவரோட கொஞ்ச நாள் வேலை பாத்தேன். அப்புறம் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாகிட்ட குஷி படத்துல கொஞ்சம், பிரவின் காந்த் கிட்டயும் வேலை பாத்தேன். தவசி படம் பண்ண உதயசங்கர் இப்டி எல்லார்கிட்டயும் கொஞ்ச கொஞ்ச நாள் வேலை பண்ணேன். ஆனா யாருகிட்டயும் முழுசா வேலை செய்யல. அதுல இருந்து கத்துக்கிட்டேன்.
நீங்க முதல் படம் 2001ல தீனா கொடுத்தீங்க. ரவுடியிசம் சார்ந்த படம். திட்டமிட்டுதான் அந்த ப்டம் எடுத்தீங்களா?
திட்டமிட்டுதான் எடுத்தேன். ஆனா அந்த திட்டம் வேற மாதிரி இருந்தது. அந்த நேரங்கள்ல தொடர்ந்து பொயட்டிக்கான படங்கள்தான் வந்துட்டு இருந்தது. ஒரு ஹிடார், வண்ணத்துப் பூச்சி, பாட்டு, லவ், பூ இந்த மாதிரியே சினிமா போயிட்டிருந்தது. அதுல இருந்து சடார்னு மக்கள திருப்பி வேற மாதிரி காட்டணும்ங்றதுக்காக ஒரு கவன ஈர்ப்புக்காக பண்ணேன்.

தீனா & அடிதடி, ரமணா & தேசப்பற்று, கஜினி & கமர்ஷியல் அப்டினு ஒண்ணுக்கொண்ணு ஒற்றுமை இல்லாம மூணு படமுமே வித்தியாசமா பண்ணிருக்கீங்களே.
ஆமா. ஒரு ரெகுலரான லைஃப் வாழக்கூடாதுனுதான் சினிமாவுக்கு வந்தேன். இல்லைனா அப்பா மாதிரி மளிகைக்கடை திறந்து, இல்ல மாசம் ஒண்ணாம் தேதியானா சம்பளம் வாங்கிட்டு வேலை பாக்குறதோ, ஒரு ஆஃபிஸ்ல வொர்க் பண்றதோ வேண்டாம்னு நினைச்சுதான் சினிமா பண்றோம். அதுலயும் ஒரே மாதிரி வொர்க் பண்ணா திரும்ப அது போரடிக்கும். ஒரே மாதிரி வேலை செய்யும் போது ஒரே ஊர்ல இருக்குற ஃபீல்தான் கிடைக்கும். அதுக்காகத்தான் அந்த மாதிரி வச்சுக்கிட்டது.

ரமணாவுல விஜயகாந்த சார் கூட வொர்க் பண்ண அனுபவம் பத்தி?
அவரைப் பொறுத்த வரைகும் அவரு எதுலயும் இன்வால்வ் ஆகல. அப்டி இன்வால்வ் ஆனா அது இதுனு இன்டர்ஃபியர் ஆவாங்க. முதல் தடவை மூணு மணி நேரம் கதை சொன்னேன். படம் எந்தளவுக்கு ஓடுமோ, அந்தளவுக்கு கதை சொன்னேன். கதைய முழுசா கேட்டுட்டு ‘எதுவும் இதுல சேஞ்ச் பண்ண வேணாம்’னு ஷூட்டிங் போய்ட்டாரு. எந்த விதமான தலையீடும் இல்லாம சுதந்திரமா இயக்குனேன்.

