இந்த முறை
எனது துயரங்களை
எழுதி விடப் போவதில்லை...
ஏனெனில்
அவை வலிமையிழந்துவிடக்கூடும்
புதைத்து வைக்கவும் விருப்பமில்லை..
என் பார்வையிலேயே உலா வரட்டும்..
அப்போதுதான்
எனக்குள் எரியும் பொறி
பெருநெருப்பாகும்..
அந்த நெருப்பு
அந்த பொய்யான
ஒரு சார் விந்தில் துளிர்க்காத அவனை
சுட்டெரிக்கும்
சாம்பலாகும்வரை....
No comments:
Post a Comment