2005ல வந்த கஜினி ரொம்ப லேட் இல்லையா?
ஒரு படம் முடிச்சுட்டு ‘மிரட்டல்’னு ஒரு ஸ்கிரிப்ட் நடிகர் விக்ரமுக்கு ரெடி பண்ணது. விக்ரமுக்கு புடிக்கலைனு சொல்லிட்டாரு. பிடிக்க்லைனு சொன்னவுடனே எனக்கு என்ன பண்றதுனே தெரியல. மைன்ட் அளவுல நான் அந்த கதைய செட் பண்ண பிறகு வேற ஹீரோக்கிட்ட போனாலும் அவங்களும் பிடிக்கலைனு சொல்லிட்டாங்க. ஒரு ஹீரோ பிடிக்கலைனு சொன்னவுடனே அதே மாதிரியே குருட்டுத்தனமா எல்லாரும் பிடிக்கலைனு சொல்லிட்டாங்க. எல்லாரும் பிடிக்கலைனு சொன்னதும் எனக்கும் பிடிக்காம போச்சு. 4 தடவை நல்லா இல்லைனு சொன்னதும் நான் கொஞ்சம் சேஞ்ச் பண்ணி அஜித்த வச்சு கஜினினு பண்ண ஆரம்பிக்க நினைச்சேன். அவரு நான் கடவுள் பண்ணிட்டு, பண்றேன்னு சொன்னாரு. என்னோட படத்துக்கு மொட்டை போடணும். நான் கடவுளுக்கு முடி வளர்க்கணும். ஒண்ணுக்கொண்ணு ஒத்து வரல. அந்த படம் முடிச்சு முடி வளத்து மொட்டை அடிக்கிறதுக்கு சரி வராதுன்னு சொல்லிட்டு சூர்யாகிட்ட போக வேண்டியதாயிடுச்சு. அதான் காலதாமதமாயிடுச்சு.

ஹிந்தியில கஜினிய கொண்டு போக எப்டி யோசிச்சீங்க.?
ஒளிப்பதிவாளர் ஜீவாகிட்டதான் முதல்ல இந்த கதைய சொன்னேன். அவர் இது ஹிந்திக்கு நல்லா இருக்கும்னு சொன்னாரு. அதுக்கப்புறம் அவர் பண்ண முடியாம போனாலும் அவர் சொன்னபடி ஹிந்தி வாய்ப்பு இருக்காது. இன்னைக்கு ஒரு உலக அளவுல கஜினி பாராட்டப்பட்டிருக்குன்னா அது ஜீவா சார் சொன்ன வார்த்தைதான்னு நம்புறேன்.

கஜினி ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் பத்தி சொல்லுங்க.
நான் அவரோட தீவிர ரசிகன். அவர் ஒளிப்பதிவுல ஒரு படமாவது டைரக்ட் பண்ணணும்ங்றது என்னோட ஒரு ஆசை. அப்டி ஒரு வாய்ப்பு அமையுமானு நினைச்சேன். அவர் ஹிந்தியில பண்றாரு. நான் தமிழ்ல பண்றேன். எப்பவாவது ஒரு நாள் உங்களுக்குப் போரடிச்சா தமிழ்ல படம் பண்ணலாம்னு தோணுச்சுனா என் படம் பண்ணுங்க சார்னு சொல்லி வச்சிருந்தேன். அதுக்கு தகுந்த மாதிரி நான் ஹிந்தி படம் பண்ண வாய்ப்பு கிடைச்சது. ஹீரோ அமீர்கான். அவரோட விஷுவலா ஸ்கோர் பண்றதுக்கு நிறையெ ஸ்பேஸ் இருக்குனு அவரும் ஒத்துக்கிட்டாரு.

உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?
எனக்கு ஹிந்தி தெரியுது. ஆனா புரிஞ்சுக்குவேன். பேச தான் கத்துக்கல. எனக்கு ஹிந்திதான் தெரியாதேயொழிய டைரக்ஷன் தெரியுமே.

உங்களுடைய அடுத்த படம் எப்படி இருக்கும்?
அடுத்த கதை ரொமாண்டிக் ப்ளஸ் காமெடி பண்ணலாம்னு இருக்கேன்.

ஒரு வெற்றி கிடைச்ச பிறகு அடுத்த ஒரு முயற்சி தாமதாகும். அந்த வெற்றிய ரசிக்கணும் அல்லது சுவைக்கணும்னு சொல்வாங்க. நீங்க எப்படி?
இல்ல. எனக்கு ரிலாக்ஸ் பண்றது பிடிக்காது. ரிலீஷுக்கு ஒரு வாரத்துக்கு முன்னால எப்படி இருக்கேனோ அப்டிதான் ரிலீஷுக்கு அப்புறமும் இருப்பேன். இதுவரை 5 படங்கள் பண்ணியிருக்கேன். எல்லாமே ஹிட்தான். இருந்தாலும் கூட எனக்கு ரிலாக்ஸ் பண்ற பழக்கம் கிடையாது. ஒரு படம் ஹிட்டுனு சொன்னதும் அடுத்த நாளும் இப்டி இருக்கணும். யாரும் தப்பு சொல்லிடக் கூடாது. சண்டே நல்லா ஓடுனா மண்டேவும் இப்டி இருக்கணுமேனு ஒரு எண்ணம் இருக்கும். ட்யூஸ்டேல 50 டிக்கெட் ப்ரேக்னு சொன்னதும் அடுத்த நாளும் இப்டி இருக்கணும்ணு தோணும். மார்னிங் ஷோ ஒரு இடத்துல ஃபுல்லாகும். வேற இடத்துல நைட் ஷோ ப்ரேக் ஆகும். இப்டி போய்ட்டே இருக்கும். அதுக்குள்ள ப்டம் சூப்பர் ஹிட்டுனு சொல்வாங்க. திரும்பிப் பாத்தா ஒன்றரை மாசம் ஆகியிருக்கும். அப்புறம் அடுத்த படம் பண்ணனுமேனு டென்ஷன் வந்துடும். எப்பவும் டென்ஷன்தான்.

ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலையை மாற்றிச் செல்வதுதான் ஓய்வு அப்டினு சொல்வாங்க. நீங்க ஓய்வு நேரத்துல என்ன செய்வீங்க?
புத்தகம் படிப்பேன், படங்கள் பார்ப்பேன். மக்களத் தொடர்பு கொள்வேன். எப்பவாவதுதான் வெளியே போவேன்.

திருச்சியில படிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்களேன்.
திருச்சி பிஷப் ஹீபர்ல படிச்சேன். நான் நல்ல வளர்ச்சி அடைஞ்சதுக்குக் காரணம் திருச்சினு சொல்லலாம். எனக்கு மறக்க முடியாத ஊர். நான் இருந்தது 3 வருஷம்தான். திருச்சிக்குள்ள நுழைஞ்சாலே காதலிய பாக்குற அனுபவம் மாதிரியே இருக்கும். அப்ப கோ&எஜுகேஷன் கிடையாது. ஆனா திருச்சியில இருக்குற எல்லா காலேஜ் கல்சுரல்ஸ்லயும் கல்ந்துருக்கேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துல கல்சுரல்ஸ் மெம்பரா இருந்தேன். என்.சி.சிலயும் இருந்தேன். நிறைய பேர் என்னைய மறந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். எல்லா இடத்துலயும் நண்பர்கள், ஹாஸ்டல் எல்லாமே மறக்க முடியாத அனுபவம். தமிழ் பேராசிரியர் ஐயா பூரணச் சந்திரன் ரிடையர்மென்ட்க்கு முன்னாடி ஒரு காலேஜ் டே ஃப்ங்கஷனுக்கு நான் வரணும்னு ஆசைப்பட்டாங்க. எல்லா வேலையையும் தூக்கிப் போட்டுட்டு வந்தேன். அவரை கௌரவ படுத்த வேண்டியது என் கடமைனு நினைச்சேன்.
----------to be continued

இவளின் உலகத்திற்குள்
வந்திருக்கும் உங்களுக்கு
நன்றியும்..வாழ்த்தும்..


அமைதி,அழகு,தனிமை

உங்களின் விருப்பம் எது?